நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வெற்றி யாருக்கு![கவிதைப்போட்டி]

நன்றி கூகிள்
இந்த சின்ன விருதை கவிஞர்கள் அனைவரும் அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

கவிஞிகள்.
அன்னு----
ஆசியா உமர்-----
நிலாமதி-----
அமைச்சாரல்---
மலிக்கா---

கவிஞர்கள்.
கார்த்திக்-------
காஞ்சி முரளி-----
ராஜராஜசோழன்-----
அக்பர்-----
ரியாஸ்-----
ஸ்டார்ஜன் -----
விஜய்------
இர்ஷாத்---
வெறும்பய----
ஜெய்லானி----
பார்த்தீபன்--
சீமாங்கனி---
நிஜாம் நியூஸ்--
நியோ---
மங்குனி---
நாடோடி---
தஞ்சை வாசன்---
திகழ்----

அன்பான கவிஞர்களே! கவிஞிகளே!

முதலில் தாங்கள் அனைவருக்கும் என் மனம்நிறைந்த
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
கவிதைப்போட்டியென்றவுடன் கலந்துகொண்டு தங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் கொட்டிக்கலக்கி
தாங்களின் அன்பான கவிகளை அழகாய் அருமையாய், தந்துள்ளீர்கள்.. ஒவ்வொருத்தருக்குள்ளும் கவிஞன் எனும் கற்பனை சிற்பி சிந்தனைகளை செதுக்கிக்கொண்டுதான் இருக்கிறான். அதை வெளிப்படுத்தும் தருணம் கிடைத்தால்,மிகஅழகியமுறையில் செதுக்கி சிற்பமாக்கி விடுவான் என்பதற்கு சான்றே இக்கவிதைப்போட்டி.

இதில் யாரும் யாருக்குக்கும் சலைத்தவர்கள் இல்லை. ஏனெனில் அவரவர் அவரவரின் சிந்தனைக்கு தகுந்தவாறு தன் சிந்தனைகளை கற்பனைக்குள் கலந்து படைத்துள்ளார்கள். இதில் முதலிடம் இரண்டாமிடம் என்றுசொல்லி அவர்களின் சிந்தனைகளை சிதைத்துவிட விரு[ம்ப]ப்பமில்லை.

ஆகையால் அனைவரும் கவிஞர்களே! ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் தன்மனவோட்டத்தை பதிவுசெய்துள்ளீர்கள். அதற்க்கே முதலில் பாராட்டவேண்டும்.பாராட்டுக்கள்.
யாரும் பிறக்கும்போதே இன்னதுவாகத்தான் பிறப்பதில்லை. வளரும் சூழ்நிலைகளும். வளர்க்கப்படும் சூழ்நிலைகளும்தான் அவர்களை இன்ன இன்னதுக்கென்று ஆக்கிவிடுகிறது, ஆக்கப்படுகிறது, இது கவிதைக்குமட்டுமல்லை அனைத்துக்கும்தான்.

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட விசயம் ஒருசிலருக்கு மட்டுமே கவிதை வருவதல்ல, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் சிந்தனைக்குதந்தவாறு எழுதமுடியும். பதிவுசெய்யமுடியும். [இதில் நான்கூட சும்மா ஜுஜிபிதான் என்று.].

ஆகவே உங்களுக்குள் இருக்கும் திறமைகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது வெளிப்படுத்த தவறவேண்டாம். அது எதுவென்றபோதும் உங்களால் முடியும் என்று எதை நினைக்கிறீர்களோ அதை சாத்தியப்படுத்த முயலுங்கள்..
வெற்றி நிச்சயம்.

/சரி சரி யார் யார் பிஸ்கோத்துக்கு ஆசைப்பட்டதோ அவங்களெல்லாம் வரிசையாக நின்னு சண்டைபோடாம ஒவ்வொன்றாக எடுத்துக்கோங்க./

டிஸ்கி// என் ஒவ்வொரு பதிவின் கீழும். உங்கள் கவிதைகளை ஒவ்வொன்றாக பதிப்பேன்..

இதோ என் கவிதென்னும் கிறுக்களும்


ஆதாம் ஏவாள்

காரிருள் சூழ்ந்த இவ்வுலகம்
கனிமரத்தின் புண்ணியத்தோடு
ஆதாம் ஏவாளின் வருகையால்
விடிவு பெற்றெதென்பதை
உணர்த்தவே

ஒவ்வொரு இரவும்
உலாவரும் நிலா இருள்மீது
ஒளிவீசி இவ்வுலக்கிற்க்கு
உணர்த்துகிறது-அதை
வண்ண வானம் விளக்குகிறது.
......................................................................
ஒளியான காதல்
பசுமை நிறைந்த நம் காதல்
பிரிந்த சோகத்தில்
பச்சைமரம்
கருப்பானதே தவிர
கறுகிவிடவில்லை-அதை

உறுதிப்படுத்த இந்தநிலா
உலாவரும் வேளையில்
ஒளி விசீயபோது
இருள் சூழ்ந்த நேரத்திலும்
வண்ண வானத்தில்-நம்

இதயங்களின் சங்கமத்தை
இதமாய் காட்டியது-நம்
உண்மைக் காதலை
உலகுக்கே உணர்தியது..

ஏதோ நம்மால முடிந்தது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது