துரத்தி ஓடுகிறேன்
நிலாவோடு ”நிழலும்” ஒளிந்து கொள்கிறது
கண்கண்டு ஓடுகிறேன்
காணாமல் ”கானல்” மறைகிறது
அன்பைத் தேடுகிறேன்
அதுவும் ”அழகிய” வேடமிடுகிறது
வலிதெரியாமல் நடிக்கிறேன்
வழியவந்து ”வருத்தி” வலிக்கவைக்கிறது
நீர்குமிழியாய்
உடைந்துகொண்டே இருக்கிறேன்
உமிழ்நீராய் சோகம்
சுரந்துகொண்டே இருக்கிறது
என் அறையெங்கும் ஆன்மா
அலறும் சத்தம் கேட்கிறது-அதனை
அமைதிப்படுத்தத் தெரியாமல்
அதனோடு சேர்ந்து
என் அணுக்களும் அலறுகிறது!
வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது
இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது
இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
விட்டு விட்டு சிரித்தழுகிறது!
டிஸ்கி///
நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிலளிப்பதில்லை அனைவரும் என்னை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருத்துரைக்களுக்கும் பதிலளிப்பேன்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.