நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தறிகெட்ட[து] சுதந்திரம்




விலைமதிக்கமுடியா
மாணிக்கப்பெண்கள் பலர்
விடுதிகளிலும் மட்டுமல்ல
வீதிகளிலும்

விரலிடை போதைக்கும்
சதையுடல் தேவைக்கும்
விலையா[போ]கும்
மாந்தர் கோலத்தில்!

பாரதிக்கேட்ட
புதுமைப் பெண்கள்
பலர் பரக்கோலத்தில்
பலர் அலங்கோலத்தில்

ஆடையணிந்தும்
ஆடையற்றவர்களாகி
ஆண்களை மிஞ்சும்
அழுத்தங்கள் கூடி

பேதைகளல்ல
போதை அடிமைகளாய்
கோதைகளல்ல
கேவல பெண்மைகளாய்!

மேலை மோகம்
மேம்பட்டு மேம்பட்டு
பாழபட்டுப் போகுதோ
பாவையின் நடத்தைகள்

அச்சம் மடம் நாணம் பயிர்
இவையனைத்தும்
அக்கால பெண்கள் சிறப்பு
அழிந்துபோனதோ
இக்கால நவநாகரீத்தில்!

வெட்கமும் நாணமும்
வெட்கி நாணியது
வெக்கங் கெட்டலையும்
வெக்கைகள் முன்னே!

அச்சமும் மடமும்
அஞ்சிப் போனது
அஞ்சாமல் நடக்கும்
அடங்காப்பிடாரிகளின் பின்னே!

சுதந்திரமெனச் சொல்லி
நாகரீக கொள்ளிக்கட்டையால்
சூடுவைத்துக் கொல்லும்
நாகரீக  நங்கையர்கள்

நாளை
நரக படுகுழியினை நோக்கி
இன்றே பயணத்தை தொடங்கும்
நவீன யுவதிகள்........

--------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது