நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதுவருட முதல்பரிசும் பட்டமும்.

அன்பும் அறனும் நம் வாழ்வின் நற்பண்புகளாகும்.

கவிக்குள் வாழ்வதும் கவியாய் வாழுவதும் கருத்தரிக்கும் தாய்மைக்கு நெருக்கம் கல்புக்குள் {நெஞ்சுக்குள்} களிப்பினை புகுத்தும்... நீண்ட நாட்களாகிறது நீரோடையில் நீராடி, முகநூல் மக்களை ஆட்கொள்வதால் வலைதளங்கள் சற்றே முடக்கங்கள்தானென சொல்லவேண்டும் அதனுள் நானும் மூழ்கிவிட்டேனவும் சொல்லலாம். என்ன இருந்தாலும் நம் குழந்தை நம் வலைதளம் அதனை பராமரிக்காது விட்டுவிட்டால் செழுமையற்று போகுமல்லவா இனி தொடர்வருகைதந்து நீரோடையில் நீர்வரத்தை அதிகரித்து கவிமீன்களை நீந்தும்படி செய்ய வேண்டுமென எண்ணியுள்ளேன். இறைநாடின்.. இதோ இந்த இனிய ஆண்டின் முதல் பரிசாய் கவிபரிசலும் ”கவிநிலா” பட்டமும்,முகநூலில் கவியருவி குழுமத்தால் நடத்தப்பட்ட கவிப்போட்டியில் என கவிதைகான பட்டமும் பரிசலும் பெற்றுதந்தது மனத்தை நெகிழச்செய்தது எழுத்தறிவித்த இறைவனுக்கே புகழைனைத்தும்.. கவியருவி நிர்வாக குழுவிற்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்... முடிவுகள் இதோ: கவியருவி மலிக்காஃபாரூக், வழக்குரைஞர் கவிஞர் ஷாந்தி மீனாக்‌ஷி இருவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு மிகச் சிறந்த கவிதைகளாகத் தெரிவு செய்யப்பட்டுளவைகளாகும். இருவர்க்கும் தலா உருபா 500/= வீதம் எம்குழுவின் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் அவர்கள் அனுப்பி வைப்பார்கள். பரிசுக்குரியோர் இருவரும் பொருளாளர் கவிஞர் சாராபாஸ் Sara Bass அவர்களைத் தொடர்பு கொண்டு இருவரின் வங்கி விவரம் அளிக்க வேண்டுகிறேன் வெற்றி பெற்றோர்க்கும், பங்குபற்றியோர்க்கும் உளம்நிறைவான வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது