பொய்வேசங்கள் புனைய!
பாசாங்குகள் காட்ட!
கள்ளத்தனம் புரிய!
கருணைபோல் நடிக்க!
இன்னும்
மண்ணுக்குள் செல்லும்வரை
பலவகை நாடங்கள் நடத்த
மனிதமுகங்களுக்குதேவை
தினம் ஒரு முகமூடி!
தன்னை
தற்காத்து கொள்வதாய் எண்ணி
இயற்கை குணத்தை மறைத்து
செயற்கை மூடிகளை மாற்றுவதால்
தன் இயல்பான குணமும் மனமும்
இருளடைவதை அறிவதற்கு
வாய்ப்பில்லாமல் போவதை
உணர்வதில் தடுமாற்றம்.
எதற்குதான் இப்படியான
தினம் ஒரு மாற்றம்
உண்மையும் பொய்மையும்
ஒருபோதும்ஒற்றுமையாது
உள்ளமறிந்தபோதும்
ஒத்துக்கொள்வதில்லையே
நிலை மாறும் மனது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.