நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காவலெதுக்கு?!

                                                                          நன்றி கூகுள்
                                                                             
காவகாக்கும் வேலியே!- பயிரை
காவந்து செய்யலடி
காத்தில்போன மானத்துக்கு
காலங்கடந்தும் ஈனமடி!

வனத்த காவ செய்துவிட்டு
இனத்த காக்க மறந்துருச்சி
வயசும் முத்தி கிழடாச்சி-இப்பதான்
வழக்குக்கு வழி வந்திருக்கு!

என்ன வந்து என்ன செய்ய
எல்லாங் கடந்து நாளாச்சி
போன மானம் போயாச்சி
புழுங்கி  மனம் பாழாச்சி!

வேலியே! பயிரை மேஞ்சாக்கா
வேறெதுக்கு!  காவ பயிர்களுக்கு?
சட்டமே சேட்ட செஞ்சாக்கா
சரிவருமோ சாதா மனுசாளுக்கு!

குத்தம் செஞ்சா தண்டனயெல்லாம்
ஒடனே கொடுக்க மாட்டாகன்னு
குத்தத்துக்கு மேல குத்தமாக
ஒசத்திகிட்டே போறாக!

செஞ்ச குத்தத்துக்கு தண்டன வாரப்ப
செயலெழந்தும் போறாக-சிலர்
செத்தும் மடிஞ்சும் போறாக-அவங்க
செஞ்ச பாவம் - மத்தவாளுக்கு சுமையாக

காவலுக்கு ஒரு வேண்டுதலு-இனி
காக்கவேண்டும்  உயிர் மானங்கள
உயிர் மானங்கள காப்பதுதான்
உத்தமான உங்க பணி

மனசாட்சியோட உடையணிந்து
மக்கள காக்க[கும்] பணிக்கு வாங்க!
மக்கள காக்[கும்]க பணிக்கு வாங்க
மத்த மக்களையும் உங்களப்போல எண்ணி .......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது