ருசியோடு இருக்கும் உணவை
பசியார நினைத்து
ஒரு கவளமெடுத்து
உண்ண துவங்கும்போது
பட்டினியால் வாடி வதங்கிய
வயிறுகளும்
பதராகிப்போன உடல்களும் முகங்களும்
கண்முன்னே
ஊசலாட
பசி
மரத்து
ருசி வெறுத்து
உயிரிடுக்கில் நுழைந்து
உள்ளத்தைக்
குடைந்தது ஒரு வலி…
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.