நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்திப்பு தந்த தித்திப்பு.

[அண்ணன் தங்கியிருக்கும் இடத்தில். என்தோழியின் மகள் ஜுல்பியா]

கடந்த வெள்ளியன்று காலை 11 30. லிருந்து படபடப்பு மனதில். 3. 4. வாரங்களாக இதோ இதோ என்று தள்ளிப்போய்கொண்டேயிருந்த சந்திப்பு


இது இன்று நடைபெறப்போகிறது.மனமெல்லாம் மகிழம்பூவின் வாசனையோடு
குட்டிப்போடபூனையாக நடை.11 30. தோழிவீட்டுக்கு வந்துவிட்டேன். அங்கிருந்துகொண்டு போன் செய்தேன். அக்கா இன்றுமாலை சந்திக்கிறோம்.
நான் அங்குவரவா இல்லை நீங்கள் இங்கு வருகிறீர்களா?
அச்சோ போனின் உள்ளே சந்தோஷ மூச்சி சாரலாய் அடித்தது.
என்ன செய்வோம் நான் எங்கு வர.அங்கிருந்த குரல்,
சரிக்கா மாலை 4. 30மணிக்கு ஃப்ரைடே மார்கெட்டுக்கு வாங்க
அங்கே சந்திப்போம் ஓகேபா வந்துவிடுகிறேன்.
உனக்காக தூக்கத்தை தியாகம் பண்ணிவிட்டு என்றார்கள்.

நேரம் நகர்ந்தபாடில்லை தொழுகைமுடிந்து சாப்பிட்டு மணியைபார்த்தால் 2.15..தான்
என்னசெய்வது 4. 30 நல்ல வெயிலாகயிருக்குமே! என்று திரும்ப போன் செய்தேன் அக்கா நான் அண்ணவீட்டுக்கு[பெரியம்மா மகன்] போய்விட்டு 5. 30 வருகிறேன் வரும் போது போன்செய்கிறேன் அப்போது கிளம்பிவந்தால் போதும் சரியா. சரிப்பா வந்துவிடுகிறேன்.

எடு காரை போ கவானிஜ் க்கு. நாங்க இருந்த இடத்திலிருந்து ஒரு 90 . 95 .கிலோமீட்டர் விடு சூட். அண்ணன் தங்கியிருக்கும் இடத்துக்குபோய் ஒட்டகபாலாவது அருந்திவிட்டுவரலாமுன்னு போயாச்சி.நாங்கம் தோழிவீட்டிலும் சேர்ந்து.
அங்குபோய் அண்ணிடமிருந்தெல்லாம் சுருட்டிக்கொண்டு,
 சூடான நேரத்தில் ஒட்டகப்பால் சூடு என்பதால் ஜில்லுன்னு டீ குடிச்சிட்டு.

[இந்த ஒட்டக்கப்பால் குடிக்கத்தான் சென்றோம்]


மணல்மலையில் ஏறிவிட்டு அப்பாடா என இறங்கி அண்ணாவுக்கு டாட்டா காட்டிவிட்டு. திரும்பினால் மணி 5 .50. போன் செய்து அக்கா நீங்க அத்தனை தூரம் ஃப்ரைடே மார்கெட்டுகெல்லாம் வரவேண்டாம் உங்கவீட்டுக்கு மிகபக்கம்தானே லூலூ சென்டர் அங்கே வாங்க அதுவும் நான் அங்கு வந்து நான்மிஸ்கால் அடித்ததும் என்றேன். ஏனென்றால் தனியா அவர்கள்மட்டும் வரனுமே அண்ணாத்தேக்கு வேலையிந்ததால்.

லூலூ போயாச்சி பார்கிங் செய்துகொண்டே போன் செய்தேன் அக்கா இப்ப வாங்கன்னு. நான் வந்துட்டேன் [ஆல்ரெடி அயம் கம்மிங்] உள்ளேதான் நிற்கிறேன் என்றார்கள்.சரி என்னை எப்படித்தெரியும் அவங்களுக்கு [எனக்கு தெரியும் அவங்களை எப்படி இரண்டு நாளைக்குமுன்னாடி போட்டோ அனுப்பினாங்க பார்த்துவிட்டோமுல்ல] அதனால நீங்க என்னை கண்டுபிடிச்சிடுங்கப்பா என்றார்கள்.

என் திட்டம் எந்தோழியை நான்தான் மல்லி என போய் அறிமுகபடுத்திக்கோ என சொல்லி அழைத்துச்சென்றேன் ஆனால் அவள் இடையில் ஹாஸ்பிட்டல்போகனும் என்ற சூழல் அதனால் நானே உள்ளே சென்றேன் மச்சானும் மகளும்கூட.

உள்ளே நுழைந்து அந்தபக்கம் பார்த்துவிட்டு இந்தபக்கம் திரும்பும்போது எதிரே ஒரு ஆள் பெட்ஷீட் டவல் என இருந்ததில் ஒன்றை எடுத்து விரித்து பார்த்துக்கொண்டிருந்தது முகம் நான் போட்டோவில் பார்த்ததுபோல்தான் இருந்தது சற்று வித்தியாசமாய்.

அருகே சென்று லேசாக உரசியதுபோல் நின்றேன் ஆளுக்கு பயம் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குனிந்தே என்னவோ அதை எடுக்கப்போவதுபோல் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இன்னும் நெருக்கமாக நின்றேன். திரும்பி என்னை பார்க்கும்போது அணைத்துக்கொண்டேன் அக்கா என்று. அப்படியே அக்கா அதர்ச்சியில் பார்கனுமே அந்த கண்கொள்ளாகாட்சியை.

என்னை பேஷ் கவர்செய்தே பார்த்திருந்ததால் நான் பர்தாவில் ஃபேஷ் கவர் செய்து போவேன் என எதிர்பார்திருந்தார்கள் [அவர்களுக்கு ஷாக்கொடுக்க அதை சற்று நீக்கிவைத்திருந்தேன்] சொல்வார்களே பாசம் இடமறியாதுன்னு
அதுபோல அங்கேயே கைகளைபிடித்தபடி சற்று மெளனமும் சிரிப்பும்.

[கொழுக்கட்டையைசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நினைவுவந்தும் கிளிக்]
 உடனே அக்கா சிறிய பேக் கையில் கொடுத்து இந்தாப்பா உனக்கு பிடித்த கொழுக்கட்டை என தந்தார்கள்.
சரி இங்கே இருந்து பேசமுடியாது லூலூக்கு பின்னால் பார்க் இருக்கு அங்குபோவோமென அங்கு சென்று அமர்ந்தோம் சிறிய மகனாரை அழைத்துவந்திருந்தார்கள்.அப்படியே அம்மாபோல நாந்தான் அண்ணாவை பார்தில்லையில்ல அதான்.

பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்
இடையில் ஹாஸ்பிட்டல் போனதோழி வந்துவிட்டாள். அக்கா கொண்டு வந்திருந்த கொழுகட்டையை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டோம் சர்கரை கொழுகட்டை செம சூப்பர். அதற்கிடையில் எங்க ஊர் தோழிகள் அந்த பார்க்குக்குதான் எப்போதும் வருவார்களாம் அவர்களும் வந்துசேர[ரொம்ப நாள்கழித்துதான் அவர்களையும் பார்த்தேன்] அப்பப்பா சந்தோஷதின் உச்சியில் அப்போது.


என்னவோ பார்க்கே விழாக்கோலம் பூண்டதுபோலிருந்தது. போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.[என்ன நான் கொஞ்சம் குனிந்து நின்றேன். அக்கா சொன்னார்கள் முன்பே தெரிந்திருந்தால்
ஹை ஹீல்ஸ் போட்டு வந்திருப்பேனப்பா] எனக்காக சின்ன பர்ஸ் அக்கா தந்தார்கள் அதை திறக்கும்போதெல்லாம் என் நியாபகம் வரனுமென்று.அதில் 1 திர்கம் காயின்வேறு. அப்போதுபார்த்து என் கவிதை [மாண்பின் ஆட்சி]
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்திற்காக நான் எழுதிய கவிதை.


இனியதிசைகள் புத்தகத்தில் வந்துள்ளது என அண்ணன் வந்து தந்தார்கள். மகிழ்ச்சி பன்மடங்கானது..

 பேசியதில் நேரம்போனதே தெரியவில்லை அக்காவின் அத்தான் போன் செய்யும்வரை.மணியைபார்த்தால் 7. 45. அச்சோ நேரமாகிவிட்டது நான் கிளபுகிறேன்பா. என்றார்கள். வாங்கக்கா லூலூவுக்குபோய்விட்டு போகலாமென்றேன் இல்லப்பா நேரமாகிவிட்டகாரணித்தினால் மீண்டும் சந்திப்போம் என்றார்கள் சரியென பிரியமனமில்லாமல் கைகளைகொடுத்தபடி அப்படியே சில மணித்துளிகள்.


விரல்களுக்குள் வீணைமீட்டிய நேசம் விடுபடமுடியாமல் விட்டு விலகியது.
போய்வருகிறேன் எனச்சொல்லியபோதுமனம் கனத்ததுபோலிருந்தது
அதை காட்டிக்கொள்ளாமல் இருவரும் அணைத்துக்கொண்டு சென்றுவருகிறேன் என்று போய்விட்டார்கள். போனபின்னும் நெடுநேரம் அமர்ந்திருந்தோம் மற்றதோழிகள் அவர்கள் அத்தான்கள்.என மணி 10.25 கிளம்பிவிட்டோம் வீடுவந்து சேர 11 மணியாகிவிட்டது.


அதுசரி இவ்ளோ நேரம் படிச்சிகளே நான் யாரை சந்திச்சேன்னு நினைக்கிறீங்க!
அதை தெரிஞ்சிக்கனுமுன்னா இதை கிளிக் பண்ணுங்க

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழும் நம்மை ஒன்றிணைக்கும் பாலமாய் இந்த பதிவுலகம் இருப்பதில் ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.
நட்புக்கு பாலமாய் உறவுக்கு வலிமையாய் இதில் உலவும் மனிதர்களின் மனங்கள் உலாவர என் பிராத்தணையும் வேண்டுகோளும்.


உதிர்ந்துவிடும் மலர்களைப்போல் ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பல உள்ளங்களில் வேர்விட்டு உறுதியாய் உதிராமல் வாழ்ந்திடவேண்டும்.
இன்னும் இந்தப்பதிவுலம் எத்தனை எத்தனை மகிழ்சியையும் சந்தோஷங்களையும் தரக்காத்திரிக்கிறதோ!
அதற்காக நானும் காத்திருக்கிறேன்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது