நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மறந்தமைக்கு மன்னிப்பாயா


உன்னைவிட்டுப் பிரிந்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளடி
நீதான் எனது முதல்தோழி
நீதான் என் முதல் கனவு
என்னை நான் உன்னிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன்
உன்னால்தான் எனக்கு இந்த எழுத்தோவியம்
மிளிர்ந்து என்னிலிருந்து மேலோங்கி 
என்னை எனக்கே வெளிச்சமிட்டு காட்டியது..

2009 தில் உன் வலையில் விழுந்தேன்
உன்னை ஆரத்தழுவினேன்
என்னை உன் வலைதளத்தில் வலம்வரச்செய்தாய்
என் எழுதுலக வாழ்வுக்கு வழிவகுத்தாய்…

உன்னால் எனக்கு கிடைத்த பொக்கிஷங்கள் பலபல
உறவுகளாய் நட்புகளாய் சொந்தங்களாய் விருதுகளாய் பாராட்டுகளாய் பலமேடைகளாய்

உன்னைமறந்து 
இத்தனைநாள் இருந்தமைக்கு
வருந்துகிறேன் 
உன்னுள் கொட்டிவிடுவேன் 
என் சுகதுக்க சந்தோஷ வருத்தங்களை
நீதான் என் மனவெளி
இனி
நமக்குள் வேண்டாம் இடைவெளி
வந்துவிட்டேன் மீண்டும் உன்னுள்
இழுத்துக்கொள் என்னை உன் வலைக்குள்..

என்னை இணைத்துக்கொண்டவள் நீ
உன்னை இனி பிரியேன் நான்

அன்புடன் மலிக்கா🦋 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது