அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்
காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்
அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்
பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்
அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்
அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி
அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி
அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்
சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்
எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி
எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை
இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அறம் செய மற
அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..
எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........
ஒருமுறை
மனிதனுக்காக படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”
[இது சும்மா ஒரு ஷைடு பிட்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவண்ஜனை செய்
ஔவையாராய் ஆகாதே..
எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு எதிர்மறையாய்
செய்வதுதானே மனிதகுணம்
தயவுசெய்து இதையும் படித்துவிட்டு
இதற்க்கும் எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........
ஒருமுறை
மனிதனுக்காக படைக்கப்பட்ட
அனைத்தும் ”ரீயூஸ்”
மனிதன் மட்டும் ”ஒன்யூஸ்”
[இது சும்மா ஒரு ஷைடு பிட்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)