நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இன்றுமட்டுமல்ல என்றும்..

உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும். [அம்மாஸ்தானத்தை அடையச்செய்த அப்பாக்களுக்கும்]என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

த்துமாதம் சுமந்து
பட்டபாடெல்லாம்
பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்
பதிந்திருந்தபோதிலும்

பெற்றதாயின் துன்பதை
பகிர்ந்துகொள்ள யியலாப் பிள்ளைகளாய்
தான் பெற்ற பிள்ளைக்காக
தேசம்கடந்து போகும் நிலை!

பெற்றதாயின் பாதத்தில்
சொர்க்கமுண்டு என்றபோதிலும்
பாழும் இனிப்பு நோயால்
பாதமிரண்டும் பற்றி எரிந்து
அவதிப்படும் வேளையில்
பக்கத்திலிருந்து
பார்க்க முடிவதில்லையே!
பாவிமக்களால்

லதுயரம் பலசிரமம்
பலதிசையில் கண்டு
பேணிவளர்த்தாள் அன்று
பிணிகொண்டு கிடக்கையிலே
பார்க்க கேட்க ஆளில்லாது
பரிதவிக்கும் நிலையானதே! இன்று

ன்னைமடியில்
ஆழ்ந்துறங்கிய அன்னங்கள்
அக்கரைக்குச் சென்று
அல்லல்பட்டு அவதிப்பட்டு
அயராது வேலைசெய்தபோதிலும்

ன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அல்லும் பகலும் அனுதினமும்
அன்னையவளை சேயினுள்ளம்
ஆத்மார்த்தமாக  நேசிக்குமென்பதையும்
அடி பிசகாமல் உணரும்
அன்னையவளின் நெஞ்சம்..

டிஸ்கி// புத்தக மதிப்புரையில் என் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை”  தினத்தந்தியில் வந்துள்ளது..மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.தினதந்திக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது