தோல்வியின் கைகளில்
வெற்றியின் மாலை
தோல்வியை கைகுலுக்கியே
வெற்றிமாலை தோளைத்தொடும்
தோல்வியின் இலையை
மென்றபின்பே
வெற்றி”லை”யின் சார்
உள்ளிறங்கும்
முயற்சியின் முனையில்
வெற்றிக்கனி அதனிடையே
தோல்வியின் தழுவல்கள்
தழுவலின் பிடியில்
நழுவி நழுவி
வெற்றியின் முனையை
கைப்பற்றும் கைகள்
தோல்வியென
துவண்டு கிடந்தால்
துளிர்விடுவது எப்போது?
துணிந்தபின்
தோல்விகள் தவிடாகும்
தவிடே
வெற்றியின் உணவாகும்
பல வெற்றிகளுக்கு முன்பே
பலபல தோல்விகள்
தொட்டும் தழுவியுமிருக்கும்
தோல்விகண்ட வெற்றியே
தெளிவையும் துணிவையும் தரும்
வெற்றியை வென்றிட
தோல்வியிடம் தோற்றுபோ
இல்லையேல்
தோல்வியை தோற்கடி!....
கவிதை வயலுக்காக விளைந்த கவிதையிது
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.