மெளனமாய்
முகம்பார்த்தேன்
முயல்விழியால்
பதிலளித்தாய்
முத்து முத்தாய்
வேர்த்துவிட்டேன்
முடிவென்ன
கேட்டுவிட்டாய்
முழந்தாளிட்டமர்ந்தேன்
அதில்
முகம்புதைத்து
நிமிர்ந்தேன்
என்னெதிரில்
நீயில்லை
எல்லாமே
என்
நினைவுக்குள்
மீண்டும்
மெளவுனச்
சிறைக்குள்
என்னை
முழுவதுமாய்
மூழ்கடித்தேன்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்