நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்று மாறும்!!!!!



ஒரு [பஸ் ஸ்டாப்] பேருந்து நிலையத்தில்  இருஅம்மாக்கள் தங்களின் குழந்தைகளுடன் பஸ்ஸிற்காக நின்றுகொண்டிருக்கும்போது

எதிர்சுவற்றில் ஒட்டியிருந்த மோசமானபோஸ்டர்
ஒன்றைபார்த்த அந்தசிறுமி தன் அம்மாவிடம்
அம்மா அம்மா பாவம்மா அந்தஅக்கா ரொம்ப ஏழவீட்டு அக்காமாதரி இருக்குமா அதானாலதான் அவுக தங்கச்சியோட பாவாடையை
போட்டு இருக்காக ரொம்ப ரொம்ப சின்னதா இருக்குமா
அதப்போயி படம்வேற புடிச்சிக்கீறாங்கம்மா என்று தன் பிஞ்சிமுகத்தில் பாவனையைகாட்டி அனுதாபத்தை வெளியிட.

எங்கடிம்மா என்று நிமிர்ந்து தன் குழந்தை நீட்டிய திசையில் பார்த்த அந்த அம்மாவின் முகம்போனபோக்கில் சீ கர்மம் கர்மம் ஏந்தான் இவளுகல கடவுள் படைத்தாரோ இப்படி அரகொறையா திறியவா என்று முனுமுனுத்துக்கொண்டே, சும்மயிருடி அத்த இத்த பார்த்து கைய்யகிய்யக்காட்டமா, என்று சட்டென தன் மகளையும் இழுத்துக்கொண்டு முகத்தை வேறுபுறம்திரும்ப.

பக்கத்தில் நின்ற மற்றொரு சிறுவன் தன் அம்மாவைபார்த்து
எப்பப்பாத்தாலும் நம்ம அப்பா உன்னய சீலையா எடுத்து காச கரியாக்குறா காச கரியாக்குறான்னே கத்திகிட்டே இருக்காருள்ளம்மா அத நீதாம்மா கேக்கமாட்டெங்கிற எப்பப்பாத்தாலும் புடவ புடவையா வாங்கி அப்பாட காசயெல்லம் வீணாக்குறத்துக்கு

இதுபோல் சின்னபாவாடை வாங்கினால் காசமிச்சப்படுத்தலாமுள்ள என்று சொல்லிமுடிக்கும்முன் விழுந்தது ஓர் அடி முதுகில், விர்ரென்று வலிக்க
அழுதுகொண்டே பார்த்தான் அம்மாவை

சனியனே இந்த எழவுக்குத்தான் உன்ன என்கிட்டும் கூட்டிகிட்டுபோவவே
சடவா வருது, எல்லாம் இந்த பாழாப்போன பட்டணத்துக்காரங்களும் சினிமாக்காரங்களும் செய்யிற வேளயால
இந்த பச்சபுள்ளயெல்லாம் கெட்டு குட்டியச் சுவராபோவுது,
எந்த எடத்துக்கும் கூடிக்கிட்டு போவமுடியல அங்கினக்கங்கின ஒரே ஒட்டுதுணியபோட்டுகிட்டு நிக்கிதுக ஆடுதுக அத்தவேற போட்டாபுடிச்சி இவுகபோடுறாக, பொண்ணா பொறந்த மானவெக்கம் வேணும் இவுகளுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லையோடி கண்ணாத்தா, இவுக கெட்டுபோறதோட மத்தவுகளையும் கெடுத்து நாசம்பன்னுதாகளே  இவுக தாயிதகப்பன், சாதிசனம் யாரும் இத்த தப்புன்னு சொல்லமாட்டாகளோ,
என்ன காலமுண்டியிது அந்த கடவுள்தான் காப்பாத்தோனும்

அவுகளையல்லடி நம்மளத்தான் வா ன்னு சொல்லியபடி
மகனின் கையை தர தர வென இழுத்துச்சென்றாள் பொன்னம்மா.

என்னத்த சொல்லி என்னபண்ணக்கா என்னக்கித்தான் மாறுமோ இத்தப்போல உருப்படாத பொலப்பெல்லாம் நாமசொல்லியா எதுவும் மாறப்போவுது
இதெமாதரி மனுசங்கயெல்லாம் பிஞ்சிலேயே பழுத்துட்டாங்க இனி வெம்பித்தான் கீழேவிழுவாங்க, கேட்டா வயித்து பொழப்புக்குன்னுவாங்க
என்னமோ இவுகளுக்குமட்டுந்தேன் வயிறு பொழப்பு எல்லாம்,
நாமல்லாம் இல்லை கஞ்சியானாலும் குடிச்சிக்கிட்டு கிழிஞ்சதானாலும் மானத்தை மறச்சிக்கிட்டு,


காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
இந்த கண்ட்றாவி கலியுகத்தில்
நாமா நம்ம பசங்கள சாக்கிறதைய பாத்துவளக்கோனுமக்கா அப்புறம் கடவுள்விட்டவழி- ன்னு கண்ணாத்தாவும் தன் அருமைமகளின் கைகளை சற்று நடுக்கத்துடன் பிடித்தபடியே பொன்னம்மாவின் பின்னே போய் பஸ்ஸிலேறி அமர்ந்தார்கள், பஸ்ஸின் சன்னல்வழியே மீண்டும் போஸ்டர் எதிரே அரைகுறையாட எதிர்காலம் நினைவில் ஓட
காலத்தின் கோலத்தை நினைத்தபடி, கவலையில்
இருவரும் இருக்கையில் சாய்ந்தார்கள்...




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது