கூட்டங்கள்
சந்தடிசாக்கில் சிந்துபாடும்
சாத்தான்கள்
அமைதியைநாடி அல்லபடும்
உள்ளங்கள்
அடிநாக்கிற்கடியில் அடிமைப்படும்
பேதைகள்
நியாயங்களைதேடி நிரம்பிவழியும்
வழக்குகள்
நீதிதவற போடப்படும் நியாயமற்ற
வாய்தாக்கள்
வரிசையாக ரேசனில்நின்று பசியைபோக்கும்
பாமரர்கள்
வரியேயில்லாமல் வாரிவாரி கொள்ளையடிக்கும்
பணபேய்கள்
சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி தொடர்ந்து நடக்கும்
கொடுமைகள்
சொன்னாலும் கொண்டாலும் தீராது என்பதே
உண்மைகள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்