நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நல்லவேளை

நல்லவேளை
நகர்ந்து செல்லும்
நாளும் பொழுதும்
நம்மனைவருக்குமே ஒன்றானது
 
இல்லையெனில்!
 
பசித்தவனின்  பொழுது
பரிதவிக்க
புசித்தவனின் பொழுது
ரசித்தபடி போகும்
அவதிகள் ஆயிரமாயிரமடங்கு
அதிகரிக்க
ஆகாதவைகள் ஆராதிக்கப்பட்டு
ஆகுமானவைகள் நிராகரிக்கப்படும்
 
நல்லவேளை நம்மனைவருக்கும்
இறந்தபின்
ஆறடி நிலமே சொந்தமாக்கப்பட்டது
இல்லையெனில்
 
அதுவும் அரையடியாகவும்
அறுவதடியாகவும்
அல்லோல்படுத்தப்பட்டு
அவதிக்குள்ளாகும்
 
நல்லவேளை
நாளும் பொழுதும்
நம்மனைவரும் ஒன்றானது
 
இல்லையெனில்
 
இப்பூமியிலேயே
நாளொருவரின் பொழுது
நரகமேகுமே என்செய்வது..
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது