நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அதிர்ச்சியூட்டிய சம்பவம்.



போனில் பேசப்பேச திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும், இருந்தது. அன்றிரவே அப்பெண்ணிடம் மெதுவாக விசாரிக்க. அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். அவனுடைய போன்நம்பரையும் தந்துவிட்டாள். அவன் விசிட்டிங்கில் இங்கு வந்திருந்தபோது, ஒரு புரோக்கிராமில் சந்திப்பு ஏற்பட அடுத்தடுத்து ஓரிருமுறை சந்தித்ததில் பலக்கம் ஏற்பட, அதுவே தொடர்கதையாக, இவளின் வசதிகளை அறிந்துகொண்டு ஊருக்குபோன அவன் அங்கிருந்துகொண்டு மிஸ்கால் அடிப்பதும், இங்கிருந்து இவள்போன் பேசுவதும் அதுவே தொடர்கதையாகிவிட்டது, முடிவில் முடிந்தவரை சுருட்டிக்கொண்டு அவளை வீட்டைவிட்டு ஓடிவரசெய்வதே அவனின் திட்டம். அனைத்தும் வெளிவந்துவிட உடனே ஊரிலிருப்பவர்களிடம் போன்செய்து இப்படி இப்படியென விபரம் சொல்லி விசாரிக்கவேண்டிய வகையில் விசாரியுங்கள் என சொல்லபட்டதாம். 

 அங்கும் துரித நடவடிக்கை எடுத்ததில், அவனிடமிருந்து வந்த பதில்அதர்ச்சியை தந்ததாம் அதாவது இது எந்த பெண் என்று, அப்படியென்றால் இன்னும் எத்தனைபெண்ணோடு  உனக்கு தொடர்பு என விசாரிக்கப்பட  இவளோடு சேர்த்து 3 என அவன் சொல்ல.தம்பிபுள்ளையாண்டான் வசமாக மாட்டிக்கொண்டான். எதற்காக இப்படி செய்தாய் என கேட்டதற்க்கு எல்லாம் காசிற்காகதான் அதனால்தான் வசதியான வீட்டு பசங்களையாக தேர்வுசெய்தேன் என சொல்லியிருக்கான்.மற்ற பெண்களின் பெற்றோருக்கும் போன்கள் மூலம் தகவல்சொல்லப்பட, அவர்களுக்கு கிலிபிடித்து உடனே அங்குவர, சட்டப்படி அவனை என்ன செய்யனுமோ அதை செய்யச்சொன்னதாக சொன்னார்கள்.அதை இப்பெண்ணிடம் சொன்னபோது அவள் நம்பவில்லையாம்,உடனே அவனிடம் சொல்லி அவனையே போன் செய்யசொன்னபோதுதான் நம்பியிருக்காள்.இவைகளைதான் அவர்கள் என்னிடம் போனில் சொல்ல நான் திகைத்தது.

சொன்னதோடு மலிக்கா நீங்களும் அவளிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்றார்கள் நானும் அவளிடம் பேசினேன்.குட்டிமா வாழ்க்கையென்பது ஒருமுறைதான் அதை கண்ணியமான முறையில் வாழவேண்டும்,அது நாம் தேர்ந்தெடுக்கும் முடிவில்தான் நம்முடைய வாழ்க்கை எப்படியிருக்கும் என தீர்மானிக்கப்படும், அழித்து அழித்து எழுத இது காகிதமல்ல வாழ்க்கை. மனிதராய் பிறந்த அனைவரும் தவறுகள் செய்யாமலில்லை,தவறுகள் செய்வது மனிதவாழ்வில் சகஜம், ஆனால் அது தவறு என உணரும்போதும் உணர்த்தப்படும்போதும் அதன் பக்கம் செல்லாதிருப்பதே நமக்கு நலம்.

நீ படிக்கும் புத்திசாலிப்பெண், சிந்தித்து யோசித்துபார் நான் சொல்வது எல்லாமே உனக்கு புரியும் என்றேன்.தெரியாமல் செய்துவிட்டேன் ஆண்டி இனி இதுபோன்று நடக்கமாட்டேன். படிப்பில் கவனம் செலுத்துவேன் பிராமிஸ் ஆண்டி என்ற அந்தகுரலில் குழந்தையின் தேம்பல் கேட்கவே எனக்கும் அழுகை வந்துவிட்டது. பாவம் நாம் செய்தது சரியா? நாம் இந்த சின்னபெண்ணுக்கு தொல்லைகள் கொடுத்துவிட்டோமா என்று நினைத்தபோது, உடனே உள்ளே ஒருகுரல் நீ சொல்லவில்லையென்றால்தான் அக்குழந்தை கஷ்டத்தில் மாட்டியிருக்கும் என மனதுக்குள் ஒலிக்கவே ”சரிமா தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சி, இனி இறைவன் நல்லதையே நாடுவான், நல்லவழியைக்காட்டுவான் கவலைபடாமலிரு” என்று சொல்லியபோது சரி ஆண்டி அம்மாவிடம் போனைதரேன் என கொடுத்துவிட்டாள்.

அவர்கள் போனை வாங்கி மலிக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை நீங்கள் மட்டும் இதை மறைத்திருந்தால் அல்லது நமக்கென்ன என்றிருந்தால் எங்களின் குழந்தைகளின் நிலை என்னவாகியிருக்கும்,
உங்களை நாங்கள் எந்நாளும் மறக்கவேமாட்டோம்.என உடைந்து அழுதார்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.இனி சற்று கூடுதல் கவனமெடுத்து கவனித்துக்கொள்ளுங்கள்.என அவர்களுக்கு வேண்டிய சில அறிவுரைகளை சொல்லிவிட்டு அல்ஹம்துல்லில்லாஹ் என இரண்டு ரக்காயத் தொழுதுவிட்டு துஆக்கேட்டேன்.

பெற்றோர்களே! அறிவுரை சொல்லுமளவிற்க்கு எனக்கு அருகதையிருக்கா எனத் தெரியாது. ஆனபோதும் சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லவேண்டியதை சொல்லித்தான் ஆகனும்.
நீங்கள் பெற்றடுத்த பிள்ளைகள்தான் உங்களை மீறிவிடாது என்ற எண்ணம் இருக்கலாம் அதை மிகைப்படுத்திவிடாதீர்கள் அதுவே அவர்களுக்கு சிலநேரம் வரம்பு மீறவும், அதன் பாதிப்பால் நம் பெற்றோர்கள் நமக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை பாழ்படுத்திவிட்டோமென்ற குற்றவுணர்வையும் ஏற்பட வைத்துவிடாதீர்கள்.

பொது இடங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்லும்போது சற்றல்ல மிகவும் கவனமாக இருங்கள்.அலைபாயும் வயதில் அணையை மீறிடாதவறு அதேசமயம் நம்முடைய செயல் அவர்களை எவ்விததிலும் பாதித்திடாதவாறு அவர்களை கண்கானியுங்கள்.அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையிலில்லை நம்கையில்தான். அவர்களாக முடிவெடுக்கும் காலம்வரும்போது, அது சரியா? தவறா? எனப்பாருங்கள் நல்லதென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். கெட்டதென்றால் எடுத்துச்சொல்லுங்கள். பெற்றோராகிய நம்மீது பொறுப்புகள் அதிகமிருக்கு. எனக்கும் திருமணம் ஆகிவிட்டது நானும் குழந்தை பெற்றுவிட்டேன் என்பதற்காக மட்டுமல்ல. இது ஒரு அற்புத வாழ்க்கை.இதை நாமும் வாழ்ந்து அதை நம் சந்ததிகளையும் சிறப்பாக வாழவைத்துப் பார்ப்பதே நம்முடைய மிகப்பெரிய கடமை. அதையுணர்ந்து செயல்பட்டால் நம்குழந்தைகள் மிகசிறப்பாக வாழ்வதோடு அவர்களுடைய சந்ததிகளையும் சிறப்பானதாக உருவாக்குவார்கள் என்பது என் கருத்து.

இதில் சில சம்பவங்களை பலர் நலம்கருதி எழுதவில்லை. நடந்தவைகள் நடந்தைகளாக தொலையட்டும் இனி நடப்பவைகள் நல்லவைகளாக நானிலம் போற்றுபவைகளாக நடக்கட்டும். ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

முகவரியை தொலைக்கத் துடிக்கும் மொட்டுக்கள்..


வாங்க வாங்க என்ன சொல்லபோகிறேனு நினைக்கிறீங்க!அது படித்தபின் தெரியுமுன்னு நினைக்கிறேன்..

தற்கால நாகரீக வளர்ச்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா என மனசாட்சியை மறைத்து வாழ நினைப்பவர்களுக்கு இது சாதாரணம்தான்.
ஆனால் மனமும் உடலும் எக்காலமும் வகைபடுத்தப்பட்ட வரைமுறைக்குட்ப்பட்டு வாழ நினைபோருக்கு இது சாதாரணமல்ல

நவநாகரீகத்தின் வளர்ச்சி, நாகரீகமற்ற மோகம், இதெல்லாம் மிக சர்வ சாதாரணமாகிவிட்டது இன்றைய காலத்திலும். இண்டர்நெட் மூலமும்
முகநூல் அதாவது பேஷ்புக். மற்றும் இணைத்தின் வாயிலாக தொடர்புக்கொள்ளப்படும் யாஹூ. கூகுள்.எம் எஸ் என்.ஸ்கைப்பி.மற்றும் மற்றவரை தொடர்புகொள்ள ஏதுவாக அதுவும் பல சமயம்  ஃப்ரியாக கிடைக்கப்படும் அனைத்தும்  இவைகள் தற்காலத்தின் மிக மிக அவசியமான ஒன்றானதாக ஆக்கப்பட்டுவிட்டது. எந்த ஒன்றையும் நாம் கையாளும் விதத்தை, மற்றும் அதைனை செயல்படுத்தும் முறையை தவறாக படுத்த ஆரம்பிக்கும்போதுதான் அது நமக்கே ஆபத்தாகவும், நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பாகவும் ஆகிவிடுகிறது.

இன்றய தலைமுறையினருக்கு யாரும் எதுவும் கற்றுகொடுக்கவேண்டிய அவசியமில்லை எல்லாம் தாமாகவே தெரிந்துக்கொள்ளும் ஆற்றல்கள் உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி எல்லாம் தாமாகவே செயல்படும்போதுதான் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என அறியாமலேயே பலநேரம் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இதில் பெற்றோர்களின்  அலச்சியப்போக்கும்,தன் குழந்தைதான் அது  எந்நிலையிலும் தவறே செய்யாது,  என அதிகபட்ச நம்பிகையையும் அவர்களின்மேல் திணித்துவிட்டு அவர்கள் அவதியுறும்போது, வேதனைபட்டு அவர்களையும் வருத்தி தாமும் வருத்தப்படுவது நிகழ்காலத்தில் நடந்துக்கொண்டிருக்கும் ஒன்று .

”அதற்காக பெற்ற பிள்ளைகளை நம்பாமல் அவர்களை கண்காணித்துக் கொண்டேயிருக்கமுடியுமா? இது இன்றைய பெற்றோர்களின் கேள்வி. ”அப்படியில்லை” அவர்களின் மேலும் எப்போதும் ஒரு கண்யிருக்கட்டும்.கவனிப்பு இருக்கட்டும் ”அதையும்மீறி நடக்கிறதே என்ன செய்ய” நம்மைமீறிய செயலுக்கு நாம் காரணமில்லை எனும்போது அதை எதிர்த்துபோராட துணிவும் எவ்வழியில் சென்றால் அதற்கான தீர்வுகாணலாம் என்ற தெளிவும் இருக்கவேண்டியதும் எடுக்கவேண்டியதும் நம்மிடமே!

”சரி அப்படி எப்படிதான் அவர்களை கண்காணிப்பது” கண்கொத்திப்பாம்பாகவா?செல்லுமிடமெல்லாம் கூடவே சென்றா? எந்நேரமுமும் நோட்டம் விட்டுக்கொண்டே அலைந்தா?
 அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.இருந்தாலும் சில சமயம் அப்படி இருப்பதிலும் தவறில்லை. எப்போது நமது குழந்தைகளுக்கு 10 வயது ஆரம்பிக்கிறதோ! [தற்காலத்தில் அதுவே ஜாஸ்தி என நினைக்கிறேன்.
அதற்கு முன்பே] அதிலிருந்து 20 வயது வரை மிக மிக அக்கரைகொள்வதும்,அவர்கள்மீது தனிகவனம் செலுத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை.அதன்பின் அவர்களுக்கே புரிதல் வரும். நல்லது எது? கெட்டது எது? என பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்துவிடும் அதுவரை,

அவர்கள் என்ன செய்கிறார்கள். யாரோடு தொடர்பு வைத்துள்ளார்கள்.
எத்தனை தோழமைகள் உண்டு.யார் யார் வீட்டு இவர்கள் போவார்கள். யார் யார் இவர்களைத்தேடி வீட்டுக்கு வருகிறார்கள்.எதில் அதிகம் அக்கரை கொள்றார்கள். அது ஏன்?அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது. கணினியில் இருக்கையில் இவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கு தானக மெல்லச்சிரிக்கிறார்களா! கணினியில் எத்தனை அக்கோண்ட் வைத்துள்ளார்கள்.தொலைபேசியில் எந்நேரமும் கையிலிருக்கிறதா? கேம் விளையாடுவதாக சொல்கிறார்களா? எனஅவர்கள் அறியாமலே அவர்களை கண்டும் காணாததுமாய் சிறு நோட்டம் அவ்வளவுதான்.

தற்கால சூழலில் தாயும் தந்தையும் வேலைக்கு சென்றுவிட அல்லது அவர்கள்கூடவேயிருந்து அவர்களை கவனிக்காது எல்லாம் ஒருநாள் தெரியதான் போகுது, வரத்தான் போகுது, பார்க்கதான் போகிறர்கள் என வெட்டிப் பேச்சி பேசிக்கொண்டு குழந்தைகளின் நிலைகளை, அவர்களின்

செயல்பாடுகளை அறியத்தவறிவிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை என்பதைகூட சிலர் உணர்வதேயில்லை. கன்னியென்றில்லாமல் கல்யாணம். மலடி என்றில்லாமல் மழலைகள். இதுபோல் வாழும் குடும்பங்களை ஏராளம் கண்டாச்சி.நேருக்கு நேர் உபதேசமும் செய்தாச்சி. இதுவல்ல வாழ்க்கை தன்குழந்தை தன்கண் முன்னே சீரழிவதை பார்ப்பது எவ்வளவு அறிவீனம் கேட்டால்.தற்காலத்தின்மேல் பழி. காலச்சூழல்மேல் குற்றம். தாமாகபோய் இடித்துக்கொண்டு நிலை இடித்துவிட்டதென்றும், வழியில் கிடந்த கண்ணாடிதுண்டு தெருவில் செல்லும்போது தன்னை தேடிவந்து குத்திவிட்டதென்றும், நாக்கு கூசாமல சொல்வதுபோல்.

’சரி சரி அப்படி என்ன நடந்துவிட்டது இப்படி அளக்கிறாய் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். நடந்த ஒரு சம்பவம் இது மற்றவருக்கு பாடமாக அமையத்தான் இதை எழுதுகிறேன். தம் குழந்தைகள்போல்தான் அடுத்தவர்கள் குழந்தையும். இதை படித்துவிட்டு மற்ற பெற்றோர்கள் உசாராகயிருக்ககூடும். இருக்கவேண்டும் என்ற அந்த ஒரு நல்ல நோக்கத்திற்காகவே இதை எழுதும்படியாக என்னைத் தூண்டியது.

ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது. அங்குபலதோழிகள் மற்றும் எங்கங்கோ பார்த்து பலகிய மனிதர்கள் என எல்லாம் வந்திருந்தார்கள்.எல்லாரும் அங்கு மீண்டும் அறிமுகமாகிக்கொண்டோம். நிகழ்சிகள் நடந்து கொண்டிருந்தபொழுது எனதுபோன் ஒலித்தது பேசிவிட்டு வைக்கும்போது. வந்திருந்த ஒருவரின் பெண்குழந்தை வயது 13-14.க்குளிருகும் ”ஆண்டி உங்க மொபைலை கொஞ்சம் பார்க்கலாமா என்றாள்” ”ஓ பார்கலாமே என்றேன்” கொடுங்கள் என வாங்கிகொண்டாள் ”சரி கால் வந்தால்மட்டும்தா” என சொல்லிவிட்டு போனைக் கொடுத்தேன்.ஒரு மணிநேரத்திர்கு பின் ’ஆண்டி ஸ்விச் ஆஃபாயிடுச்சி’ என திருப்பித்தந்தாள்.”அப்படியா சார்ச் போயிடுச்சிபோல் என சொல்லி மீண்டும் சார்ச் காரில்தான் போடனும் போட்டுக்கொள்றேன்’ன்னு வாங்கிக்கொள்ளவும், நிகழ்ச்சியும் முடியவும் சரியாக இருந்தது.வீடுவந்துசேர இரவு 2 மணியானதால் போனை சார்சில் போட்டுவிட்டு உறங்கியாச்சி.

மறுநாள்காலை வேலைகளை முடித்து விட்டு வந்தமர்ந்து போனை ஆன் செய்து போனிலிருந்து பிரவுசருக்கு போனபோது பேஷ்புக் ஓபனாகியிருந்தது, அதில் ஒரு மெசேஜ் இருந்தது. .அடடா நமக்கு யாரோ அனுப்பியிருக்காங்களேன்னு ஓப்பன் பண்ணிபார்த்தாஆஆஆஆஆஆஆஅ ஆடிவிட்டேன். கணவன் மனைவிபோல் வார்த்தைகள். மெசேஜ் முடிக்கும்போது மாலை யாஹுவில் எப்போதும்போல வா என முடித்திருந்தது.மனதெல்லாம் படபடக்க சே யாருடா இது நமக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கா! அதுவும் தங்கிலீஸில் என தேகம் நடுங்கியது ஐடியிலிருக்கும் பேரை பார்க்கமலே. சற்று சுதாரித்து ப்ரொபையில் வந்தால் போட்டோ மாறியிருக்கு. பெயரும் வேறாகயிருக்கு. ’ஆகா இது நம்மளோடது இல்லடி மல்லின்னு மனசு சொல்ல சில்லுன்ன நீரில் நீரோடையில் குளிச்சதுபோலான மனசு லேசானாது இருந்தாலும்,

இதுயாருன்னு கண்டுபிடிக்கனுமேயென மூளை முடுக்கிவிட அதிலுள்ள மெசேஜ்களை, ஒன்றல்ல இரண்டல்ல 2,429. இந்த ஐடி யாரோடதுன்னு யோசிச்சப்ப, கிளிக் ’அட நேற்றிரவு நம்மிகிட்டபோன் வாங்கினாளே ஒரு குட்டிபெண்’ ச்சே சே அவளுக்கு எப்படி இப்படி மெசேஜ்வரும் அதுவும் இந்த ஐடியில் இருப்பது அவள்பேரும் அல்லவே, தங்கியிருக்கும் நாட்டின் பெயர்கூட வேறு அல்லவா போட்டிருக்கிறது என ஒரே குழப்பம். சரி நாமளே குழம்பிக்கிட்டு இருப்பதில் அர்த்தமில்லை, ஒரு ஐடியா செய்வோமுன்னு கணினியை ஓப்பன் செய்து என் ஐடியிலிருந்து இதே ஐடிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். என்ன குட்டிமா யார்யிது ஃபிரண்டா என கேட்டு யாரிடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்ததோ அதையும் இணைத்து அனுப்பினேன்.அனுப்பிவிட்டு நாம் நினைப்பது சரியாக இருக்கக்கூடாதுன்னும்,அது அந்த குட்டிப்பெண்ணாகவும் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டபோதும் மனதில் ஏதோ வலி ஏற்ப்படுத்தியது.

 காலை மணி 10.50 மெசேஜ் அனுப்பினேன். பகல் 12.28 அதற்கு பதில் வந்தது.அந்த 1.1/2 மணிநேரம் நான் மனதிற்க்குள் பட்ட வேதனைகள் சொல்லில் வடிக்கமுடியாது.தன் குழந்தை மட்டுமல்ல எந்த ஒரு குழந்தையும் சீரழிவதை தாய்மை உணர்வுள்ள யாரும் விரும்பமாட்டார்கள்.வந்த மெசேஜை படித்ததும் அழுதேவிட்டேன்..
’அச்சோஓஒ ஆண்டி தெரிஞ்சிபோச்சா உங்களுக்கு ப்லீஸ் ஆண்டி அம்மாகிட்ட சொல்லிடாதீங்க. அவன் இன்னவன், இங்கு வந்திருந்தபோது இப்படி பழக்கம். ப்லீஸ் ஆண்டி ப்லீஸ் ஆண்டி. என எழுதியிருந்தாள். நாம் சின்னகுழந்தையின்னு நினைத்துக்கொண்டிருக்க அது வா! இப்படியென மலைத்துபோன நான் மரத்ததுபோல் ஆனேன். இந்தகாலத்து குழந்தைகள் படு புத்திசாலிகள் என எல்லோரும் மார்தட்டிக்கொள்றார்கள். புத்திசாலிகள்தான், இல்லையென்றால் பெற்றோர்களின் கண்ணில் மண்ணைதூவிவிட்டு,பலவிதங்களில் பலவாறாக நடிக்க தெரிந்திருக்கிறதல்லவா? தன்பெயர் தான்வசிக்குமிடம் என இருந்தால் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரிந்துவிடுமென.புது புது பெயர்களிலும் இங்கே வசித்துக்கொண்டு எங்கேயோ வசிப்பதுபோலும் கிரியேட் செய்யத்தெரிகிறதே? அப்படியென்றால் அவர்கள் புத்திசாலிகள்தான் நம்மைவிட பலமடங்கு படு புத்திசாலிகள்..

சரி அந்தபெண்தான் என உறுதியாகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம்.
அந்த கயவனிடமிருந்து எப்படி இந்த பெண்ணைகாப்பாற்றுவது.’என்ன நீயாக அவனை கயவனென்கிறாய் காதல் செய்கிறது தவறா?யென ஒருபுறம் கேட்பீர்கள். இது காதலல்ல.அதன் பெயரில் அந்த பெண்ணை கலங்கபடுத்த நினைக்கும் கொடூர எண்ணம்.அவன் அனுப்பியிருந்த மெசேஜிகளில் படிக்கப்பட்ட வார்த்தைகளும். சூட்சுமங்களும் ஒரு இளம்பெண் பலிகடா ஆகபோவது உருதியென்பதை வெட்டவெளிச்சமாக காட்டியது. இவளோ சிறுமி அறியாப்பருவம் ஆசைகளும் கனவுகளும் கண்ணிலும் மனதிலும் நிரம்பிவழியும் வயது. ஆசைவார்த்தைகூறி மயக்கும்போது மயங்கிடும் இளம் இளமை. இதை தவறாக பயன்படுத்துவதுபோல் அமைப்பட்ட அவர்களின் தொடர்பு அத்துமீறுவதற்க்குள் இறைவன் காப்பாற்றவேண்டும்.

இவர்களிருவரும் இருப்பதென்னவோ நாடுகள் கடந்து, அவன் அங்கும். இவள் இங்கும்.ஆனால் இவர்களை இணைத்தது எது இணையம்தான். நல்லவற்றிக்காக கண்டுபிடிக்கபடும் அனைத்தையுமே மனிதன் கெட்டவைகளுக்குதான் அதிகம் உபயோகப்படுத்துகிறான். இது கண்டிபிடித்தவனின் தவறல்ல, அதை கையாளத்[கடைபிடிக்கத்]தெரியாதவனின் தவறு. ஓகே. அடுத்து விசயத்துக்கு வருவோம். என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என மதியம்.போய் மாலைவரை யோசனை. இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான் என அறிவித்தது மூளை. ”சரி நாம் போன் செய்து அந்த தாயிடம் சொன்னால் தவறாக எடுத்துக்கொள்வாரோ”. இது சராசரி மனித மனது. ’ம்ஹூம் எது சொன்னாலும் சரி உடனே போனைபோடு என்றது அறிவுள்ள மூளை’
மாலை 6 மணி அந்த தாயிற்கு போன் செய்தேன்.

முதலில் நலம்விசாரித்துவிட்டு பக்கத்தில் பசங்க இருக்காங்களா”ன்னு கேட்டேன் ஆமாம் என்றார். அவ்விடத்திலிருந்து வேறுயிடத்திற்க்கு  போங்கள் நான் பேசுவதோ நீங்கள் பேசுவதோ பசங்களுக்கு தெரியவேண்டாம் என்றேன். உடனே சரி ரூமிற்கு வந்துவிட்டேன் சொல்லுங்கள் என்றார். விசயத்தை சற்று தயக்கமாகவே சொன்னேன். ’என்னது அப்படியா! அப்படியெல்லாம் இருக்காது மலிக்கா’ ’இல்லைமா உண்மைதான்’ சரி எப்போ எப்படின்னு நிறைய கேள்விகளும் அதற்கான பதிலகளும் பரிமாறப்பட்டது. ஆதாரம் கேட்டார்கள்.இன்ன இன்னவென்று சொல்லி. கடைசியாக அன்று சந்தேகத்தின்பேரில் நான் அப்பெண்ணிற்கு அனுப்பிய மெசேஜும் அதற்கிட்டபதிலையும் சொன்னேன். அவர்கள் வீட்டில் நடந்த விசயங்கள் பலவற்றை அவர்களுக்கு நான் சொல்ல அதிர்ச்சியுற்றார்கள். ஏனெனில். நாங்கள் பார்த்துக்கொண்டதே பல மாதங்களுக்கு மேல் வருடத்தை தொட காத்திருந்த சமயம்தான் அன்று நாங்கள் சந்தித்தது.

அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வசதி வாய்ப்புகளை குழந்தைகள் தவறாக பயன்படுத்திக்கொள்ள நீங்களும் ஒரு காரணம், அதே சமயம் குழந்தைகளையும் கவனியுங்கள் கண்காணியுங்கள் என்றேன். இந்த வயதில் அனைவரும் செய்யும் தவறுதான், எந்நேரமும் அவர்களை கண்காணித்துக்கொண்டேயிருக்கமுடியுமா மலிக்கா’அதற்குதானே நாம் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தை அடைந்துள்ளோம், முழு பொருப்பும் நம்மிடத்தில்தானே இருக்கிறது. அதுமட்டுமில்லை இன்னொரு முக்கியமான விசயம்  நான் உங்களுக்கு போன் செய்ததே  இன்னும் கொஞ்ச நாளில் உங்க பெண் எஸ்கேப் ஆக தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதையறிந்துதான் என்றபோது, ஆடிபோய் ஒரே அழுகை என்ன சொல்லுறீங்க மலிக்கா’ ’ஆமாம்மா அந்தளவுக்கு வளர்ந்துவிட்டது அறியாதன்மை. தற்கால சூழல் அறிந்திருந்தும். படித்திருந்தும் அதை வளர்த்துவிட்டது உங்களின் அறியாமை.மற்றும் கவனமின்மைதான்.

ஆகவே உங்க குழந்தையை கண்டிகிறேன் என்ற பெயரில் துன்புறுத்தவோ! அல்லது அடிக்கவோ! வேண்டாம் நிதானமாக எடுத்துச்சொல்லுங்கள் இது அதுவல்ல என்பதையும், அதற்கான வயதோ மனநிலையோ உனக்கு தற்போதில்லையெனவும் அவளுக்கு புரியவையுங்கள். தாயால் முடியாது எதுவுமில்லை, உங்களவரிடமும் எடுத்துச்சொல்லி இருவரும் சேர்ந்து நல்லமுடிவெடுங்கள்.  அப்பெண்ணை கண்டிக்கிறேஎன்யென அதிகமாக மிரட்டினால் அது உங்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். முதலில் உங்களை பொறுமைபடுத்திக்கொள்ளுங்கள். பிறகு அவளிடம் மிக பக்குவமாக எடுத்துசொல்லுங்கள் என்றேன். மிகவும் உடைந்த குரலில் அழுது தேம்பினார்.ஆறுதலும் எனக்குதெரிந்த சில அறிவுறைகளையும் கூறிவிட்டு. அவசியமேற்ப்பட்டால் நேரில் வந்து அவளிடம் எடுத்துச்சொல்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

மனத்திலிருந்த பாரம் சற்று இறங்கியதுபோல் தோன்றவே இறைவனிடம் கண்ணீர் மழ்க துஆக்கேட்டேன்.யாஅல்லாஹ் எவ்வித சங்கடங்களுமின்றி இந்தபிரச்சனையை தீர்த்துவைப்பாயாக! என்று. மறுநாள் மாலை 5 மணியிருக்கும் அந்தாயிடமிருந்து போன் அவர்கள் பேசப்பேச அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டேன் .....

                                                                                                          தொடரும்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பட்டாம்பூச்சியின் தேடல்..




ட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்

ண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்லவருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!

ளைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!

ருடிய விரல்
வெடுக்கென வலித்தது
களைப்பு நீங்கிய பட்டாம்பூச்சி
கண்ணடித்து காற்றில் மிதந்தது
கைவிரல்வழியே  இதயமும் கனத்தது..


அமீரக தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

ஓசையின் எதிரொலி- 300 வது பதிவோடு..

300, வது பதிவு.

இது என்னுடைய 300.வது பதிவு என்பதை தெரிவித்துகொள்வதோடு மிகவும் மகிழ்கிறேன். நான் தானாயிது என என்னையே கிள்ளிப்பார்க்கும் தருணமாய்,பல தருணங்கள் அமைந்துவிட்டது.நீரோடையென்னும் வலைதளம் ஆரம்பித்து அதில் கவிதைகளை எழுதி. உங்கள் அன்பையும் பெற்று. உணர்வுகளின் ஓசையெனும் நூலும் வெளியிட்டு, அப்பப்பா நினைக்கவே மனம் சந்தோஷத்தில் திலைக்கிறது.இன்னும் பல நற்ச்சிந்தனையுள்ள கவிதைகளையும் நிறைய நிறைய எழுதவேண்டும் அதற்கு உங்கள் அன்பு என்றென்றும் வேண்டும்.

இதோ கீழேயிருக்கும் வாழ்த்துக்களும். கவிதைகளும். எனது “உணர்வுகளின் ஓசை” கவிதை நூலுக்காக நிறைய கிடைக்கப்பெற்றது. அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு.  அடுத்தடுத்து பதிவுகளில்  மற்றவைகளையும் வெளியிடுவேன்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

என்னையே நான் உணர்ந்தேன்
உணர்வுகளின் ஓசையின் மூலம்
என்னையே நான் உணர்ந்தேன்
உணர்வுகளின் ஓசையில் அன்பை உணர்ந்தேன் .....

உணர்வுகளின் ஓசையில் எந்தன் உயிரை உணர்ந்தேன் .....
உணர்வுகளின் ஓசையில் பிரிவின் வலியை உணர்ந்தேன் ....

உணர்வுகளின் ஓசையில் பிரிவிலும் ஓர் வாழ்வை உணர்ந்தேன் ....
உணர்வுகளின் ஓசையில் என்னையே நான் உணர்ந்தேன் ....

Best Regards,
S.A.K.MUSABBIHU
Al Tawayeen.
Fujairah, U.A.E.
---------------------------------------------------------------
அன்பு சகோதரிக்கு என் இனிய வாழ்த்துகள்.

அசன் முகம்மது ஜின்னா
திருவாரூர் [சென்னை]

--------------------------------------------------------------------
திருமதி. மலிக்கா ஃபாரூக் அவர்களின்
உணர்வுகளின் ஓசை
காவிரிமைந்தனின் வாழ்த்துரை..

காலக் கணக்கெடுப்பில்
வாழும் மனிதர்களில் - புவி
ஆளும் மன்னர்களைவிட - மொழி
ஆளும் கவிஞர்களே மிஞ்சுகின்றனர்!

கவிதைத் தூரிகையைக்
கையிலெடுத்து வரையும்
காரிகைகள் மிகக்குறைவு
உணர்வுகளின் ஓசையெனும்
உங்களது படைப்பில்
ஒவ்வொரு கவிதையுமே

ஓசையின்றி பேசுகிறது!
விதவிதமாய் தலைப்பிட்டு
விரிந்திருக்கும் கவிமலர்கள்
பலவிதமாய் உணர்வுகளை
பதிவுசெய்து விடுகிறது!

அறிவின் கூர்வாள்
முனைந்து சுழலும்
அரிச்சுவடி காண முடிகிறது!
உணர்வின் வடிகால்
கவிதை என்கிற
உன்னதம் பொங்கி வழிகிறது!
வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
15.04.2011

என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது - ருவைஸ், அபுதாபி..
---------------------------------------------------------------
அன்பு மலிக்கா
ஆஹா அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மலிக்கா
சிறப்பாகச் செய்த்துள்ளீர்கள்
அனைத்து மகிழ்ச்சியும் உங்களை வந்தடையட்டும்.

அன்புடன் புகாரி 
கனடா
---------------------------------------------------
அக்கா...
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
முதல் முத்து எடுத்ததற்கு வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய முத்தெடுங்கள்.
உங்கள் புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்.

பாசமுடன்,
சே.குமார்
------------------------------------------------
மாஷா அல்லாஹ். ரொம்ப சந்தோஷம். மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அன்புடன்
நவாஸ்
--------------------------------------------------
நாலாவது படித்தவரென்றாலும்
நூல் ஆவது செய்கிறார்
பெண்ணால் எழுத முடியுமா
முஸ்லிம் பெண்ணால் எழுத முடியுமா
என்ற முக்காட்டை தகர்த்தெறிந்து இவர் தம்
பென்னால் எழுதுகிறார் கவிதைகளைப்
பொன்னா(ய்)ல் எழுதுகிறார்
எல்லா உயிரும் ஒரு காலத்தே
மலடாவது இயற்கை

எழுத்தாளன் மட்டுமே மலடாவதில்லை
இறுதிவரை என்பது பெருமை
அதனால் தான் அவன் இறுதி வரை பிரசவிக்கிறான்
கற்பனைக் குழந்தை கையில் தவழ
அக்குழந்தை கண்டு நாமெல்லாம அகமகிழ
ஈன்ற தாய்க்கு வாழ்த்துக்கள்

With best regards
 கமால்
துபை
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்
மிக்க சந்தோஷம், சொல்ல வார்த்தையில்லை, தாங்கள் திறமையை உலகுக்கு பறைசாற்றும் ஒரு பொன்னான நாள், எம் சொந்தம் மற்றும் ஒரு சாதாரண குடும்ப பெண்ணின் திறமை நினைத்து பெருமிதம் அடைகிறேன். அல்லாஹ் மேலும் தாங்களுக்கு கல்வி ஞானத்தை கொடுத்து நம் சமுதாய பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கசெய்வானாகவும்.

மேலும் நிறைய பயனுள்ள புத்தகங்கள் வெளியிட்டு சமுதாய முன்னேற்றத்திற்கு வித்திட வாழ்த்துக்கள்...

அன்புடன்
மாலிக்
ஃபாத்திமா மாலிக்.
------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

அட, எவ்வளவு சந்தோஷமான நிகழ்ச்சி. அல்லாஹ் போதுமானவன். கனவு கைகூடும் நாள். இதுபோல பல புத்தகங்கள் எழுத இறைவன் துணைநிற்கட்டும் மலிக்கா.
இன்ஷா அல்லாஹ், இன்னொரு நாள் உங்களை வீட்டில் சந்திக்கிறேன். இதற்கு ட்ரீட் அப்போ தந்துடுங்க!!

வஸ்ஸலாம்.
அன்புடன்
ஹுசைன்னமா
------------------------------------------
அன்புள்ள சகோதரி, துஆ ஸலாம்.

தங்களது முதல் நூல் மிகச் சிறப்பான முறையில் வெளியீடு காணவுள்ள தகவல் மகிழ்வளிக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

தங்களது 'தந்தையார்' என் சகோதரர் டாக்டர் ஜின்னாஹ் ஷர்புத்தீன் அவர்கள் விழாவில் கலந்து கொள்வதும், மிகச்சிறந்த பல தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொள்வதும் இன்னொரு கூடுதல் சிறப்பு.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு மென்மேலும் சிறப்புகள் அளித்து வாழ்வாங்கு வாழ அருள்பாலிப்பானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்

சகோதரன்
ஹிமானா சையத்.
சிங்கப்பூர்
---------------------------------------------
’நீரோடை’ வலைப்பூவில் பூத்த ‘உணர்வுகளின் ஓசை’ அனைத்து அமீரகத்திலும் ஒலித்து, பாலையை சோலையாக்கட்டும்.

அன்புடன்
அப்துல் கதீம்.
துபை
---------------------------------------------
அன்பு தோழி மலிககா அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமா தோழி.
வாழ்த்துக்கள்.உங்க ஒவ்வொரு வெற்றியையும் தாய்மை நெஞ்சோடு ரசிக்கிறேன் தோழி.வல்ல ரகுமான் நமக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் ஈர்ருலகிலும் குறையின்றி தர துவா செய்வோம் தோழி.

அன்புடன்
பிரோஷா
சென்னை
----------------------------------------------------
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு..

எதைக்கொண்டு நெய்தாய் வார்த்தைகளை
என்று கேட்பதற்கு விடாமல்
உணர்வுகளைகொண்டு நெய்துள்ளேன் என்று
உணரவைத்துவிட்டாய்.ஒவ்வொரு வரிகளும்
உள்ளத்தில் பதிந்தது உன்[னைப்] புன்னைகை கவிதைபோல
காலங்கள் கடந்தாலும் மனத்துக்குள் மணம்வீசும்
மல்லிகையின் கவிதைகள்.

அணிந்துரையை அருமையாய் வழங்கிய
அன்புடன் புகாரிக்கு அன்பார்ந்த பாராட்டுக்கள்.
வாழ்த்துரைகளை வளமாக வழங்கி நெஞ்சங்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

வாழிய நீ பல்லாண்டு
வானளவு கவிதைகளை படைத்துக்கொண்டு.
என்றும் உன்னை வாழ்த்திடுவோம்
எல்லாம் வல்ல கடவுளையும் வேண்டிடுவோம்..

விஜயன் [சாரதாவிஜயன்]
கன்னியாக்குமரி..
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
தனது அன்பாலும். வாழ்த்துகளாலும். கவிதைகளாலும் உள்ளப்பூர்வமாக வாழ்த்திய பாசநெஞ்சங்களுக்கு. மனமகிழ்வோடு கண்ணீர் மழ்க நன்றிகளை
அன்புடன் தெரிவித்துக்கொள்றேன்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஊக்கம் முக்கியம்.அதை நெஞ்ச்சாரதரும்போது.அதைவிட மகிழ்வுவேறிருக்கமுடியாது.
அதை சிறப்பாக செய்துவரும் தாங்கள் அத்தனைபேருக்கும் நான் கடமைபட்டவளாக உள்ளேன். என்றும் உங்கள் அன்பை எதிர்பார்க்கும் ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காரணத்தைத்தேடி..

ரைபுரண்டு ஓடும் எண்ணங்களையெல்லாம்
கடல் நீரில் கரைத்தபடி
கால்கடுக்க காத்திருப்பதின்
காரணங்கள் புரியவில்லை

ன்புகொண்ட
ஆன்மாவின் மனமுடுக்குகள்
அழுது புலம்புவதின்
அர்த்தங்கள் விளங்கவில்லை

நினைவுகளை சுமத்திச்சென்ற
நீ வருவாயென
நீரில் உலவியபடி
நெடுநேரம் காத்திருந்தபொழுது



ட்டிப்பார்த்த நிலவிடம்
ஏதேனும் தூதுசெய்தியுள்ளதாயென
ஏக்கத்தோடு கேட்டுப் புலம்பும்
புலம்பல்கள் புரியவில்லை

இப்படி
அர்த்தங்கள் புரியாத
அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு பதிலில்லாது

சைந்தாடும் கடலலையோடு
அசையாத கால்களிரண்டும்
அடிமனதில் நினைவுகளைமட்டும்
அசைபோட்டபடி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாரடா நீ...

 
அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

எங்கிருந்து வந்தாய்
என்னில் வந்து நுழைந்தாய்
என் தொப்புள்கொடி பந்தமா?-இல்லை
என் தூராத்து சொந்தமா?

எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
எனக்காக துவழ்கிறாய்
என்னிலிருந்து யோசிக்கிறாய்
என்னைமட்டும் நேசிக்கிறாய்

எது நம்மை இணைத்ததென்று
இன்றளவும் யோசிக்கிறேன்
இணைத்தது எதுவென்றபோதும்
நம்மை பிரிக்காத
வரமொன்றை யாசிக்கிறேன்

என்னை நீ நேசிக்க
உன்னை நான் சுவாசிக்க
ஒட்டும் உறவும் இல்லாமலே
ஒன்றாகி போனோம்
ஒளிவீசும் ஒளியாகி
உயிர் நட்பாக ஆனோம்...

முக்கியசெய்தி
இன்று மாலை 6.30 மணிக்கு
துபையில் தந்தை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின்
தீரன் திப்பு சுல்தான் காவிய வெளியீட்டுவிழா
சிவ் ஸ்டார் பவன்.கராமாவில் நடைபெற இருக்கிறது
அனைவரும் வருக
கவிநயம் பருகுக.. 

அப்புறம் என் [பாலோவர்ஸை] என்னை பிந்தொடர்பவங்களின் பட்டியலை காணவில்லையே யாராவது பார்த்தீங்கள்.[வெளிநாட்டுச் சதியா இருக்குமோ] அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது ப்லீஸ் ஐடியா தாங்க.. 



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மேடையேறிய விளையும் பயிர்.

கடந்த 8-4 2011அன்று மாலை ஸ்டார் இண்டர்நேசனல் ஸ்கூல் அரங்கத்தில்
தமிழ்துளி  யின். தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி நடந்தது.அதில் குழந்தைகளின் பல்வேறு நிழச்சிகளும்.பேசுப்போட்டிகளும் நடைபெற்றது அதற்காக  எங்களுக்கும் அழைப்புவந்தது. நிறைய குழந்தைகள் கலந்துகொள்கிறார்கள் அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்டது வரும் வெள்ளியன்று நிழச்சியென தகவல்தந்தார் இந்த அமைப்பின் தலைவி ப்ரியா. பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் தங்கள் மகனையும் பேசச்சொல்லுங்கள் என்றார். 
என்னபேசச்சொல்வது அதுவும் கடைசிநேரத்தில். சரி ”கவிதை வாசிக்கிறாயா என்றேன்” சரி மம்மி சொல்லிதாருங்கள் சொல்கிறேன் என்றார்”. சொல்லிகொடுத்ததும் உடனே மனப்பாடம் செய்துகொண்டார்.
தமிழ் எழுதப்படிக்கவே தற்போதுதான் கற்றுவருகிறார். இருந்தபோதும்,சொல்லிகொடுத்ததை அழகாக வாசித்து வந்தார்.

பேராசிரியர் பர்வின் சுல்தானா அவர்கள் சிறப்புவிருந்தினராக வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சு மிக அருமையாக இருந்தது.
எதிர்பாராதவிமாக நம்ம ஆசியாக்காவும் வந்திருந்தாங்க.ரொம்ப சந்தோஷம் சந்தித்திதுக்கொண்டதில் கொஞ்சநேரம் இருந்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
அப்புறம் இன்னுமொரு விசயம். எங்கள் மகனார் தனியாக ஒரு பிளாக் ஆரம்பித்துள்ளார். அவருக்கு நிறைய எழுதனுமாம். சரியென என் அக்கோண்டில் ஒரு பிளாக் கிரியேட்டிவ் செய்துகொடுத்தேன். வரும் கருத்திற்கு பதில்கொடுத்தால் அன்புடன் மலிக்கா என வருகிறதே மம்மி.அதனால் எனக்கு தனியாக ஒருபிளாக் கிரியேட்டிவ் செய்துகொடுங்கள் என்றார். அப்படியா நாம் ஏன் அவருக்கு  குறுக்கே நிற்கனுமுன்னு தனியாக ஒரு பிளாக் திறந்துகொடுத்துள்ளேன். அந்தகாலத்து மனிதர்களையும், மற்றும் அவர்களின் வரலாறுகள், செயல்பாடுகளை மிகவும் விரும்பிபடிக்கிறார்.எதனால். எப்படி.  இவர்களுக்கு தனிச்சிறப்பு வந்தது. என்ன செய்துள்ளார்கள்.அதற்காக அவர்கள் எவ்வளவு சிரமங்கள் மேற்கொண்டிருப்பார்கள் என ஆராய்கிறாராம்.
இதில் முக்கிய விசயமென்னவென்றால் அவர் எழுதும் மொழி நமக்கு புரியாது. நான் மச்சானிடமும். அவரிடமும்தான் கேட்டுகொள்வேன். என்னா மொழி  அதாங்க இங்கிலீஸூஊஊஊஊஉ.
அவர் எழுதுவதற்கு தாங்கள் அனைவரின் ஊக்கமென்னும் கருதுக்களையும் சொல்வதோடு உங்களுக்கு தெரிந்தவைகளையும் அவருக்கு புரியும்படி சொல்லிக்கொடுங்கள். இதோ அவரின் வலைதளம். சென்று பார்த்துவிட்டு அன்பைச்சொல்லுங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நிறைவேறா ஆசை!.


மூடிய விழிகளுக்குள்
மழையில் நனையாதிருக்க
முந்தானைக் குடைப்பிடித்தாள்
அன்னை
நனையாத போதும்
விழிகள் வடித்த
கண்ணீரில் நனைந்தது
அனாதை தேகம்
கனவில் தோன்றிய
காட்சிகள்
கண்திறந்து பார்க்கையில்
காணாது போகவே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

அன்பே!..

 நீ கொடுத்த
அழகிய மலரை
ஆத்மார்த்தமாய் நுகர்ந்தேன்
அதில்
உன்னுயிரின் வாசம் வீசியது
அது
என்னுயிரில் கலந்தது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது