நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புலாங்கிதம்....



பூந்தோட்ட வாசனைகள் பிரபஞ்சத்தை நிறைக்க! பூங்குருவியொன்று மென்குரலெழுப்பி சங்கீதம் வாசிக்க! மரவண்டுகள் துளைத்தெடுத்த துவாரத்தின்வழியே சர்ப்பத்தின் சிரம் படமெடுத்து அசைய! திணவெடுத்த முகிலின் உரசலில் அடவெடுத்த கிளைகளில் தென்றல் திணற! இறுத்தலுக்கு இணையாது இருப்பைக் கலைந்து தனிமைச்சிறைக்கு சாவிகேட்டு சிதிலமடைந்த சிட்டுகள் எம்பிக் குதிக்கிறது துளையில்லா புல்லாங்குழலின் சத்தத்தில்....



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தமிழா! நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!



தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
தமிழ்நாட்டு மண்ணடா
தமிழனின் உணர்வடா!

நம்நாட்டில்லா பொருளாடா
நாமெக்கெதுக்கு பீட்டாடா
நம்மளோட நாட்டடா
நமக்கு நாமே காப்போம்டா!

உரிமையை விட்டுவிட்டு
ஊமையாகிப் போவதா?
உணர்வுகளை சிதைத்துவிட்டு
உயிர் ஜடமாக வாழ்வதா?

சந்திலிருந்து சிந்துபாடி
சதிசெய்து பிரித்தாலும்
சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்டா

மதம்கடந்த மனிதத்தை
தமிழ்நாட்டில் பாரடா
மதம்பிடித்த மனிதரெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள வேனாண்டா

வாடி வாசல் திறக்கவே
விவசாயம் உழவும் செழிக்கவே
தமிழ்நாட்டுப் பாரம்பரியம்
தழைத்து ஓங்கச்செய்யவே!

தன்மானமுள்ள தமிழனாய்
தன்னெழுச்சி கொள்ளடா
தாய் தமக்கை தங்கையக்காவாய்
தானாய் உம்முடன் வருவாள் துணையடா!

அவசரமில்லாமல் ஆராய்ந்து முடிவைகொள்ளடா
அவசரம் நிரந்தரமல்ல என்பதை உணரடா
நிரந்தர தீர்ப்புகேட்டு நெஞ்சை நிமிர்த்தி நில்லடா
நீதி கிடைக்குவரை அநீதி எதிர்த்து போராடடா...







https://www.facebook.com/malikka.farook
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது