நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புத்தாண்டே வா வா
















பூத்துக்குலுங்கும்
மலராய்
பிறக்கும்
புத்தாண்டே!!

புத்தம் புதிதாய்
புவிமீது விழும்
நிழலாய்

கரும்புச் சாராய்
கற்க்கண்டு
துகளாய்

மண்ணின் மணமாய்
மாசற்ற
மனமாய்

தேனின் ருசியாய்
தென்றலில்
இசையாய்

மழலையின் சிரிப்பாய்
மனங்களின்
பூரிப்பாய்

வேறுபாடுகளை கழைந்து
வெவ்வேறு
இனமென்பதை மறந்து

மனிதமென்னும்
புனிதமாய்
மனிதர்களென்னும்
எங்களை
மனமொத்து மகிழ்வாய்

வளமான வாழ்வை
வாழ்வதற்கு வழிசெய்ய
வல்ல இறைவனிடம்
வேண்டி வா

வரவேற்கிறோம்
புத்தாண்டே
வசந்தமாய் வா வா...




Bengali New Year-Poila Glitters- Click to get more



 
 
 
 
 
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

 

அரையடி நாக்கு


அரையடி
ஆறடியை
வீழ்த்துகிறது

எலும்புகள்
இல்லையென்று
எதை
வேண்டுமென்றாலும்
பேசுகிறது

தன் நாவால்
பிறருக்குத் தரும்
துன்பங்கள்
தனக்கே புரிந்தும்

தடம் புரள்கிறது
பிறரை
தடுமாறவைக்கிறது

நாவிலிருந்து
நழுவி விழும்
சொல்லில்
நேர்மை தவறுகிறது

நாளொரு பேச்சி
நிமிடத்திற்கொரு
வார்த்தை –என
நன்மதிப்பை
இழந்து விடுகிறது

அரையடி நாவின்
பொய்களை நம்பி
அநியாயமாய் பலரை
அழியவைக்கிறது

நாவைக்கொண்டு
நம்பிக்கை துரோகம்
நாளும் செய்து
நன்மையை இழக்கிறது

அரையடி நாக்கே
அன்பாயிருக்க அழகாய்
பழகிக்கொள்
அனைவரின் மனதிலும்
ஆட்சி செய்திட
விழிப்பாய் இருந்துகொள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு பாராட்டு

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு



துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை அல் கூஸ் பகுதியில் உள்ள சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.

இசையும் பாடலும் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியினை காவிரிமைந்தன், அபுதாபி பழனி உள்ளிட்டோர் நடத்தினர். கவிதை நிகழ்வில் முகவை முகில், அத்தாவுல்லா, நர்கிஸ், ஜியா, கலையன்பன், ஒகளூர் நிலவன், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், முத்துப்பேட்டை சர்புதீன், ஜெயா பழனி உள்ளிட்ட கவிஞர்களுடன் அனீஷா என்ற 7 வயது சிறுமியும் கவிதை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து இசையும் பாடலும் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.

மேலும் மிகக் குறுகிய காலத்தில் நூறு கவிதைகளுக்கும் மேல் எழுதிய முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு நினைவுப் பரிசினை பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக இலங்கை அமைப்பாளர் கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.

அவர் தனது உரையில் யாப்பிலணக்கனத்தை முறையாகக் கற்றவர்களுக்குக் கூட கவிதை எழுத வருவதில்லை. ஆனால் ஆரம்பப் படிப்பே படித்த கவிஞர் மலிக்கா சிறப்பான முறையில் கவிதை எழுதி வருவதனை பாராட்டுவதாக தெரிவித்தார். அவர் கவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.

கவிஞர் மலிக்கா தனது இத்தகைய சிறப்புக்கு காரணம் தனது கணவரின் ஊக்கப்படுத்துவதன் காரணமே எனக் குறிப்புட்டு கணவருடன் நினைவுப்பரிசினை பெற்றுச் சென்றார்.

நிகழ்வில் கவிதை ஆர்வர்லர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நியூஸ் – Muduvai Hidayath..

இது முத்துப்பேட்டை ஓ ஆர் ஜி, யில் வெளியிடப்பட தொகுப்பு...

எனக்கு கிடைந்த இந்த விருது உங்கள் அனைவராலும் கிடைத்தது
இது உங்களுக்கும் சொந்தமானது


அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும். தோழமைகளுக்கும்.

அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சந்தோசப்படவைத்ததைவிட என்னை கண்ணீர்விட வைத்தது என்பதே உண்மை.


இதை  ஏற்பாடுசெய்திருந்த முகம் தெரியாத நல்லுள்ளங்கள் [உங்களைனவரைப்போன்று] -தந்தை திரு ஷேக் சிந்தா மதார்.சகோதரர் திரு கமால் ஆகியவர்களை நான் இதுவரை நேரில் கண்டதில்லை. சகோதரர் திரு திருச்சி சையது. அவர்களை இரண்டொருமுறை தமிழ்தேர் சிறப்பு விழாக்களில் பார்த்திருக்கிறேன்.மற்றும்
வானலை வளர்தமிழ் தமிழ்தேரும் .இணைந்து

என் எழுத்துக்களுக்கும் ஓர் அங்கிகாரம் தரும் விதமாக
சிவ்ஸ்டார் பவனில்
வானலை வளர்தமிழான தமிழ்தேர் இசையும் பாடலும் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்
பொருமைகாத்து அனைத்தையும் கேட்டு நிகழ்ச்சியின் இறுதியில்

கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம்.தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்
கைகளால் இப்பரிசினைப்பெற்றது மிகுந்த நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

[என்றபோதும் மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால் காலசூழ்நிலை நேரம் போதாமையும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததாலும் என்னால் பேசதிணருவதுபோல் இருந்ததாலும் யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது ]

இதற்காக நான் அன்று நடத்தித்தந்த அத்தனை உள்ளங்களுக்கும்
எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

அத்தோடு தமிழ்குடும்பம் வெப்சைட்டின் தலைவர் தமிழ்நேசன் அவர்களுக்கும். அதன்மூலம் என்னையழைத்து வானலை வளர்தமிழான தமிழ்தேரை எனக்கு அறிமுகம் செய்த சிம்மபாரதிக்கும்.நான் எழுதிப்படித்த கவிதைகளுக்கு எனக்கு கைதட்டி ஊக்கமூட்டிய தமிழ்தேர் அங்கத்தினர்கள் அனைவர்களுக்கும்.வானலை வளர்தமிழான தமிழ்தேரை வழிநடத்த தன் பெரும்பங்கை ஏற்றிருக்கும் சிவ்ஸ்டார் பவன் ஓனர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும்.

என்முகம் காணாமல், நான் இதுவரை கண்டிராமல் எனக்கு இந்த நல்வாய்ப்பை தந்த அந்த தூய உள்ளங்களுக்கும்.

என்கவிதைகளை படித்துவிட்டு எனக்கும் கவிதை எழுதவரும் என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு தன் கவிக்கரங்களால் பரிசை வழங்கிய தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கும்.

 அதற்கு மேலாக நான் எழுதும் அத்தனை கிறுக்கல்களையும் ஒன்றுவிடாமல் படித்து இது நல்லது இது கெட்டது, இதில் பிழைகளிருக்கு என ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டி எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து என்னை இந்த அளவிற்க்கு கொண்டுவந்து சேர்த்த

என் வலைப்பூ அன்புச் சகோதர சகோதரர்கள். என் அன்பு தோழமைகள். பெரியவர்கள். அனைவர்களுக்கும். இந்த செய்தியை

 http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3831&Country_name=Gulf&cat=new‏
 தினமலர் நாழிதல். மற்றும்

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=838  முதுகுளத்தூர் .காம்


http://kadayanallur.org/?p=2842 கடையநல்லூர் .காம்

http://muthupet.org/?p=1495  முத்துப்பேட்டை.ஓ ஆர் ஜி.

ஆகியவற்றில் வெளிவரக்காரணமாக இருந்த சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கும்.

என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றியென்ற ஒன்றைமட்டும்
சொல்லிவிட்டு போகாமல் என்னால் நம் தமிழுக்கு என்ன செய்யமுடியுமோ அதை என்தமிழ் எழுத்துக்களின் மூலம் இவ்வுலகிற்கு தர எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக!

எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்.

என்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....


[இதைப்பற்றி நிறைய எழுதனும் என்றிருந்தேன் 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை.]



என்றென்றும்
உங்கள் அன்புக்காக
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இசையும் பாடலும்…..



உன் பார்வை
உன் வார்த்தை

உன் ஸ்பரிசம்
உன் சில்மிஷம்

உன் புன்னகை
உன் கோபம்

உன் மென்மை
உன் மெளனம்

உன் ஊடல்
உன் கூடல்

உன் பேச்சு
உன் மூச்சு

எல்லாமே

இசைபோல் வருடுவதால்
இணைத்துக்கொண்டேன்

உன்னுள் என்னை
வட்டாரப் பாடலாய்...


[தமிழ்தேர் இதழின்   இம்மாத தலைப்பான இசையும் பாடலும் என்ற தலைப்பிற்காக எழுதி வெளியான கவிதை]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இறையச்சம் எங்கே?



குடித்து குடித்து கெடுகிறாய் உன்
குடலை வேகவைத்து கொல்கிறாய்
குடும்ப நிம்மதியையும் சேர்த்து
குழைத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வசதியிருந்தும் வாய்பிருந்து
வசதியற்ற ஏழையிடம் வட்டிக்குமேல்
வட்டிவாங்கிப் பிழைக்கிறாய் -அவர்களின்
வயிற்றெருச்சலை வாங்கிக்குவித்து தன்
வாழ்கையையே  கெடுத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வறுமைகளை போக்கிவிட எத்தனையோ
வழிகளிருந்தும் வழி தவறிப் போகிறாய்
வியாதி தரும் வெறுப்பு தரும்
விபச்சாரத்தையே தொழிலாக்கிக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அளவு நிறுவைகளில் குறைக்கிறாய்
அநியாயம் செய்து பிழைக்கிறாய்
அடுத்தவரின் பொருளுக்காக
ஆசைப்படும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அனாதைகளின் சொத்துக்களை
அபகரித்துக் கொள்கிறாய்
அத்துமீறும் செயலைக்கூட
அலச்சியமாய் செய்யத்துடிக்கும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

ஆடைகளை குறைத்து குறைத்து
அங்கங்களை அழகுக்காட்டி
அடுத்தவரையும் பாவத்துக்கு
அழைத்து தூண்டும் மனிதனே

இறையச்சம் எங்கே
 உனது
இறையச்சம் எங்கே

மனத்துக்கும் பிடிக்காமல்
மகிழ்சியையும் கொடுக்காமல்
மற்றவருக்காக வாழ்ந்துகொண்டு
மனசாட்சிக்கு துரோகம் செய்யும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

உதிரம் கொடுத்து உழைப்பும் கொடுத்து
உயிராய் வளர்த்த பெற்றோரை
உன்னால் பேணிக்காக்க முடியாமல்
உதறிவிட்டு முதியோரில்லம் சேர்த்துவிடும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

நலவு செய்தால் நன்மையுண்டு
நாளை நமக்கும் வாழ்வு உண்டு
நல்லது கெட்டது அறிந்து கொண்டு
நலமாய் வாழ முயல்வோம் என்றும்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பதிவர்கள் கூடி கலக்கல் ஆர்ப்பாட்டம்
அண்ணாச்சி அழைக்கிறார் பதிவர்கள் எல்லாம் ஒன்றுகூடி படம் காட்டப்போகிறோம் என்ற ட்ரைலரைப்பார்த்து நாமளும் போகலாமுன்னு
முன்பதிவு செய்ததோடு வெள்ளியன்று கிளம்பும் நேரத்தில் ஞாபகம் வரவே உடனே போன்செய்தேன்

ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப

அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2..

சிம்மபாரதியின் போன் உங்க இடத்துக்கே வந்து சாப்பாடெல்லாம் போடுகிறோம் வந்துடுங்கப்பா என்றபோது இல்லை இங்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க சாப்பாட்டுக்குபின் வருகிறேன் எனக்காக எல்லாரும் சாப்பிடாம இருந்திடாதீங்கன்னு சொன்னேன் [ஆமா இவுக போறவறைக்கும்தாம் உக்காந்துகீன்னு இருக்கபோறாகலாக்கும் சரி சரி.] காலையில் சொல்லியதை நினைவில் கொண்டு புறப்பட தயாராகிவிட்டேன்

மதியம் மணி 2, 10 புறப்பட்டது எங்கள் வாகனம், இடையே போனில் சிம்மபாரதிடம் லொக்கேஷன் கேட்டா அவுக அண்ணாச்சிகிட்டே கொடுத்துட்டாக[ அவுக துபைகாரவுக] அண்ணாச்சி நலம் விசாரிச்சிட்டு நம்மகிட்ட லொகேஷன் சொல்லப்போனாக நமக்குத்தான்[ ஹி ஹி ஹி] ஒரு நிமிசம் மச்சான்கிட்டதரேன் சொல்லி போனை நாசூக்க கொடுத்துட்டோமுள்ள.

 என்னுடைய போன் அடித்தது எடுதால் நம்ம ஜலீலாக்கா. என்னப்பா நீங்க கிளம்பளையா/ இதோ கிளம்பிட்டேங்கா, நீங்கதான் வரமுடியல கவலைபடாதீங்க ஒன்னுவிடாம வந்து சொல்லிவிடுகிறேன் என்று சொன்னபோது நீங்க சொல்லும்போது என்காதில் புகை வந்திடனும் என்றார்கள் ஓகே என்று போனைவைத்து நிமிர்ந்தபோது,
அண்ணாச்சி சொன்ன இடத்து கரகீட்டா வந்துவிட்டு மீண்டும் போன் சிம்மபாரதிக்கு செய்துபோது அவங்க வந்து கூட்டிகிட்டு போனங்க

ஒரு சுத்து சுத்தி [அந்த புத்தம் புதிய பில்டிங்க அண்ணாச்சி அவங்க கூட்டுகாரகங்களும் சேர்ந்துதான் இரண்டுநாளைக்கு முன்னாடி திறந்துவைத்தாக கேள்வி] அந்த ஃபிளாட்டிற்கு போனால்!!!!!!!!!!!!! வாசல் கதவிலேயே அண்ணாச்சி மிரட்டுகிறார் ஸ்ஸ்ஸ்ஸ் அண்ணாச்சி அழைக்கிறார் என போஸ்டரில் [அண்ணாச்சி குனிந்த தலை நிமிராமல்] போட்டு நம்மை அழைத்தார்கள்.

வாசலில் நுழைந்ததும் பாட்டுச்சத்தம் தூள்கிளப்பியது
அங்கே வரவேற்ற அண்ணாச்சி மற்றும் ஜெஸிலா, அவரது கணவர். மற்றும் ஹுசைன்னம்மா நின்றிருந்தார்கள்.

எங்க அண்ணாவும்கூடவந்ததால் மச்சான் சொன்னார்கள் நீ இங்கு இரு நான் சாகுலைபோய்விட்டுட்டு வருகிறேன்னு [அவங்களை துபையில் விடனும் 3, மணிக்கு டூட்டி] என்றுசொல்லி இந்த பச்சபுள்ளயமட்டும் அந்தகூட்டதில் விட்டுவிட்டு போய்டாங்க.

அங்கே நின்றிருந்த தோரணையை வைத்து நீங்கதானே ஹுசைன்னம்மா என்றேன் பக்கத்தில் நின்றிருந்தவர் ஜெஸிலா. அவர்களை ஏற்கனவே பாக்கியராஜ் பட்டிமன்றத்தில் பேசியபோது பார்த்திருக்கிறேன்
அறிமுகப்படுத்திகொண்டோம். [பிரியாணி திண்புட்டு பாக்கு போட்டுகொண்டு நின்னாகபோல இருவரும்]

சரி சரி உள்ளேவாங்கப்பா படம் காட்டப்போறாங்கன்னாங்க [உள்ளே செல்ல சிறுதயக்கம்தான் ஏன்னா மெஜாரிட்டியா நாங்க இல்லையேன்னுதான்] ஒருவழியா உள்ளேபோனதும் நீங்க சாப்பிடலையா கீழை ராசாவின் [அவுங்களத்தான் அவுக புரொபைலில் பார்த்திருக்கோமுள்ள.]
மற்றும் அண்ணாச்சியின் [இவுங்கள போஸ்டரில்]அன்பான உபசரிப்பு. சாப்பிட்டுவிட்டு வந்துட்டோம் என சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தா

சுவற்றில் ஆங்காங்கே வீற்றிருந்த போஸ்டர்கள் அடிச்சு தூள் கிளப்பு என்பதைபோல் இருந்தது அங்கே கிடந்த சோபாக்களில் அத்தனை ஜென்டில்மேன்களும் அமர்ந்தால் அரட்டை அடிக்கமுடியாது என்பதால் மைனாரிட்டியான எங்களுக்கு மரியாதை பலமாகி ஷோபகளில் இடம் கிடைத்தது[ அண்ணாச்சி ஏற்கனவே இதுக்குதான் துண்டை போட்டுமுன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது]

நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள் ஆனால் எனக்குதான் யார் யாருன்னு பெயரோ ஊரோ தெரியலை எனக்கு அங்கு ஏற்கனவே தெரிந்தவங்கன்னு சிம்மபாரதியும். ஜியாவுதீன் அண்ணனும்தான், மற்றும் தமிழ்தேரில் உறுப்பினர்களும் இருந்தார்கள் [இதுக்குதான் ஆலினார்அம்புலிமாமாவிடம் நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது தெரிந்திருக்கும்]

நிஜமாய் தியேட்டருக்குள் போனதைபோன்ற ஒருபிரம்மிப்பு, புரெஜக்டர் வைத்து
படம் தொடங்கியதுமே பாரதியின் வீரமிகு வார்தைகள் மனதுக்கு இதத்தை தந்தது. அடுத்தடுத்து மொக்கயும் 75/ கொலைவெறியும் 25/ விதமும் அட்டகாசமாக. அருமையான இசையும் காமெடியும்

கலந்து வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.

என்ன அண்ணாச்சி இந்த டிரஸ் போனமுறை பதிவர்கூட்டதுக்கு போட்டதா? ஆமாம்பா அப்ப போட்டது இன்னும் கிளட்டவில்லை, ஆஸிப் மீரான் என்ற அண்ணாச்சி சொல்லியபோது எழுந்ததே சிரிப்பொலி..

இதுதான் அபூ அஃப்ஷர் என்று ஜெஸிலா சொன்னாங்க அட இது நம்ம ஊர்காரவுங்களாச்சேன்னு ஜெஸிலாவிடம் சொல்லி அதிரையான்னு கேட்க்கச்சொன்னேன். அவங்க கேட்டபோது ஆமாம் நான் அதிரைதான் என்றதும் என்னை தெரிகிறதா? என்றேன் மாலிக்கிடம் [அபு அப்ஷர் என்பது அவரது மகன்] உடனே ஜெஸிலா, இப்படி கண்ணைமட்டும் காட்டி என்னை தெரியுமான்னா எப்படிதெரியும் என்றார்களே பார்க்கனும். [ஏன்னா நான் பர்தாவில் ஃபுல் க்ளோஸிங்]பின்பு நான் நாந்தான் இன்னார்வீட்டு பிள்ளை என்றதும் புரிந்துகொண்டு புருவம் உயர்த்தினார் நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..

அப்புறம் என்பக்கத்து ஷோபாவில் பார்த்தால் கவிஞானி ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.சிறப்பு விருந்தினாராக அழைக்கப்பட்டுடிருந்தார்கள்.
பக்கத்தில் சென்று வாப்பா என்றழைத்தபோது. அம்மா நீயா முகம்முழுவதும்கவர் செய்திருந்ததால் நீயென்று தெரியவில்லைமா என்று சொல்லி பக்கத்தில் அமரச்சொன்னார்கள். சிறிதுநேரம் என் கவிதைகளைப்பற்றி உரையாடினார்கள்.எவ்வளவு பெரிய மனிதர்களையெல்லாம் நம்மோடு இணைத்தது நம் எழுத்துக்கள் என்று மனதுக்குள் மகிழ்ந்துகொண்டேன்.

பின்பு நான் ஹுசைன்னமா பக்கத்தில் வர எத்தனித்தபோது அம்மணிக்கு போன்வந்ததும் வெளியில் போனாங்க கூடவே நானும் ஒட்டிக்கொண்டு வெளியானேன்.

வாசலுக்கு முன்னால் உன்ன சிறிய கோரிடரில் மூன்று பெண்களும் பேசிகொண்டு நின்றோம். போன் நமபர்கள் பகிர்ந்துகொண்டோம் படம் முடிந்ததும் கனிசமான பேர் வெளியேறியதும் என்னாடா இன்னும் மச்சானைக்காணவில்லையே எனபோன் செய்தேன் இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்றார்கள் அதற்குள்ளா முடிந்துவிட்டது எனகேட்டார்கள் ஆமாம் எனக்காக ஹுசைன்னமா வெய்ட் பண்ணுராங்க சீக்கிரம் வாங்கன்னு சொல்லி போனை வைத்தேன்.

சொல்லி 12 நிமிடத்திற்குள் கீழே வந்துட்டேனே வந்துவிடுகிறாயா என்றார்கள் அப்போது அண்ணாச்சிவந்து உள்ளேவாங்கன்னு அழைக்க. மீண்டும் மச்சானிடமிருந்து போன் காரை போட்டுவிட்டு மேலேவரலாமுன்னா பார்க்கிங் கிடைக்கலை நீயே வந்துடேன் என்றார்கள், ஓகேன்னு நானும் கிளம்பிட்டேன், நான் கிளபுகிறேன் என தலையை ஆட்டியபடியே அனைவரிடமும் சொல்லிவிட்டு மாலிக்கை அழைத்து என்னுடன் பள்ளியின் அருகே வரை வரமுடியுமா என்றேன், வருகிறேன் என அபு அப்சரையும் கையில் பிடித்துக்கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்தபோது,

திரும்பிப்பார்த்தேன் கதவில் அண்ணாச்சி அழைக்கிறார் [என்றிருந்த போஸ்டரை பார்த்து அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] என்னைவிட்டுவிட்டு மாலிக் கிளம்ப. காரில்வந்து அமர்ந்தபோது மச்சான் என்னப்பா இத்தனை சீக்கிரமாக முடிந்துவிட்டது நான் போகும்போது தொடங்கி வருவதற்குள் முடிந்துவிட்டதா என்றார்கள். நான்தான் கடைசியாபோய் முதலில் வந்த ஆள் என்றேன்.

பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் மனதில் நிறைந்திருந்தது . நம்தமிழ் நம்எண்ணங்கள் நம்எழுத்துக்கள் நம்மை தேசம்விட்டு தேசம் வந்தும் எங்கெங்கே இருந்தநம்மை ஒன்றிணைத்த பதிவர்கூட்டத்தை நினைத்து மிகுந்த பெருமைகொண்டேன். இதேபோல் அனைத்து பதிவர்களையும் ஒருநாள் சந்திக்கும் வாய்ப்புவரும் என்ற நம்பிக்கையான மகிழ்ச்சியிலேயே இந்நிகழ்ச்சியை முடித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...........

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்புடன் மலிக்கா

ஒரு அடி வேண்டும்




நினைத்தவைகள் அத்தனையும்
நினைத்தடங்குமுன் என்கண்ணெதிரில்
நிறுத்தும் என்னவனே

நினைத்து நினைத்துதான் கரைகிறேன்
நிகழவில்லையே உன்னால் அந்த
ஒன்றுமட்டும்

அந்தடியை மறந்துவிடாதே என்றுசொல்லி
அன்றொரு தோழி அடித்த ஞாபகம்
ஆனால்

என்னையாளும் உன்கையால்
என்றாவது விழவேண்டுமே
ஒரு அடி

அந்தடியை மறக்கமால் அடிநெஞ்சுக்குள்
அழுத்திப்பூட்டிக்கொள்வேனே இந்த
அகிலம்விட்டு போனபின்னும்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நட்பென்பது


வலுவான நட்பு
விலகிநிற்குமா
பிரியமான நட்பு
பிரியத்துணியுமா

வார்த்தையென்னும்
நூலெடுத்து
அன்பெனும் பந்தம்கோர்த்து
நட்பாய் நுழைந்த பாசம்

நூல்கட்டிய பட்டமாய்
வான்நோக்கிப்போகுமா -இல்லை
வார்த்தைகளை மரணிக்கசெய்து
மனம் மெளனமாகுமா

நட்பென்பது கலங்கமில்லாதது
கலங்கியப்பின் அது நட்பாகாது

உண்மை நட்பென்றும்
ஊமையாகிப்போகாது
உயிர் விலகும்வரை
நட்பைவிட்டு விலகாது..
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தீராத!!!!!!!!


சாந்தியைத்தேடி சன்னிதானத்தில்
கூட்டங்கள்
சந்தடிசாக்கில் சிந்துபாடும்
சாத்தான்கள்

அமைதியைநாடி அல்லபடும்
உள்ளங்கள்
அடிநாக்கிற்கடியில் அடிமைப்படும்
பேதைகள்

நியாயங்களைதேடி நிரம்பிவழியும்
வழக்குகள்
நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்

வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்

சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மழைப்போர்வை


தூவி தூவி பெய்தது
தூறல்போட்டு நெய்தது

சாரல் சாரல் அடித்தது
சரம் சரமாய் தொடுத்தது

சன்னல் வழியே பார்க்கையில்
சாடைகாட்டி அழைத்தது

சற்று எட்டிப் பார்க்கும்போது
சரசம் செய்ய துடித்தது

மெல்ல மெல்ல தேகத்தை
முழுவதுமாய் நனைத்தது

செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்

ஹச்சென்ற தும்மல் வந்து
எங்கள் இறுக்கத்தையே பிரித்தது

நனைந்த தேகம் குளிரக் குளிர
நாடிநரம்பெல்லாம்  நடுங்கியது

கதகதப்பு தேடிய தேகத்திற்க்கு
கையில் போர்வை  கிடைத்தது

இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது

காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?

பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே

வினோதமாய் பார்த்தது
வியப்பாய் ஏனென்று கேட்டது

காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்

காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்

சொல்லி முடிக்கும் முன்னெயே
என்னை மூடிக்கொண்டது போர்வையே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


புண்ணியம் தேடு


மனிதா!!!

உன் மனநிலையை புரிந்துகொள்ளவே
முடியவில்லையே!
கடலின் ஆழத்தையே அங்குளம்
அங்குளமாக அளந்துவிடும் மனிதனுக்கு
மனிதனின் மனதை
மனிதனே அறியமுடியவில்லையே!

மனிதா நீ,,,,

சுயநலமாய் நடக்கிறாய்
சுயநலத்துடன் வாழ்கிறாய்
உன் தேவைகளுக்காக
அடுத்தவர்களை பயன்படுத்தும் நீ,,

அவர்களின் தேவையென்னும்போது
கண்டும் காணாமலும் போகிறாய்
மனிதப்பிறப்பே மகத்துவமிக்கது
அதை சுயநலமென்னும் சேற்றைப்பூசி
மாசுபடுத்துவதா?

சுயநலத்துடன் வாழ்வது உனக்கு சுகம்
கொடுப்பதாக தோன்றும் அதுவே
உனெக்கென்றுவரும்போது
சுமையிலும் சுமையாக மாறும்.

மனிதனுக்கு மனிதன் உதவிக்கொள்ளவே
இப்புவி புனிதமாக்கப்பட்டுள்ளது
புண்ணியம் செய்து பலனைபெறு
புனித மனிதனாய் பூமியில் வாழு.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தாயும் சேயும்



சங்கடங்கள் சருகாய் சடசடத்தபோது
சற்றேசாய்ந்தது தலை தாய்மடியைத்தேடி
சகலமும் சலசலத்தது கண்ணீராய் மாறி..



அள்ளியணைத்து முகர்ந்தபோது
அவ்வ, என்ற முத்தத்தை தந்தது மழழை
இவ்வுலகையே மறக்கச்செய்தது தாய்மனதை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சின்ன வெண்ணிலா


வானவீதியில் உலாவரும் சின்னவெண்ணிலாவே-என்

வாசல்வருகையில் மட்டும் என்னடி வெக்கம்

மேகமூட்டங்களோடு மெல்லமெல்ல ஒளிந்துசெல்கிறாய்



என் முற்றுத்து வாசலிலும் சற்றுஎட்டிப்பார்

அங்கும் உன்னைப்போல் ஒரு குட்டிவெண்ணிலா

என் குழந்தை வடிவில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கோடைகுளிருமா -வாடை வருடுமா

வாழ்வைத்தேடி வயல்வரப்புகளை
விற்றுவிட்டுவந்த நாங்கள்
வறுமையைபோக்க வாலிபத்தை
தொலைத்து வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!


கோடைவெயில் கொடூரமாய்
கொழுந்துவிட்டு எறிய –அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி
குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி
களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா
[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,
என பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

பாலைவனமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்,,
எதிர்பார்த்திருக்கிறோம்!!!
கோடை என்றாவது குளிருமென்றும்
வாடை என்றாவது வருடுமென்றும்...
 
[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை! அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்] 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இப்படியும் சில





வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..


மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..

சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..

இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..

ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..

விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..

தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மரணிக்கும்போது

                                               [உரையாடல் கவிதைப்போட்டிக்காக]


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...



அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இறையில்லம்



இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
   அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
  அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
   பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
  தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
  அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
  மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
  இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
  மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பாலைவன பரிதவிப்பு


பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்
வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து
வெதும்பிகரைந்தது கண்ணீர்

பத்துக்கு பதிமூன்றை நம்பி
இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு
பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும்வாங்கி
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்

இன்றுபோகுமோ வேலை நாளைபோகுமோ
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என

காலையில் வேலைக்குபோகும் மனம்கலங்கியபடி
ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை
அனலில் புளுவாய் துடித்தபடி

குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு
நடுவே வேலைகள் பறிபோகும்நிலை
என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே
இருதலைக்கொள்ளியாய் தவித்திடும்மனது

சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்
நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு
சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை
சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?

எல்லாம்வல்ல இறைவன் இருள்நீக்கி
அருள்புரியவேண்டும்
இன்னல்களை போக்கி மகிழ்ச்சியை
தந்திடவேண்டும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எழுதுகோல்


இங்கிதத்தை மறந்து இறுக்கித்தழுவியதையும்
இலகுவான காதல்கவிதைகளாய் எழுதச்சொன்னாயடி

படபடத்த பார்வைகளின் பதியல்கள்
பட்டாம்பூச்சியோடு போட்டிபோட்டதையும்

பருவமனதிற்குள் படுவேகமாய் மிதிவண்டி
பறந்து செல்லும் பருந்தோடு போட்டிபோட்டதையும்

இதோ உள்ளத்தில் மிதக்கும் எண்ணங்களோடு
இனிமையான தருணங்களையும் கிறுக்கித்தள்ளியதடி..

:என் இதய எழுதுகோல்:

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வினோத விபரீதம்.

இயற்கையைமீறிய
இச்சைகளின் கிளர்ச்சி
இதில் ஈடுபாடுகொண்ட 
பலமனங்கள் அதனை நோக்கி
இறைவனின்
கட்டளைகளை ஏளனமாக்கி
இறுமாப்புடன்
செயல்படுது மனிதமனசாட்சி


மரபுகளை அறுத்தெறிகிறது
மனிதனின் உணர்ச்சி
மன இச்சைகளின்மேல்
ஆட்டம்போடுது
மனகிளர்ச்சியின் ஆட்சி


மலர்களை வண்டுகள்
முகர்ந்து புணர்வது
மகரந்த சேர்க்கை
மலரோடு மலர்
முகர்ந்து புணர்வது
மரபற்ற ஓரினச்சேர்க்கை


ஆணையும் பெண்ணையும்
இணைப்பதுதான்
ஆண்டவனின் சட்டம்
அதை
அறுத்தெறிய நினைப்பது
ஆணவத்தின் உச்சம்


தீராத நாகரீகமோகம்
நாளுக்குநாள் அதிகரிப்பு
தீயவைகளின் பக்கமேபோகுது 
சிலமனிதபிறப்பு
தீயென்று தெரிந்தும்
சுட்டுக்கொல்லுது
தேகத்தை நுழைத்து
தீராத பாவம்வந்து சேருமே
இதுபோன்ற தீமைகளுக்கு


மதிகெட்டுவாழும்
இம்மனிதர்களின் போக்கு
மாறிடவேண்டும்
மறையோனுக்கு கட்டுப்பட்டு
ஆணும் பெண்ணும்
இணைந்துவாழ்வதே 
மாபெரும் சிறப்பு-அதை
அறிந்து வாழ்ந்தால்
கிடைக்கும்
இறைவனிடம் பரிசு...


[நேற்றிரவு [நடந்தது என்ன]விஜய் டீவி புரோக்ராமில். ஓரினச்சேர்க்கையின் விபரீதத்தால் பெண் தற்கொலை
இப்படியே தொடரும் நிலை என பட்டியலிடப்பட்டது.

ஒரு பெண்ணை பெண் காதலிப்பதும்
ஒரு ஆணை ஆண்காதலிப்பது.

எங்கே போய்கொண்டிருக்கிறது உலகம்
மேலை நாடுகளில் உலவிய விபரீதமெல்லாம்
வீரநடைப்போட்டபடி கலாச்சாரம் குடியிருக்கும் இடத்திற்குள் காலாரநடைபோடுகிறதாம். பார்க்கவும் கேட்க்கவும் வேதனையாக இருந்தது.

மரபுகளெல்லாம் மண்ணுக்குள் புதைந்துகொண்டிருக்கிறது.
தோண்டியெடுக்கமுடியாதவாறு
காலத்தின் கோலத்தால் கண்மூடித்தனமாக வாழநினைப்போரை நினைத்து வருத்தப்படுவதா.? வசைபாடுவதா?
புரியாமல் புலம்பியபடி... எழுதிவிட்டேன் இக்ககவி]






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கவிதையும்நானும் 100,யும்தாண்டி


100, ருக்கு மேல் எழுதிவிட்டேனா கவிதைகள் எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது,

கவிதைகள்  எழுதும்போதே
உள்ளுக்குள் நீரூற்று பீறிட்டு பாய்க்கிறது, வால்கட்டிய பட்டம் வானைநோக்கிய பயணம்போல்
சிந்தனைகள் அனைத்தும் கவிதைகளுக்காக ரெக்கைகட்டிப்பறக்கிறது,
வெள்ளையருவி பார்த்ததும் துள்ளிக்குதித்தாடும் பிள்ளைமனம்போல்
விழிப்பார்வைகள் காணும் இடமெல்லாம் கவிதைகளாக்கி காணத்துடிக்கிறது.

எண்ணங்களை எழுத்துக்களாக்கி
எழுத்துக்களை காட்சிகளக்கி
காட்சிகளை வரிகளாக்கி
வரிகளை கோர்வையாக்கி
கோர்வைகளோடு கவிதையை
படைப்பதில்தான் எத்தனை ஆனந்தம்.

கவிதையெழுத கடந்துவந்தபாதையை
திரும்பிப்பார்த்து ரசிக்கிறேன்
என்னோடு உங்களை ரசிக்க அழைக்கிறேன்

என் அன்புமச்சானின் [கணவர்] அன்பும் இதற்கு ஒரு பெருங்காரணம் அவர்களின் ஊக்கம் இல்லாதிருந்தால் இத்தனை அளவிற்கு என்னால் எழுதியிருக்கமுடியாது.
அவர்கள் துபையிலிருந்து ஊருக்குவரும்போது கடிதம் எழுதுவதற்காக கொண்டுவந்து தரும் அத்தனை லட்டர் பேட், டைரிகளில்,
கத்தைக்கத்தையாய் கவிதைகளை காகிதமுழுவதும் எழுதி அதை மீண்டும் மீண்டும் படித்துரசிப்பதுதான் என் வேலை.

முதல் குட்டிகவிதை பெயர்மாற்றி 17 வயதில். இரு இதழ்களுக்கு அனுப்பியது. ஒற்றுமை இதழுக்கு பின்னூட்டங்கள் அனுப்பியது என ஞாபக்கிடங்கினுள் அத்தனையும் புதைந்து மிதந்து கொண்டிருக்கிறது.

துபை வந்தபின்பும் இங்கு நடக்கும் அத்தனைபதிவுகளையும் அப்ப மனதில் காப்பி [அச்சோ அந்த காஃபியல்ல]எடுத்துவந்து வீட்டில் அமர்ந்திருக்கும் நேரம் அதேபோல் லட்டர் பேடுகளில் கிறுக்கிவைத்திருந்த போதுதான் ஒரு சமயம் வீட்டிற்குவந்த சினேகிதி, தமிழ்குடும்பம் என்ற

ஒரு வெப்ஷைட் உண்டு அதை பாருங்கள் அத்தனையும் உங்களுக்கு பிடித்த அழகிய தமிழில் என சொல்லிச்சென்றாள் அன்றே அதில் உறுப்பினராக இணைந்தேன். முதலில் சிந்தனைக்கு சில என ஆரம்பித்தேன். பின் கவிதைகளைத்தந்தேன், ஒரு 7, 8, கவிதைகளிலேயே நல்ல வரவேற்பு மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதந்தேன்,

தொடர்ந்து உணர்வுப்பூர்வமாய் கவிதைகளைத்தரச்சொல்லி உறுப்பினர்களும் ஆதரவுதர, முதல்முறையாக எனக்கென்று கவிதைகென தனிபகுதி //மலிக்காவின் வரிகள்// என தமிழ்நேசன் அண்ணா, தந்து என்னை ஊக்கம் கொடுத்து எழுதச்சொன்னார்கள்.

சும்மாவே எழுதிகிறுக்கிய எனக்கு ஊக்கங்கள் தொடர்ந்துவர நம்மால் எதுவும் செய்யமுடியுமென, அறிவுப்பகுதி. விடுகதை. பட்டிமன்றம். என்று ஆரம்பித்தேன். [நாங்களும் பட்டிமன்றத்தீர்ப்பும் சொல்லியிருக்கோமுல்ல. நாகரீகமா—கலாச்சாரமா என்ற தலைப்பிற்கு] கைவண்ணக்கலை, தையல், மருதாணி டிசைன், பெயிண்ட் ஒர்க். ஜுவல் ஒர்க். சமையலில் புதிது, என எனக்கு தெரிந்தவகையில் தமிழ்குடும்பத்தில் புகுந்துவிளையாடி எனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் என்னை தமிழ்தேர் [அமீரகத்தித்தில் வெளியாகும் மாத இதழ்] இதழிலிருந்த சிம்மபாரதி அவர்கள், கவிதைகள் எழுதிதரும்படி அழைத்தார்கள். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்

அதுவும் ஆண்டுமலர் வெளியாகும் சமயம், விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள், அழைத்ததற்கு ஒரு நன்றி சொல்லலாமே என ஒரு கவிதை என நானாக நினைத்து கிறுக்கியதை அனுப்பிவைத்தேன், விழா அன்று என்னால் கலந்துகொள்ளமுடியாமல்போனதால் ஆண்டுமலர் சிம்மபாரதியிடம் பெற்றுக்கொண்டேன், அதில் பார்த்தால் நான் இதழ் வாழ்த்துக்காகஎழுதிய கவிதையை பிரசவம் [பிரசுரம்]செய்திருந்தார்கள்.

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்


           த ன்னம்பிக்கையென்னும் தைரியத்துடன்
     
          மி ருதுவான மனிதனாய்  மனசாட்சியோடு வாழ்ந்திடு

  வாழ்க்கை முழுதும் வசந்தம் பூ பூக்கும்

தமிழ்குடும்பத்தில் விண்ணப்பம் கொடுத்து
தமிழ்தேரை வடம்பிடிக்க விடுத்தது அழைப்பு
தமிழர்கள் ஒன்றுகூடி தமிழினை தொகுத்து
தமிழின் கழுத்தில்போடுவோம் தமிழ்மாலை தொடுத்து
திருவாரூர் தேருக்கு என்றும் இருக்குது மவுசு
தமிழால் தமிழ்தேருக்கு இனி கிடைக்கும் தனிசிறப்பு
தமிழரென்பதில் பெருமிதம் எனக்கு
தமிழினமே ஒன்றுபட்டு தமிழ் வடத்தைபிடிப்போம் இழுத்து

முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்,என
அனைத்தையும் இணைத்து
தரணியெங்கும் பாடிடுவோம் தமிழ்தாய் வாழ்த்து.

அம்மாடியோ நான் எழுதிய கவிதை அதுவும் வெளிநாட்டு தமிழ் இதழில் பார்த்தபோது ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது,எனக்குள் என்னிலடங்கா பூக்கள் பூத்துக்குலுங்கின படபடத்தபடியே பறவைகளின் கீச்சு கீச்சு ஒலிகேட்டது.மனமெல்லாம் மகிழ்ச்சி ராகம் இசைத்தது.

அந்த மாத தலைப்பாய் /எதைத்தேடுகிறோம்/ வந்தது எழுதினேன் ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரையில். கவிதை எழுதியவர்களே கவிதையை வாசிக்கனும் என்பது தமிழ்தேரின் கொள்கை. அதுவும் சரிதானே எழுதியவருக்குத்தானே அதை எப்படி வாசிக்கனும் என்று தெரியும். மாதா மாதம் இதழ்வெழியீட்டுவிழா நடக்கும், அதில் வாசிக்கவேண்டும் நாம் எழுதிய கவிதைகளை, அந்தமாதம் என்னை அழைத்தபோது என்னால் முடியாது என மறுத்துவிட்டேன், பயம் ஒருபுறம். பதட்டம் ஒருபுறம் [மேடையேறியெல்லாம் பலக்கமா நமக்கு ஹா ஹா ஹா]

இருமாதங்கள் கழித்து /கோடையும் வாடையும்/ தலைப்பு
இதற்காவது வாசிங்கப்பா, என்றபோது சரி என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று எழுந்தால் கடகடவென காலெல்லாம் நடுநடுங்கியதே பார்க்கனும், உதறல் எடுத்த கைகளை காட்டிக்கொள்ளாமல் குனிந்த தலை நிமிராமல் [நிமிர்ந்தா எதிர்த்தாப்புல இருப்பவங்களப்பாத்து இந்த பச்சபுள்ள பயந்துடுவேனுல்ல]மைக் எடுத்து [ஹலோ மைக் டெஸ்டிங் கேட்குதா என மைக் டெஸ்டிங்கெல்லாம் பண்ணலிங்கோ] ஒருவழியா கவிதையை வாசித்து முடித்ததும் எழுந்ததே கரஹோஷம், காதில் இன்னும் ஒலிக்கிறது[முதல் முறையல்லவா அப்படித்தானிருக்கும்] அப்படியே பூமிக்குள் புதைவதை போலிருந்தது, எப்படி நடந்து என் சீட்டுக்கு வந்தேனென தெரியவில்லை.

சரி சரி எப்படி பிளாக் ஆரம்பிச்சேன்னு சொல்லிடுறேன்.
என்அண்ணன் முகம்மது ஆரீஃப் ஊரிலிருந்து இங்கு [துபை] வந்திருந்தது, அப்போது எனக்குள் இருக்கும் திறமைகளை பார்த்து[ஹே காலரை தூக்கிவிடுகிறேன்]
நீயே தனியாக அனைத்தையும் செய்யவும்,சேமித்துவைக்கவும் ஒரு வழியுண்டு எனசொல்லிவிட்டு ஊருக்குப்போய் அங்கிருந்து என் பெயரில் ஒரு பிளாக் ஓப்பன் செய்து இதில் எல்லாவற்றையும் சேர்த்து வெளியிடு என்று சொன்னார்கள், கேட்கவா வேணும் புகுந்துட்டமில்ல,முதலில் /கவிதைக்களஞ்சியம்/ என்று இருந்த பிளாக்கை மாற்றிவிட்டு பின்பு நீரோடை என இந்தபிளாக்கை திறந்து இதை கவிதைகளுக்கு மட்டும் என்று வைத்துவிட்டு, /கலைச்சாரல்/ என்று மற்றொன்றையும் திறந்து அதில் நம்ம கைவண்ணக்கலைகளையும் வெளியிடுகிறேன்.

இந்த பிளாக் திறந்து மூன்றுமாதம் முழுமையடைத்துவிட்டது இரண்டுமாதங்களாக தமிலிழ்ஸ், தமிழ்மணம், பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் தானாக படைப்புகளை சேர்த்துவைத்துவிட்டு பின்பு மற்றவர்களின் பிளாக்பக்கம் போனபோதுதான் இப்படிதான் செய்யனும் என ஒரு விபரம் கிடைத்தது. இடையில் ஃபாலோவர்ஸ் காணாமல்போய் சுஹைன்னாக்காத்தான் கண்டுபிடிச்சி தந்தாங்க. முதன்முதலில் சாருக்கா விருதுதந்து மேலும் ஊக்கம்படுத்தினாங்க.
அப்புறம் ஜலீலாக்கா மேனகா, ஸாதிக்காக்கா. எல்லாரும் எனக்கு விருதுகள் கொடுத்து ஊக்கம் ஆதரவும் கொடுக்கிறார்கள்.

பின்பு தமிழ்குறிஞ்சியிலும்.[இணைய இதழ்] தமிழ்த்தோட்டதிலும் எழுதி தரச்சொல்லிக்கேட்டாங்க அங்கும் தருகிறேன். அப்புறம்

சுதந்திரமே சுதந்திரமே, http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp கவிதையெழுதிய அன்று யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்காக தேர்ந்தெடுத்திருந்தாங்க.

நம்ம தியாவின் பார்வையில் மலிக்காவும் கவிதையையும் ஒரு ஆய்வு நடத்தியிந்தாங்க. அதிலிருந்து புரிந்துகொண்ட விசயம் ஏராளம் கவிதைக்குள்ளும் இத்தனையிருக்கா என்று..http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html [மிகுந்த மகிழ்ச்சியான விசயம்]

வலைச்சரத்தில் ஐந்தாம் நாளில் http://blogintamil.blogspot.com/2009/11/blog-post_27.html என் இரு தளங்களையும் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியிருந்தாங்க.

இந்நேரம் .காம். என்ற இணையம் என் தளத்தை அறிமுகப்படுத்தலாமா என கேட்டு இருக்காங்க.
ரொம்பவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..

விரைவில் /ஒரு ரசிகனின் டைரி/ என்று திருச்சி சையத் அவர்கள் வெளியிடுகிறார்கள் அதிலும் என்கவிதைகள் வரவிருக்கின்றன.
இத்தனைக்கும் உறுதுணையாய் என் மச்சான்..

நம்முடைய எழுத்துக்கள் பிறறை சாரும்போது அது நல்எண்ணங்களாக சேரவேண்டும் என்பதுதான் என்நோக்கம்
எண்ணும் எண்ணங்கள் உயர்ந்ததாக இருந்தால் எல்லாமே உயர்வாக இருக்கும். நமக்குள் இருக்கும் திறமைகளை நாமே மூடிவைத்துக்கொண்டால் அதுவால் என்ன பயன்

பிறந்துவிட்டோம் இறப்பதற்குமுன்னால் எதாவது நல்லது செய்துவிடுவோம் என்ற நல்நோக்கமிருந்தால் எதையும் செய்வோம்.

என் எழுத்துபணி நல்லவிதமாக அமையவேண்டும், பிறறின் மனம் நோகாதவாறு என் எழுத்துக்கள் சொல்லும் எதுவும் பயன்தராமல் வீணாகாதவாறும் இருக்கவேண்டும். பொய்களை முடிந்தவரை தவிர்த்து எழுதவேண்டும்[[சிரிப்பதுபோல் தெரிகிறது கவிதைக்கே பொய்தானே அழகு என சொல்வது காதில் கேட்கிறது] நல்லெண்ணங்கள் உருவாக என்எழுத்துக்கள் ஒரு காரணமாக அமையவேண்டும் என்பதுதான் என் உளமார்ந்த ஆவல்.

அதற்கு தாங்களைவரின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.நாம் ஒரு மனிதன் மேலே செல்வதற்கு ஏணியாக இல்லாவிட்டாலும் கீழே விழுந்துவிடாவன்னம் அவனுக்கு ஒரு கையாவது கொடுத்து பிடித்து இழுக்கவேண்டும். நீங்களைனைவரும் இதுவரையில் கொடுத்துவந்த ஆதரவுபோல் மேலும் என் படைப்புகளுக்கு கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுக்க இன்னும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்..

இதுவரை நான் எழுதிய எழுத்துக்களிலும் பின்னுட்டங்களிலும் யார்மனதும் நோகும்படி எழுதியிருந்தால் இறைவனுக்காக என்னைமன்னிக்கவும்

எனக்கு தமிழில் நிறைய எழுத்துப்பிழைகள் வருகிறது இருந்தபோதிலும் தமிழ்மீதிருந்த அளவுகடந்த பிரியத்தினால்தான் என்னால் என் எண்ணங்களுக்கு எழுதவடிவம் கொடுக்கத் தூண்டுகிறது. முடிந்தவரை பிழைகள்வராதவாறு எழுத முயற்ச்சிகிறேன்

நிறைகுறைகளிருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டவும்,
தட்டிக்கொடுப்பதுமட்டுமல்ல நட்பு
தவறிழைக்கும்போது தட்டிக்கேட்ப்பதும்தான் நட்பு.
இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் தந்ததுபோல் தொடர்ந்துவரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்..
தாங்களனைவருக்கும் என்மனமார்ந்த நன்றியினை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்..

என்றென்றும்
அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

என்னில் நீ


வனமெங்கும் பூக்களின் வாசமாய்
வானம்போல் பரந்து விசாலமாய்
மனமுழுவதும் நிரம்பிவழிகிறாய்
நினைவுகளின் உதிரமாய்


சலசலக்கும்  நீராய்
நீந்திவரும்  தென்றலாய்
நிதர்சனமாய் நிலைத்துவிட்டாய்
உள்ளத்துக்குள் உயிராய்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தமிழே! தமிழா!


தமிழே தமிழே உனை நானும் மறவேனா
தமிழே தமிழே உனைநானும் பிரிவேனா

தமிழே தமிழே தாலாட்டும்கேட்டேனே
தமிழே தமிழே தாய்மடியும் நீதானே

தமிழே தமிழே உன்எழுத்து பூச்சரம்
தமிழே தமிழே உன் வார்த்தை பூபாளம்
தமிழே தமிழே உன்பேச்சு தேன்கொஞ்சும்

தமிழே தமிழே தமிழர்கள் தம்மண்ணில்
தமிழே தமிழே தமிழர்கள் படும்பாடு
தமிழே தமிழே நீபார்த்தாலும் சகிக்காது

தமிழே தமிழே தமிழர்கள் உன்மக்கள்
தமிழே தமிழே உன்பிள்ளை கண்களிலே
தமிழே தமிழே கண்ணீரும் வரலாமோ

தமிழா தமிழா தமிழ்மைந்தர்களின் ஈனத்தை
தமிழா தமிழா துப்புரவாய் துடைத்திடவே

தமிழா தமிழா தூயவனாம் இறைவனிடம்
தமிழா தமிழா துணிவைத்தரசொல்லி வேண்டிடுவோம்

தமிழே தமிழே எனதருமை தாய்த்தமிழே
தமிழ்மொழிதான் எனக்கென்றும் தாய்மொழியே......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


எல்லாம்வல்ல இறையோனே!
எங்களைக்காக்கும் ரஹ்மானே!

மண்ணால் ஆதம் நபியைப்படைத்து
அவருக்குள்ளிருந்து இவ்வுலகிலுள்ள
அனைத்து மனிதர்களையும் வெளிப்படுத்தி

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு
மாநபிகளை மக்களுக்குத்தந்து அவர்களின்மூலம்
அனைவருக்கும் அறிவுறைகளையும்தந்தாய்

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராகீம் [அலைஹிஸ்ஸலாம்]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை அறியவைத்து
மனிதர்களின் பொருமைக்கும் இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத்தந்து
மகத்துவமிக்க மாபெரும் அருளாளன் ஆனாய்

இப்ராகீம்நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும்நாள்வரை
இம்மியளவும் இம்மக்கள் மறந்திடாதவாறு
இத்தியாகத்திருநாளாம்
ஹஜ்ஜுப்பெருநாளை எங்களுக்குத் தந்தாய்

புனித இடத்திற்கு இறுதிக்கடமைக்கு
சென்றுள்ள மக்கள் சரம்சரமாய் கண்ணீர்மல்க
எங்களின் ஹல்பும் உருக எங்களுக்கும்
புனிதபயணத்திற்கு ஒருவாய்ப்பளிக்கச்சொல்லி
விசும்பி வேண்டி நிற்கிறோம் எங்கள் இறைவா!

இப்பெருநாளின் பொருட்டாய் இவ்வுலகிலுள்ள அனைத்து உள்ளங்களிலும் சாந்தியும் சமாதானமும் இறைவனின் அருளும் உண்டாவதாக!
உலகிலுள்ள அனைவருக்கும்
 தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இனிய நடை

பச்சைப்பசேலென்ற
புல்வெளி அதன்மேல்
பச் பச்சென இச்சிட்டபடி
பதிந்தன கால்கள்

புல்வெளிமேல்
படுத்திருந்த பனித்துளிகள்
பதிந்து பதிந்து
சென்ற கால்களை
கிச்சுகிச்சு மூட்ட

இரவு வானத்தில்
விழித்திருந்த வெண்ணிலா
இவளின்
இன்முகத்தைக் கண்ணடித்திட
இரைந்து கிடந்த
நட்சத்திரத்தின் ஒளியை
இமைக்காமல்
இவளும் ரசித்திட

அமைதியான இரவுக்குள்
ஆவாரம்பூவின் வாசம்
அதோடு  சில்லென்றெக்
காற்று கன்னத்தைஉரச

அந்நேரம்பார்த்து
தொலைப்பேசியும் சினுங்கிட
அன்புச்செல்லத்தின்
அழைப்பும் வந்திட
அத்திப்பூப்போன்று
அதரத்திலொன்று தந்திட

ரசிக்கவைத்து
மனம்
இனிக்கவைத்த
புல்வெளிக்கும் பனித்துளிக்கும்
வெண்ணிலாவுக்கும் நட்ச்சத்திரத்திற்கும்
ஆவாரம்பூவுக்கும் தொலைப்பேசிக்கும்

பிரிய மனமில்லாமல்
பிரியா விடை சொல்லியபடியே
பாவையவள்  மெல்லநடந்தாள்
தன் மனமுழுதும் மகிழ்வாய்....





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பார்வையற்றோரின் புலம்பல்



      என்னைப்போலவே
          என் தெருவிளக்கும்

     எனக்கு கண்ணிருந்தும் ஒளியில்லை
                                            அதற்கு,,,
                      விளக்கிருந்தும் ஒளியில்லை..





சூக்களே!

உங்களுக்கும் அரசாளும்
எண்ணம் வந்துவிட்டதோ

அடிக்கடி அரியாசனத்தை
          நோக்கியே போகிறீர்களே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

வசமானது மனது



சின்னகுயிலின் கானம்
செவியை சிறைப்படுத்தியதுபோல்

சில்லென்றகாற்று செந்தூரமேனியை
சிலிர்ப்பாய் தழுவியதுபோல்

தேன்துளிகள் தெளித்து செவ்வகஇதழை
நனைத்ததுபோல்

சிறைபிடித்த கைகளுக்குள்
சிக்கிகொண்ட சின்னக்கிளியாய்

மயக்கம்தந்த விழிகளுக்குள்
மண்டியிட்டு கிடந்த வண்ணமயிலாய்

உயிர் பூ உருகுது உனக்குள் மிளிர
ஒருநாளும் மறவேன் என்னுயிரும் கரைய

கள்ளிக்காட்டு இதிகாசங்களுக்கு இடையில்
இந்த கனமான காதலும் தேங்கியது மனதில்

வருடிவருடி வார்த்தையால் நீயும்வசபடுத்த
வசம்புக்குழைத்து தேனில் தந்ததுபோல்
வசமாய் காதலும் உன்வசமாகிப்போனது...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எதுவும் நடக்கலாம்

அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்

காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்

அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்

பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்

அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்

அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி

அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி

அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்

சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்

எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி

எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை

இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அறம் செய மற


அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்

தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........





ஒருமுறை

 மனிதனுக்காக  படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”

[இது சும்மா ஒரு ஷைடு பிட்]



அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

உறக்கம்


நீ உறங்குவதற்கு முன்
உன் ஒவ்வொரு செயல்களையும்
நினைத்துப்பார்

தவறுகள் செய்திருந்தால்
இனி அதைப்போல் முடிந்தவரை
செய்ய கூடாது என--முடிவெடுத்துக்கொள்.


நல்லது செய்திருந்தால்
இனிஇதேபோல் தொடர்ந்துசெய்யனும் என
தீர்மானப்படுத்திக்கொள்

நாளடைவில் நல்லதை மட்டுமே
செய்வதை நீயே உணர்வாய்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

எதைத்தொலைத்தோம்

எதையோ தினம் தினம் தேடுகிறோம்

அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து

நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்

நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி   நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே   நம்

குடும்பம் சோலைவனம் ஆனபோதும்  நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்

அமைதியை தேடித்தேடி  தினம்
ஆளாய்ப்பறக்கிறோம்  அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்

எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம்  ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”



[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/  என்ற தலைப்பிற்காக   அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கவிக்காக ஒரு கவிதை


உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி

காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன

உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன

பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது

தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்


பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஒரே தவிப்பு

மஞ்சத்தின் கட்டிலில் கிடந்துகொண்டு
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு

குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காற்றோடு கலந்து





அன்புத்தோழியே அடிக்கடி சொல்வாயே
காற்றா”டி”நீ இத்தனை சுகந்தம் உனக்குள் என்று

இதோ கடல்கடந்துவந்தபின்பு
உன்னைநான் காற்றாய் நேசிக்கிறேன்
சுற்றிவரும்காற்றை சுவாசித்தபின்
நீவிடும்மூச்சுக்காற்று எனைவந்து சேர்வதால்

பூந்தென்றல் தவழ்ந்து வந்து
என்பட்டுத்தோள்களை உரசும்போது நீ
என் தோளில் சாய்வதுபோல் உணர்கிறேன் –இதே
நிலையில்தான்  நீயும் எனை  நினைப்பாய் என்று நம்புகிறேன்

குளிர்காற்று என் கைகளுக்குள் குளிரூட்டும்போது
நீ என் கைகோர்த்து நடக்கிறாய்என்றெண்ணி என்கைகளை
இயல்பாகவே இறுக்கிக்கொள்கிறேன் -இதே
உணர்வைதான் நீயும் உணர்வாய் என நினைக்கிறேன்

அனல்காற்று அடிக்கும்போது நீ என்மேல்
கொஞ்சம் கோபம் படுகிறாய் என
நானும் முகத்தை திருப்புகிறேன் கொஞ்சும் கோபமாய்-இதே
நிலமைதான் அங்கும் என எண்ணிக்கொள்கிறேன்

சூராவளிக்காற்று சுழண்டு வீசும்போது
நான் தவறு செய்துவிட்டேனோ
என நினைத்துக்கொள்கிறேன்-இதே
நிலவரம்தான் அங்கும் என எண்ணம் கொள்கிறேன்

துள்ளித்திரிந்த நாள்களில் நாம்
செய்த குறும்புகள் அத்தனையும்
அடிநெஞ்சிற்குள் நங்கூரம் இட்டதடி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி
அங்குமிங்கும் அலைந்த காலத்தை
அசைபோட்டுக்கொண்டே அயல்நாட்டில் வசிக்கிறேன்

ஆன்மாவிற்குள் ஆனந்தம் அலைபாயும்போது
அடிதோழியே அருகே நீ இருக்கவேண்டுமென்று
அடித்துகொள்ளும் நெஞ்சத்திற்கு ஆறுதல்சொல்கிறேன்

எது எப்படியோ உனைத்தேடி காற்றாகி வருவேன்
அதைநீ சுவாசித்த பின் விடும்மூச்சுக்காற்றை சுமந்தபடி
சுகந்தமான சுவாசமாய் எனைத்தேடி வருவாய்

காலங்கள் கடந்தபோதும் மரணங்கள் நிகழ்ந்தபோதும்
பூமியுள்ள காலம்வரை காற்றிருக்கும்
காற்றை சுவாசிக்கும் காலம்வரை நாமிருப்போம்
நம்முள் கலந்திந்திருப்போம் நட்பில் நிலைத்திருப்போம்..

நட்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கலங்காதே



[இது விழி வலி]
கருவிழியே ஏன் கண்கலக்கிவிட்டாய்
வேண்டுமென்றா செய்தேன்
வெறுமையாக கிடந்த விழிகளுக்கு

விபரமறியாமல் விரல் நுனியில்
மையெடுத்திட்டுவிட்டேன் அது
விழியோரத்தில் உரசிவிட்டது

அதற்காகவா
விழிவலிக்க விம்மி விம்மி குமைகிறாய்
கண்மணிகள் கரைய கரைய அழுகிறாய்

கலங்காதே
கல்நெஞ்சமல்ல எனக்கு
நீ கலங்கும்போது கனக்கிறது நெஞ்சம்

அழாதே
உன்னை அமைத்திப்படுத்த அதேவிரல்களால்
விழிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்...

[இது மனவலி]

மலரே மனதிற்குள் என்ன
மெளனபோராட்டம்

இரவு உறங்காமல் உன்தேகத்தில்
தெரியுது வாட்டம்

இதழ்களில் என்ன பனிதுளிபோல்
கண்ணீர்துளி

கலங்காதே காலையில்தெரியும்
கதிரவன் ஒளி....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

விடை தேடும் வினாக்கள்


படைத்தவனின் பயம் விட்டுப்போனதாலா
பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது

பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா
பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது

நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா
அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது


மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
மனிதர்களைக்கொல்கிறது

சுயநலங்கள் பெருகிப்போனதாலா
சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது



வெக்கம் விட்டுபோனதாலா
வைரமாகக்கூடிய மங்கைகூட
விலைமகளாகிப்போகிறது

தன்னம்பிக்கை குறைந்துபோனதாலா
தற்கொலைகள் தலைதூக்கி நிற்கிறது

மனஇச்சைகளுக்கு மதிப்புகொடுப்பதாலா
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறது

வஞ்சனைகுணம் பெருகிப்போனதாலா
பிறரை வதைக்கும் வட்டிக்கு
வட்டிபோட்டு வாங்குகிறது

அறிவு அளவுக்குமேல் வளர்ந்தாலா
அழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டே போகிறது

இன்னும்

வினாக்கள் விளைந்துகொண்டேதான்
இருக்கிறது        இருந்தாலும்
இதற்காவது விடை கிடைக்குமா என்ற
ஆதங்கத்துடன் விடை பெறுகிறேன்..


அமீரகத்தில் வெளியாகும்  மாதஇதழான தமிழ்தேர் இதழில் வெளியாகியுள்ள
”வினாவும் விடையும்” என்ற இம்மாத தலைப்பிற்கான என்கவிதை. 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

குழந்தைகள் தினம்



சின்னமலர்களே
செல்லமலர்களே
சிரித்து மகிழ்ந்திடும்
சிவந்தமலர்களே


அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்துவாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்



                                   உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
                                   உயர உயரவே முயற்ச்சி செய்யனும்
                                    தாய் தந்தையை மதித்து வாழனும்
                                       தரணி போற்றவே தலை நிமிரனும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது