நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விசமிரண்டும் விற்பனைக்கு...



போதையும் புகையும்
புதைகுழியின் இருப்பிடம்
இதில்
புதைந்துகொள்ளவே  விரும்புதே
பேதைகொண்ட மனிதமனம்

அறிவிருந்தும் கெட்டவர்களை
அடிமையாக்க எண்ணிய
ஆங்கிலேயர்
விரித்த வலையிலும்
தானாய் விழுகிறது இவ்வினம்

ஓடாய் தேய்ந்து
உழைக்கும் பணத்தை
ஊதாரியாக்கும் உதவாக்கரைகளால்
அரசாங்கத்திற்கு
கோடி கோடியாய் வருமானம்

குடும்பம் குழந்தைகளை
இழந்தாலும்
குடித்து குடும்பழிப்பதிலும்
புகைத்து தன்னை புதைப்பதிலும்
இன்பம்காணும் தீவிரம்

தீவிரவாதிகளெல்லாம்
தீயவர்களென்று
தேடித்தேடி
ஒழித்தொழிக்கயெண்ணும்
அரசாங்கமுமே

தீயவைகளைளெனத் தெரிந்தும்
தீண்டித் தீண்டி தான் தன்குடும்பழிக்கும்
இத்தீவிரவாதிகளை
உருவாக்குவதும் ஊக்குவிப்பதும்
எவ்விதத்தில் நியாயம்?
இது மனுகுலத்தின் சோகம்…

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எங்கே[ணி]நீ




உன்பின்னே ஒளிந்து
ஒப்பீ விளையாடிய
நாட்களும்

உன் குளிர்நீரருந்தி
குதூகளித்த
நாட்களும்

உன்னுள் குதித்து
குளித்தாடிய
நாட்களும்

நாட்குறிப்புகளில் மட்டும்
பத்திரமாய்
அசலைத்தொலைத்த
நகலாய்..
---------------------------

உனது பரிட்சத்தை
எட்டி நின்றும்
ஏக்கத்துடனும் 
பார்த்ததுண்டு

கயிறுதொட்டு
வாளியிறக்கி
தண்ணீர்மொண்டு
குடம் நிரப்பியத்தில்லை

ஆனால்
என் குழந்தைக்கு
அந்த
பரிட்சயம்கூடயில்லை.

---------------------------------------------

உன்
நீரெடுத்து  நீராடி
உணவு சமைத்து
உண்டோரெல்லாம்
உடலாரோக்கியத்தின்
மடியில்

மின்சார நீரருந்தி
மாசு நீரில் சமைத்து
உணவுண்போரெல்லாம்
மருந்து மாத்திரைகளின்
பிடியில்.
---------------------------------

இன்றும் சில
இடங்களில்
நீ”ர்”
ஊற்றெடுக்கிறாய்
தாய்பாலாகவல்ல
புட்டிப்பாலாக!
அதாவது
தன்னாலல்ல- மோட்டர்
தடியாலடித்து
----------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மரணத்தின் விளிம்பில்,




விதி முடியும் தருமிது
வாழ்க்கை வாழ நேரமில்லை
சதிராட்டம் ஆடியதெல்லாம்
சக்தியை தருவதில்லை
செய்தவைகள் கண்முன்னே
சுழல் காட்சிகளாய்
சுழன்றுவர
மாட்சிபெற கைகுப்பி
மண்டியிட்டு கேட்டாலும்
மரணமது விடுவதில்லை
மண்ணில்
மறுவாழ்க்கை வாழ
வழி தருவதில்லை
சதியென்ற போதினிலும்
விதியென்ற போதினிலும்
மரணம்வென்ற மதியில்லை
மரணமில்லாத ஜீவன்களில்லை
உலகில் உள்ள அத்தனைக்கும்
இங்கேயேயிருக்க அனுமதில்லை
இவ்வுலகமும் நிரந்தரமில்லை.
 ------------------------------------------

அகோர மரணம்
ஆபாச மரணம்
நடுவழியில் மரணம்
நாதியத்த மரணம்
இவையணைத்துமில்லா
இலகுவான மரணம்
எனைத்தழுவ வேண்டி
இருகண்கள் மூடி
இறைவனிடம் வேண்டி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பொதியிழுக்கும் மனிதன்



குருதியின் கண்ணீராய்
வேர்வைத் துளிகள்
வேகாத வெயிலிலும்
தாங்காத குளிரிலும்
தன்னை வருத்திக்கொண்டு

குடும்ப மென்னும் கூடு
வறுமை யென்னும்
கிலிக்குள் சிக்காதிருக்க
வருத்தமதை தான் சகித்து
வசந்தமதை குடும்பம் சுகிக்க

நெஞ்ச டைக்கும் பாரம்
தாங்க முடியா துயரம்
மேனி தாளா வருத்தம்
எதையும் பொருட்படுத்தாது

பொதியிழுக்கும்
மாடாய் மனிதன்
காகிதமவனை ஆட்டுவிக்க
களி மண்ணை
சுமக்கும் நிலையில்

சூலைகளின்
சுவாலையில்
வேகும் செங்கற்கள்
கருகாது சிவந்திருக்கும்

ஏனெனில்
களிமண்ணுக்குள்
ஏழைகளின் உழைப்பு
செந்நீராய் கலந்திருக்கும்...


100, தாண்டி மீண்டும் 01 லிருந்து தொடங்கப்பட்ட
கவிதை வயலுக்காக இக்கவிதை. நன்றி சகோ றாபி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எது வேண்டும் உமக்கு



சோகம் சூழ்ந்துவிட்டதே
துன்பம் தொற்றிக்கொண்டதே
வறுமை வாட்டுகின்றதே என
கண்ணீரோடு கையேந்தினேன்

கருணையாளனே
புன்னகையை பறித்துவிட்டு
கண்ணீரையே ஏன்
எனக்கு பரிசளிக்கிறாய்?

இதயத்தை வாடவிட்டு
இதழ்களை கருக்குகிறாய்
கவலைகளை நிரப்பிவிட்டு
கண்களுக்கு ஏன் நீர் பாய்ச்சுகிறாய்?

படைத்தவன்
பாடம் நடத்தினான்

புன்னகை
இன்முகத்தின் அடையாளமென்றா
எண்ணுகிறாய்
புன்னகைப்போரெல்லாம்
புண்ணிவான்களென்றா
புலம்புகிறாய்

கண்ணீரை யொதிக்கி
புன்னகையை மட்டும் கேட்டு
கையேந்தி நிற்கும்
மானுடமே!

நீரில்லாமல்
பயிர் வளருமென்று நினைக்கும்
புத்திசாலியா நீ?

அரிசியில்லாமல்
சோறுண்ண எண்ணும்
அறிவாளியா நீ?

நீரில்லாமல்
அண்டமில்லை என்பதை அறிவாயா?
இவ்வுலகமே
நீரால்தான்
நிரப்பட்டுள்ளது என்பதை மறந்தாயா?

பனித்துளி
இயற்கையின் கண்ணீர்
மழைதுளி
வானின் கண்ணீர்
தேன்துளி
தேனியின் கண்ணீர்
வியர்வைத்துளி
உழைப்பின் [குருதியின்] கண்ணீர்

கண்ணீருக்குள் பல
காவியங்கள் நிரம்பியிருக்கிறது
கண்ணீரின் விளிம்பில்தான்
புன்னகையும் ஒளிந்திருக்கிறது

எது வேண்டும் உமக்கு
கண்ணீரா
புன்னகையா?

புன்னகையில்
ஈர்ப்பு மட்டுமே உள்ளது
ஆனால்
கண்ணீரில்
ஆளுமை உள்ளது
அதனை அறியத் தவறாதே!

புன்னகைகளை
இதழ்கள் நெடுநேரம்
தாங்காதே
புன்னகையில்
கண்ணீர்துளி தெளித்தால்
இதயமும் இதழும்
வாடாதே!

கண்ணீரை தந்துவிட்டேன் என
கலங்காதே
கண்ணீருக்கு பின்
கலகமும் தீருமென்பதையும்
மறவாதே!

ஆகவே
கண்ணீர் உனக்கு
ஆகாததல்ல
ஆதலால் அதனை வெருக்காதே
ஆகவே
நீயும் வருந்தாதே!
=========================

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஆவதும் அழிவதும் உன்னாலே!


காரி உமிழ்ந்தேனே
கண் கண்ட
காட்சியின்  முன்னிலையில்
கடுங்சொற்கள் கிடைத்தும்
கட்டுக்குள்ளானது என்னிலையில்

பெண்ணே
உன்னாலும்தான்-பல
பழி பாவங்கள் தொடர்கிறது
கொலைகளும்
கற்பழிப்புகள் நிகழ்கிறது

பெண்ணென்பவளே
பெரும் பொக்கிஷம்
அதை பாதுகாக்க தவறினாலோ
அதுவே அவளுக்கு
ஆழகாலவிசம் என்பது
உலகறிந்த விசயம்
ஆனாலது உனக்கு
விளங்க மறுப்பதுதான்
எனக்கு ஆதங்க ஆவேசம்

பூவையரே உன் மேனி
புற்பூண்டோ! தெருச்செடியோ
போவதும் வருவதும்
பொழுது போக்கிற்காக
மேய்ந்துவிட்டு போக!

பெண்களுக்கென
மறைவிடங்கள்
கொடுக்கப்படிருந்தும்
தனியிடங்கள்
தடுக்கப்படிருந்தும்

பொதுயிடத்தில் நீ குளித்து
பெண்ணே நீ நடந்து வருகையிலே
எதிர்வரும் கண்களுகெல்லாம்
ஏகபோக விருந்தாகிறாயே
எல்லோருர் முன்னிலையில் உடைமாற்றி
எதிராளியின் மனதின்
ஏக்கத்திற்கு எண்ணையுற்றுகிறாயே!


ஆணை ஏன் குற்றம் சொல்ல
பெண்ணே உன் நடத்தை
சரியில்லையெனும்போது
சந்தர்ப்பம் சருக்கிவிட்டால்
சகதியென்ன சந்தனமென்ன
சத்தியவானும் சாத்தன்தான்

நீரில் நனைந்த தேகம்
நிர்கதியாய் திறந்து கிடக்க
அதை
நேரில் காணும் கண்களுக்கோ
நெசவு செய்வதுபோல் கிடந்தடிக்க
ஆசைக்கு தூபம்போடும்
அடியே உனது செயல்
அடுத்தோரையும் - பாவத்திற்க்கு
அழைக்குதே உனது நிலை

வாழைக் குமரிக்கும்
வனப்பு கோதைக்கும்
துளியும் வெட்கமில்லை
வளர்த்த வளர்ப்புகளும்
வளர்க்கும் வளர்ப்புகளும்
வர வர சரியேயில்லை - இதில்
ஆணைக் குற்றம் சொல்வதில்
நியாயமேயில்லை

நாய்களுக்குதான்
ஆறறிவில்லை
நடுரோட்டிலது
பிறந்தமேனியாக திரிந்தாலும்
தவறில்லை

"ஆனால்"

பெண்ணே
உனக்கு அறிவுண்டு
இருந்தும் பயனில்லை
திருமேனி திறந்துகிடந்தால்
உனக்குத்தானே
தீராத தொல்லை
தெருவில் வருவோர் போவோர்
தீண்டினால் கேட்பார் யாருமில்லை

ஈக்கள் எங்கு மொய்க்கும்?
இனிப்பிருக்கும் இடத்தினிலே
இல்லை
கழிவிருக்கும் தளத்தினிலே

நீ
கழிவாக வேண்டியயிடத்தில்
இனிப்பாகி
இனிப்பாக வேண்டிய இடத்தில்
கழிவாக ஆவதினால்
தீயவைகள் ஆகிறது
நல்லவைகள் அழிகிறது

நீ குளித்துவந்த கோலம்கண்டு
நீ உடை மாற்றும் நிலைகண்டு
கண்கொத்திப் பாம்பாய்
உன்னை ஆண்களின் கண்கொத்தி
நின்றது கண்டு

கண்கூசி  நின்றேன்
உன் செயல்கண்டு
காரி உமிழ்ந்தேன்
பெண்ணே உன்னை
நானும் ஒரு
பெண்ணாகயிருந்தும் அங்கு.


//நீண்ட நாளைக்கு பின் டிஸ்கி எழுகிறேன்..//

பொதுயிடத்தில் பெண்கள் உடைமாற்றக்கூடாது 
கொட்டையிடத்தில் தகவல் பலகை 
இருந்தும் என்ன பயன்?
எண்ணை சோப்புதேய்த்துக்குளிக்கூடாது
பட்டைதீட்டி பலகையில் தகவல்
இருந்தும் என்ன பயன்?
சுத்தமாக வைத்திருக்கவேண்டும்
சுத்த தமிழில் சொல்லில் வடித்து
இருந்தும் என்ன பயன்
அசுத்தத்தை தவிர அங்கு வேறுயில்லை

எல்லா சொல்லும் இருக்கு தமிழ[வழக்]கத்தில்
ஆனால்
யாருமதை செயவதில்லையே புழக்கத்தில்

ஆதங்கம்தான்
நம்ம நாடு
நம்ம இனம்
நம்ம மக்கள் 
என்ற ஆதங்கம்தான்
வேறு என்னசொல்ல..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

திகட்டாத தித்திப்பு


 ஆயிரம் நிலவு


திகட்டாத தித்திப்பு


கோடிப் பூக்கள்



சொட்டும் தேன்


சந்தம்பாடும் தென்றல்


கஸ்தூரியின் நறுமணம்


கொஞ்சிக் கூவிக் கூடும்
குயிலினம்


வண்ணம் காட்டும்
வானவில்
 
சிலு சிலுக்கும் தூறல்

 
சிறகடித்துப் பறக்கும்
வண்ணத்தி

குடும்பத்தின் குதூகலம்

 

மொத்தத்தில்
குழந்தைகளென்னும்


மழலையர்கள்
மகிழ்ச்சியின் உறைவிடம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது