நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கற்றுக்கொள்ளுங்கள் நாகரீகத்தை...




கோடிகளில் புரண்டும்
மானம் மறைக்கும் ஆடைதன்னை
மேம்போக்குக்காக போட்டுக்கொண்டு
கிழித்[ந்]தலைவதை நாகரீகமென
சொல்லித்திரியும்
மானாக்களுக்கு மத்தியில்,

தெருக்கோடியில் கிடந்தபோதும்
கிடைத்த உடை
கிழிந்த உடையானபோதுமதனை
தைத்துபோட்டு மானம்காக்க நினைக்கும்
இவனல்லவோ மானஸ்தன்
இல்லையில்லை
வருங்கால நாகரீகத்தின்
மானமுள்ள திரு உருவம்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது