நன்றி கூகிள்
மரணத்தை மறந்தே மமதைகொள்வதேன்
மரணசிந்தனை நினைவில் வரலையா!
இல்லை
மரணமென்பதே உனக்கு இல்லையா!
பூமியில் இறைவன் படைத்த அனைத்துமே
புனிதமனிதனே உனக்காவே! -இங்கு
சிறிதுகாலம் நீ இளைப்பாறவே!-இதில்
பொழுதுபோக்குகள் நிறைந்து கிடக்குது
புண்ணியங்களும் குவிந்து இருக்குது
புண்ணிய வழியை புறந்தள்ளிவிட்டு
பாவத்தின் பக்கம் மனது போவதேன்
பாதை மாறியே பயணம் செய்வதேன்
உலகவாழ்க்கையில் உன்னைத்தொலைத்ததேன்
உண்மையை உதறி உள்ளம் அலைவதேன்
கூடிக்கூடியே கோள்சொல்கிறாய்
குடும்பத்தைப்பிரிக்க புறஞ்சொல்கிறாய்
கூத்து கும்மாளாம் தேடிப்போகிறாய்
கூட்டுக்கொள்ளையில் பங்குகொள்கிறாய்
மண்ணிலும் பொன்னிலும் மயக்கங்கொள்கிறாய்
மதுவிலும் மாதுவிலும் மனதைத்தொலைகிறாய்
மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு
மனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய்
ஃபேஷன் ஃபேஷனென
வேசமிடுகிறாய்
பெருமைப்பேசியே
பொழுதைக்கழிக்கிறாய்
வர தட்சனையை வாங்கிகொள்கிறாய்
வறுமையுடையோரை வதைசெய்கிறாய்
வட்டிக்கு வட்டி வாங்கிகுவிக்கிறாய்
வரம்புமீறியே வாழநினைக்கிறாய்
இப்படி,,,,,,,,,,
பாவத்தின் பக்கம் மனதுபோவதேன்
புண்ணிய வழியை மறந்துபோனதேன்
மரணசிந்தனை மனதில் வரலையா
இல்லை
மரணமென்பதே நினைவில் இல்லையா.
இம்மையில் வாழ்வே சிலகாலம்தான்
உண்மையில் வாழ்க்கை
மறுமையில்தான் -இதை
மனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு
மரணித்தப் பிறகுமறுமையில் ஜெயித்திடு....
டிஸ்கி//இக்கவிதை ஷார்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுவிழாவில்
நான் எழுதி வாசித்த கவிதை!
”சீமான்” உதவிகள் பல செய்து உதவும் மனிதநேயமுள்ள ஒருஅமைப்பு.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!