நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நினைவெல்லாம் நீயே


மெளனமாய்
முகம்பார்த்தேன்

முயல்விழியால்
பதிலளித்தாய்

முத்து முத்தாய்
வேர்த்துவிட்டேன்

முடிவென்ன
கேட்டுவிட்டாய்

முழந்தாளிட்டமர்ந்தேன்
அதில்
முகம்புதைத்து
நிமிர்ந்தேன்

என்னெதிரில்
நீயில்லை

எல்லாமே
என்
நினைவுக்குள்


மீண்டும்
மெளவுனச்
சிறைக்குள்

என்னை
முழுவதுமாய்
மூழ்கடித்தேன்..






அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது