நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

யாருமறியா ரகசியத்தை!



இருண்ட இரவுகளை
அலங்கரிக்கும் நட்சதிரமும்!

இரவல் ஒளிவாங்கி
இருளகற்றும் பால்நிலவும்!

மெல்லிய ஒளியில்
மிளிரும் இருளிரவும்!

இன்னல்களை சுமந்தும்
இன்பமுற்றதாய் நடிக்கும்,

வஞ்சணைகள் நிறைந்தும்
வாஞ்சைகளாய் உரசும்,

உள்ளமழுதும்
உதடுகள் சிரித்தும்

ஊரறியா! வேறு மனமறியா!
ஊளையிடும் இருதய மெளனங்களின்

இரகசியங்கள் அறிகின்றன
”இங்கிதம் பேணியபடி”



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது