நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாங்க வந்து தீர்ப்பச்சொல்லுங்க




மாப்புள்ள உடைச்சா அது கைதவறி
பொண்சாதி உடைச்சா அது கொழுப்புளடி!

[அச்சோ பழமொழிகூட வருதே. திகிரேட் டி” மலிக்கா]

அப்படின்னு சொல்லுவாங்க அதேபோல்.

”சரி சரி மேட்டர் என்னான்னு சொல்லு சீக்கிரம் அப்படித்தானே கேக்குறீங்க!

”என்னயிருந்தாலும் எப்படி சொல்லுரரரரரது”.

/ஏன் இந்த இழுவ

”இல்ல இது ஆம்புளைங்களைப்பத்தி இருக்கே அதேன் பயந்து வருது.

அவுகள குத்தம் சொல்லுறமோன்னு ஆளாளுக்கு அனானியா மாறிடுவாங்களோன்னு.

/ச்சேச்சே அப்படியெல்லாம் செய்யமாட்டாங்கா ரொம்பபப நல்லவங்கப்பா”

/சொல்லு சொல்லு மேட்டர் என்ன

”அதுவா? அது இதுதான் படிங்க.’

பையனுக்கு பெண்பார்க்கும்போது. [பணம் நகைக்கு அப்பாற்பட்டு]

நல்லகுடும்பமா?

பெண் நல்லவளா?

நல்ல குணமுடையவளா?

கொஞ்சமாவது அழகுள்ளவளா?
[இப்பவெல்லாம் வெள்ளவெள்ளேர்னுதான் பொண்ணுவேணுமாம்]

அனுசரனையாக நடப்பவளா?

காதல் கீதல் எதிலும் மாட்டாதவளா?

குடும்பத்துக்கு ஏற்றதுபோல் நடப்பாளா?

கட்டுக்கோப்புடன் இருப்பாளா?

எனசகலமும் நோண்டி நொங்கெடுத்து தெரிந்துகொண்டு அதில் சிறுகுறையிருந்துட்டா. [அட இதுதானே. சின்னப்புள்ளையில யார்தான் தப்புபண்ணல இதெல்லாம் ஒரு குத்தமா. அப்படியெல்லாம் எதிர்பார்க்ககூடாது ஓகே] இது நமக்கு சரிவராது சரிவராது வேறுயிடம் பார்ப்போம் என சொல்லிவிடும்போது,,,,,,,,,,

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது.

பையன் நல்லவனா?

.குணமுடையவனா?

.நல்லமனமுடையவனா?

.வேலையில் இருக்கிறானா?

சம்பாதிக்ககூடியவனா?

குடும்பத்திற்கு ஏற்றவனா?

கருப்பானாலும் [யார்ப்பா அது கருப்ப பத்திமட்டும் ஸ்ஸ்ஸ் மூச்சிவிடக்கூடாது]
எந்த கெட்டபழக்கவழக்கங்களும் இல்லாமலிருக்கா?

என ஒன்றுவிடாமல் ஆராயோ ஆராயின்னு ஆராயப்படுகிறது, அப்போது சின்னவயதில் சிலபல தவறுகள்தான். அது திருமணத்திற்குபின் எல்லாம் சரியாகிவிடும்[சரியாகலைன்னா அதுவிதிவிட்ட வழி அதெயெல்லாம் பத்திப்பேசக்கூடாது] என சொல்கிறார்களே!
அதையும் ஏற்றுக்கொண்டு திருமணம் முடிக்கிறார்களே!
அது சரியா?

இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?

தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?

இல்லை விதிவிலக்கிருக்கா?

திருமணம் ஆனவரானாலும் நோ பழாபழம். ஆகலைனாலும்
நோ பழாபழம். நியாயத்த சொல்லுங்க. இது சும்மா பேச்சிக்காக மட்டும்சொல்லிட்டு போறதில்லைங்க.அல்லாரோட
வாழ்க்கைக்காவும்தான்.

கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
அல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] அதான் மேட்டரு வேரஒன்னுமில்ல நிஜமா வெளிக்குத்து, உள்குத்தெல்லாம் ஒன்னுமில்லங்கங்கோகோ கோ........


[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது