நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலைக்காகவா!


அடி ஓவியப்பெண்ணே
உன்னையும் விட்டுவைக்கவில்லை
இந்த நவநாகரீக உலகம்

ஓவியத்தில்கூட
ஒளிவு மறைவு வேண்டாமென்கிறது
ஒட்டுத்துணி
கலைக்காகத்தானே என்று
கலைந்து எறிப்படுகிறது
கன்னியமான ஆடை

உலகமே
அசந்துபோய் பார்க்கிறது
ஆதாம் ஏவாளின்
அந்தகால ”நிஜமாய்”
இந்தக்கால உருவ
அழகியை

இறைவன் கொடுத்த
அற்புதபெண்ணழகு
கலைகளுக்காக பலவிதத்தில்
காவுகொடுக்கப்படுகிறது
கற்பு என்ற மானமே
காற்றில் பறக்கவிடப்படுகிறது..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது