தரணியில் பலயிடங்களில்
தலைவிரித்தாடுகிறது காமக்களியாட்டம்
களியாட்டத்திற்க்கு பலியாகிறது
தளிர்களின் உடல்களும் உயிர்களும்
பெண்மைகளின் மானங்களும் மென்மைகளும்
இளம் பிஞ்சுகள்
இளமை மொட்டுகள்
கன்னியர்கள்
கண்ணகிகள்
வயது வித்தியாசமில்லாமல்
வல்லூருகளின் விளையாட்டில்
மானமும் உயிரும் மல்லுக்கு நிற்கிறது
நித்தம் நித்தம்
மோகத்தீயிற்க்கு இரையாகி
காமக்கொடுர கண்களில் சிக்கி
சிக்கிமுக்கி கல்லாய் கைகளின் மாட்டி
சின்னாப்பின்னாமாகி சிதைகிறார்கள்
சிலபல வேளை சின்னா பிணமாகிறார்கள்
கண்டனங்களும் போராட்டங்களும்
நடந்துகொண்டேதானிருக்கிறது
ஆனால்
பெண்கள் காமத்தால் சுட்டெரிக்கபடுவதும்
பெண்மைகள் சூரையாடப்படுவதும்
நாள்தோறும் நடந்தேறிக்கொண்டேதானிருக்கிறது
போர்களத்தில்கூட பூக்கள் அழிந்துவிடுகிறது
போரின் முடிவில் சில புதைந்துவிடுகிறது
ஆனாலிந்த காமக்களத்தில் பெண்பூக்கள்
பூக்கவும் முடியாமல் புதையும் முடியாமல்
புழுவாய் துடிக்கிறது,
துடிப்பது பொருக்காமல் சில துடிப்பும் அடக்குகிறது
இவைகளின் காரணகர்த்தா எது?
அதனை கண்டெறிந்து அறுத்தெறி!
அதனினும் மேலாக
இக்காரியம் செய்வோரின் உயிரை பறித்தெறி!
இனியும் இதுபோல் நடவாதிருக்க
இதுவே சிறந்தவழி...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.