நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏன் விடிந்தாய்!


அறியாத வயது
ஆசைகள்
நிறைம்பிய மனது


சிறகுகளில்லாமல்
இறக்கைகட்டிப்
பறந்தது
இரவில்


எப்போது விடியும்
எப்போது
விடியுமென


விடிய விடிய
விழித்திருந்தன
விழிகள்
தந்தையின்
வரவுக்காக


பொழுதும் புலர்ந்தது
விழியும் ஒளிர்ந்தது
வந்தது தந்தையல்ல


தந்தை
தவறிவிட்டாரென்று
துயரத் தந்தி


கதறிக் கதறி
அழுதது கண்கள்
கருமணிகள்
கழண்டு
விழுமளவிற்க்கு


பதறித் துடியாய்
துடித்தது மனது
பொழுது
ஏன் விடிந்ததென்று........




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது