நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மானே தேனே மயிலே


மானே,,,,,,, மலைத்தேனே-- உனைக்கண்டு மலைத்தேனே
எனைநானும் மறந்தேனே

மலைத்தேன் சொட்டச் சொட்ட
மலர்கள் கொட்டக் கொட்ட
மூச்சுக்காற்று முட்ட முட்ட
மனசுக்குள் வந்ததென்ன

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில
கண்ணிரெண்டும் கட்டிவிட்டு
கண்ணெதிரே நின்றுகொண்டு
கண்ணிமைக்காமல் ரசித்தென்ன

பஞ்சியில் நெருப்பாகி
பற்றிக்கொண்டு எறிந்ததென்னெ
நெருப்புக்குள் நீராகி
நெஞ்சிக்குள் நின்றதென்ன

தேனே,,,,,,,, திகைத்தேனே- தினம் தினம் தொடர்ந்தேனே
உனைநானும் நினைத்தேனே

உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
மெளனம் என்னைக்கொல்ல
எனையே நான் மறந்து
மரம்போல் நின்றதென்ன

மெல்லிய காற்றாகி
மேனியில் படர்ந்ததென்ன
வண்டுக்குள் பூவாகி
என்னை நீ வதைத்ததென்ன

ஆழ்மனம் ஆர்பரித்து அதில்
ஆசைகள் கூத்தடிக்க
அடிநெஞ்சை தொட்டு தொட்டு
அடி அத்தனையும் கோர்த்ததென்ன


மயிலே,,,,, மறுக்காதே-- எனை நீயும் மறக்காதே
உனை நீயே மறைக்காதே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது