நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இம்மாத லேடீஸ் ஸ்பெசல் இதழில் நான்.


என்னுடைய சிறு கட்டுரையான வாழ்ந்துபாரடி பெண்ணே! இம்மாத லேடிஸ்பெசல் மாத இதழில் வெளியாகியுள்ளது. எனக்கு கட்டுரை.மற்றும் கதை எழுதுவதைவிட கவிதைகளே அதிகம் எழுதவருவதால் இக்கட்டுரையிலும் அதன் சாரமே மிஞ்சி நிற்கும் பொருத்துக்கொள்ளுங்கள்..


அன்பு தேனக்கா [சும்மா] அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.
வலைப்பூக்கள் மாத இதழில் [லேடீஸ்பெசலில்] வலம்வருவதைகண்டு இணையதளம் எந்தளவு வளர்ந்திருக்கிறது என்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். ஒருமுறை முகநூலில் தேனக்காவின்பேசிக்கொண்டிருந்தபோது இதுகுறித்து விபரம்கேட்டேன் அவர்களும் அதன் விபரம் சொன்னார்கள் அதன்பேரில் போனமாத இதழுக்கு அனுப்பச்சொன்னார்கள் என்னுடைய வேலைப்பளுயின் காரணமாக சென்றமாத இதழுக்கு அனுப்பயியலவில்லை. கொஞ்சம் லேட்டாக அனுப்பியதால் மார்ச்மாத இதழுக்கு எடுத்துக்கொண்டதாக கிரிஜாமேடம் சொன்னதாக தேனக்கா சொன்னார்கள். 



பெண்களின் முன்னேற்றத்திற்காக இப்படியொரு மாத இதழ் வருவது மிகவும் சந்தோஷப்படக்கூடிய ஒன்று. வீட்டுக்குள்ளே இருந்துக்கொண்டு எழுதும் பெண்களைக்கூட உலகறியச்செய்யும் லேடீஸ் ஸ்பெசல் மாதஇதழக்கும் அதன் ஆசிரியை திருமதி கிரிஜா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். பெண்களின்  சின்னஞ்சிறு விசயமாகட்டும் சாதனைகளாகட்டும் அதனை வெளிக்கொண்டுவரும்போது எல்லையில்லா மகிழ்ச்சியடைவார்கள் அதனை செவ்வன செய்துவரும் லேடீஸ் ஸ்பெசலுக்கு மீண்டும் எனது உளமார்ந்த நன்றிகள்.

இதோ இணையத்தின் வாயிலாக 64 ம் பக்கம் படிக்க வாழ்ந்து பாரடி பெண்ணே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது