இருங்க இருங்க படிக்கும் முன் ஒரு செய்தி! என்னான்னா. தமிழ்குடும்பத்தில் ஞாயிற்றுகிழமையிலிருந்து ”மலிக்கா வாரம்.” அதாங்க நம்ம வாரம் ஓடிக்கிட்டு கீது போய் பாக்க நினைக்கிறவங்க போய்பார்த்துவரலாம்.
ஹூம் உஹூம் போய் பாத்துதான் வரனும் சரியா! இல்லேன்னா அழமாட்டேனே![அப்ப்டித்தான் சொல்லிக்கீன்னு அழறது]
உன்
ஓரவிழிப் பார்வைக்குள்
ஒளிந்துகிடக்கும் ரகசியம்
கசியும் மெளனத்தில்
கரையத் தொடங்கியபோது
காதல் கைகூடியதோ
அதனால்தான்
அக்கரையில் நானும்
இக்கரையில் நீயும்
அலைபாயும் நெஞ்சத்தை
அங்குமிங்கும் அசையாது
அணைப்போட முடிந்ததோ
வாழ்க்கையை வழிநடத்திச்செல்ல
காதல்மட்டும் போதாதென்பதால்
காசைத்தேட கடல்தாண்டி நானும்
கானகத்தில்!
கண்ணுக்குள் தோன்றிய காதல்
கண்ணீரோடு கரைந்துவிடாமல்
காலமுழுதும் காதலுடன் வாழ
கண்மணியே!
காத்திருப்பாயா!சிலகாலம்
காசோடு சேர்த்து
காதலுடன் வருகிறேன்
கைகோத்து இருவரும்
கலங்காமல் வாழ்ந்திட.....
அன்பான இர்ஷாத் கதை கட்டுரை கவிதைக்காக!
கொடுத்த இந்தவிருதை பாசதோடு ஏற்றுக்கொண்டு அதை நானும்
பகிர்ந்தளிக்கிறேன்.
புதுமுகம் ரியாஸ்
புதுமுகம் செந்தில்குமார்
பனிதுளி சங்கர் பல அறியாத விசயங்கள் இங்கே சென்றால் அறியலாம்!
செ.சரவணக்குமார். நல்ல எழுத்துநடை..
என் அன்புத்தோழி ஹேமா கவிதை எழுத அசத்தல் ஆளு..
அப்புறம் நம்ம கனி சீமாங்கனி கவிதையிலேயே தொடர்கவிதை எழுதி கலக்கும் ஆளு!
டிஸ்கி//பட்டியல் நீண்டுகொண்டே போக ஆசைதான் அல்லாரும் வாங்கின்னா அப்புறம் வாங்க ஆளேயிருக்காது நான் மறுதபா கொடுக்கோனுமுல்ல!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!