நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பசியின் வலி.


 

 
 
ருசியோடு இருக்கும் உணவை
பசியார நினைத்து
ஒரு கவளமெடுத்து
உண்ண துவங்கும்போது
 
பட்டினியால் வாடி  வதங்கிய
வயிறுகளும்
பதராகிப்போன உடல்களும் முகங்களும்
கண்முன்னே ஊசலாட
 
பசி மரத்து
ருசி வெறுத்து 
உயிரிடுக்கில் நுழைந்து
உள்ளத்தைக் குடைந்தது ஒரு வலி…

 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தியாகத்தின் அடையாளம்.

 
இறைத் தூதருக்கே
இறை சோதனை
இயலாத காலத்தில் ஈன்றெடுத்த
அன்பு மகனை
அறுத்து பலியிடச்சொல்லி வந்தது
இறைகட்டளை
 
பெற்ற மகனை பலியிடுவதில்
பெற்றோருக்கில்லை  
சிறு தயக்கம்
இறையாணையையேற்று
இறைத்தூதர் செய்யத் துணிந்ததோ
பெரும் தியாகம்
 
இறைச் சோதனையில்
இறை நேசருக்கு
இமாலய வெற்றி
நாயன் செய்தான்
நல்லதோர் செயலை
நரபலி நீக்கி
 
தீன்மார்க்கத்திலொரு சரித்திரம்
தீன்தாரியின் உறுதியான ஈமான் [இறைநம்பிக்கை]
தியாகம் என்பதின் அடையாளம்
இப்ராஹிம் நபி என்பதே அதுவாகும்
புண்ணியம் சேர்ப்பதிலொரு சிறப்பம்சம்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளாகும்…..


இவ்வுலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் ஈத் முபாரக் என்னும் ஹஜ்ஜுப்பெருநாள் தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்.

ஏங்கும் நெஞ்சம் [கிளிக்]


யாஅல்லாஹ்!
இப்புனித ஹஜ்ஜுப் பெருநாளின் பொருட்டால்
எங்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக!
இப்ராஹிம் நபி ஹாஜிரா அலை அவர்களின்
பொறுமை மனப்பான்மையையும், சகிப்புத்தன்மையையும்
எங்களுக்கும் தந்தருள்வாயாக.
அடுத்தவருடம் நாங்களும் ஹஜ் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வாயா

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

முன்பாவம் [முன்செய்தபாவம்].



மனக்கிடங்கில்
மன்றாடிக் கிடக்கும் ஊமை உணர்வுகள்
மங்காமல் மறையாமல் கிடந்தழும்
மடிந்துவிட வேண்டி

ஊற்றெடுக்கும் உணர்வுப் பிளம்புகள்
ஊழிக் காற்றிலும்
உதிர்ந்துபோன இலைகளாய்
ஊசலாடியே உயிர்வதை செய்தபடி 
எரிவதெல்லாம்
ஒளியாகாது எனத்தெரிந்தும்
எரிந்துகொண்டிருகிறது
சிறு நெருப்பு
அணைந்து விடாது
அடைக்கலம் கொடுக்க
ஆளில்லையென்று துடித்தபடி

இன்பக்குழிகளுக்குள்
இளைப்பாற ஏங்கிய இதயமாய்
பனிப்போர்வைக்குள் சிக்குவதாய் எண்ணி
பாவச்சிறைக்குள் மாட்டிக்கொண்டது சாப விதி

உயிர் நசித்து!உயிர் நசித்து!
ஊறுவிளைவிக்கும் மன உலைச்சலுக்குள்ளே
உடல் எரித்து!உணர்வு குலைத்து!
உயி[து]ர்நாற்றம் வரக்காரணமென்னவோ முன்பாவ சதி
-----------------------------------------------------------------
இலண்டன் வானொலியில் வியாழன் கவிதை நேரம் பகுதியில் சகோதரி பேகம் அவர்களால் வாசிக்கப்பட எனது கவிதை..
மிக்க நன்றி சகோதரி பேகம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

யார் இவர்?

 மேலும் அறிய இதை கிளிக் செய்யவும்..
 
 
அன்பின் திருவுருவாய்
ஆதியின் நெறிவுருவாய்
அகிலத்தில் பிறந்து
அண்டதிற்கே முன்மாதரியானவர்

பின்னால் வரப்போகும்
பண்பின் பகுத்தொளியென்று
மூத்தோர் வேதங்களாலும்
முன்மொழியப் பெற்றவர்

சாணக்கிய தந்திரங்களை
சாதூர்த்தியமாய் அடக்கி
சாத்தான்களின் வேதத்திற்க்கு
சாட்டையடி கொடுத்தவர்

சத்திய மார்க்கத்தைக் பரப்ப
தன்நாடு துறந்து
இறைவனுக்காக எதையுமே
எதிர்த்து நின்று ஜெயித்தவர்
அனைவரும் சமமென்று
அரவணைத்து சினேகமாய்
அதிசய உள்ளத்தோடு
அன்பு நிறைந்து நடந்தவர்

வாக்குத் தவறாது வாழ்ந்து
நீதி தவறாது காத்து
நெறி பிரழாது கடைப்பிடித்து
நேர்மையின் பிறப்பிடமானவர்

உலகத்தின் ஆண்களுக்கு
ஒப்பற்ற முன்னோடியிவர்
ஓரிறை கொள்கையின்
உயிர் நாடியிவர்

அரசராய் வாழ்ந்தபோதும்
ஆணவம் அறுத்தெறிந்து
ஏழ்மையிலும் மகிழ்வுகண்டு
எழிலோடு வாழ்ந்தவர்

புகழுக்கு ஆசைப்படாத
புதுமை மனங்கொண்டு
அகிம்சையான புரட்சிகளால்
ஆட்சியை ஆண்டவர்

சகமனித உணர்வுகளை
கருணையோடு புரிந்துக் கொண்டு
பிறமத மனிதர்களிடமும்
பண்புகொண்டு நடந்தவர்
 
படைத்தவனே புகழ்ந்த
அருட்கொடை இவர்
நற்குணமும் நன்னடைத்தையும் நிறைந்த
நிழற்கொடை இவர்

 ஈருலகிற்க்கும் சிறப்புப்பெற்ற
ஏற்றம் நிறைந்த ஏந்தலர் - அவரே
தீனுலகின் அருள்போற்றும்
திருநபித் திருத்தூதர்
முகமத் என்னும் எங்கள் நபிநாதர் …..
 

அன்புடன் மலிக்கா இறைவனை
நேசி இன்பம் பெறுவாய்.

காதலைத்தேடி...





கால்குளம்பில்
அடிக்கப்பட்ட ஆணிகளால்
காயம் ஏற்பட்டபோதும்
கணப் பொழுதேனும்  யோசிக்காது

என்
கனவுக்குதிரை
காற்றை கிழித்துக்கொண்டு பறந்தது

காதலனைத் தேடியல்ல
என்னிதயத்தை
களவாடிச்சென்ற
காதலைதேடி...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

துரோகங்களின் மூப்பு...


 
பசுமையாய் படர்ந்த மனக்கிளையை
துரோக நீரூற்றி பட்டுபோகவைத்து 
மர[]த்தடியில் கிடத்திவிட்டு
மார்தட்டி மற்ற கிளைபரப்பி
வான்நோக்கி பறக்கிறாய்.
 

மெளனங்களை
மொழிபெயர்க்கத் தெரியா என்மனக்கூடு
திடமில்லாமல் திண்டாடி 
நேசமில்லா உன்மனக்கிடங்கில்
பாசமெதிர்பார்த்து
துடித்தது கதறல்களாய், 
 
நேசத்தீ நெஞ்சேறியபோதும்
சுவாசிக்கத் தெரியாமல்
சுடும்தீயின் சுவாலையில்
சுருண்டுகிடந்தே சோர்ந்தது மெளனமாய்.
 
மலக்குழிக்குள் மாட்டிக்கொண்ட
தோரணையாய் என் மனம்
துரோகங்களில் சாயல்
உன் முகத்தில் தெரியவில்லை
ஆனால் நீதான்
துரோங்களின் மூப்பு என்பதை
நானெப்படி அறியாது போனேன்

சில தாலி வேலியாக
சிலவேலி தாலிக்காக்க
தாலிதந்து வேலியமைத்து
வெண்ணை திரண்டு வரும் சமயத்தில்
தாளி உடைவதுபோல்
விட்டுச் சென்றுவிட்டாய்
வீதியில் நிறுத்திவிட்டு

புயலடித்து உடையா கிளையை
மரமே உடைத்து
மண்ணில் வீழ்ந்தியபோது
வேண்டாத சருகுகளோடு ஒரு சருகாய்
விதியை நொந்து
வீசும் காற்றுகளோடு மல்லுக்கு நிற்கிறது
வஞ்சனை செய்யத்தெரியா என்மனது


சிறகு தந்து பறக்கவைப்பாய் என்றிருந்தேன்
இப்படி
இதயமொடித்து இறக்கவைப்பாய் என்பதையறியாமலே….


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

இருளின் வெளிச்சத்தில்.

 

ஆழ்ந்த உறக்கத்தினூடே
இமைகள் இறுக்க
மூடியிருக்கும் வேளையில்
இரு இமைக்குமிடையே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
அர்த்த ஜாமத்தில்
அடர்ந்த காடுகளின் நடுவே
வான் நோக்கிய
கிளைகளை நீக்கிக்கொண்டு
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருள் சூழ்ந்த
பூட்டிய அறையினுள்
சாவித் துவாரத்தின் வழியே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
உள்ளக்கூட்டில் விஷமேற்றப்பட்டு
மனமுடைந்த நிலையில்
விம்மி விம்மி கரைந்து
இதயத்தில் இருள் கவ்விய வேளையில்
இருளைக்கிழித்து - எங்கிருந்தோ
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருளை இறுக்கியணைத்திருக்கும்
வெளிச்சம் இருளைவிட்டு அகழ்வதில்லை
வெளிச்சத்தின் வாசத்தை நுகராது
இருளுக்கு இருக்கவும்  விருப்பமில்லை!
 
இருளின் சாம்ராஜ்யதில்
வெளிச்சத்திற்கான அழைப்புகள்
எப்போதும் வரவேற்க்கும்
 
வெளிச்சத்தின் வெட்டவெளியில்
இருளுக்கான இருக்கைகள்
எப்போதும் போடப்பட்டிருக்கும்!
 
ஆகமொத்ததில்”
 
வெளிச்சம் இருள்
இருள் வெளிச்சம்
வெளிச்சத்தை தொடரும் இருள்
இருளில் அடங்கும் வெளிச்சம் ..

 

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

நல்லவேளை

நல்லவேளை
நகர்ந்து செல்லும்
நாளும் பொழுதும்
நம்மனைவருக்குமே ஒன்றானது
 
இல்லையெனில்!
 
பசித்தவனின்  பொழுது
பரிதவிக்க
புசித்தவனின் பொழுது
ரசித்தபடி போகும்
அவதிகள் ஆயிரமாயிரமடங்கு
அதிகரிக்க
ஆகாதவைகள் ஆராதிக்கப்பட்டு
ஆகுமானவைகள் நிராகரிக்கப்படும்
 
நல்லவேளை நம்மனைவருக்கும்
இறந்தபின்
ஆறடி நிலமே சொந்தமாக்கப்பட்டது
இல்லையெனில்
 
அதுவும் அரையடியாகவும்
அறுவதடியாகவும்
அல்லோல்படுத்தப்பட்டு
அவதிக்குள்ளாகும்
 
நல்லவேளை
நாளும் பொழுதும்
நம்மனைவரும் ஒன்றானது
 
இல்லையெனில்
 
இப்பூமியிலேயே
நாளொருவரின் பொழுது
நரகமேகுமே என்செய்வது..
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

இப்படியும் நடக்குமா!



 
 
நினைக்கவேயில்லை
இப்படியும் நடக்குமென்று
என்றோ ஒன்றாகி பிரிந்த
இரண்டு இதயங்கள்
யாரென்று அறியாமலே உறவாடின
இணையத்தின் வாயிலாக
 
எத்தனைநாள்தான்
எழுத்திலேயே தொடர்வதென
தொலைபேசிவழியே தொடர்புகொண்டு
குரலைக்கேட்ட மறுநொடியில்

மூளைக்குள் ஒரு மின்னல்
இக்குரலோசை இதயத்தின் அருகே
இசைபாடியதாயிற்றேயென

எதார்த்தமாய்
நீதானே அவளென்று கேட்க
அவளேதான் நானென்று சொல்ல

மேலிருந்து யாரோ
பூமழை தூவியதுபோல்
பொன்னடல் பூரித்தது
புல்லாங்குழல் வாசித்தபடி உள்ளம்
                                                            புதுராகம் பாடியது    

அலைபேசிவழியே ஆச்சர்யங்கள்
அலைமோத
இணைந்த இதயங்கள் இரண்டும்
மகிழ்ச்சிகடலில் குளித்தது
 

தூரம்போன நட்பு
தோள் தொட்டு தூளியாடியதைக் கண்டு
வான் நோக்கிய
                                                                இரண்டு கைகள்
இறைக்கு நன்றி சொல்லி
இளகி உருகியது
 
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
 இருக்கும் இடங்களை நோக்கி
இதயம் ரெக்கைகட்டிப் பறந்தது...


---------------------------------------------------------------------------
என்னப்பா இது யாருப்பா அது என்றென்றாலாம் கேட்கத்தோணுதா.. சரி சரி சொல்லிடுறேன்.. 1.1/2 வருடமாக இணையத்தின்வாயிலாக எழுதின்மூலமே தொடர்பு கொண்டிருந்த நாங்கள்.  நேற்றுகாலை ஒரு மெயில்கண்டு அதில் அலைபேசிகேட்டுயிருந்ததும் உடனே அனுப்பிவைத்தேன். நேற்று இரவு அலைபேசி அழைக்கும்வேளை ஹாஸ்பிட்டலில் இருந்தேன். [அட நமக்கு ஒன்னுமில்லைபா துணைக்குபோயிருந்தேன்] ஒலித்த அழைபேசியை எடுத்து  பேசியபோதுசலாம் சொல்லி  என்னமேடம் நல்லாயிருக்கீங்களான்னு வந்தது. நல்லாயிருக்கேன்னு சொல்லும்போதே இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கோமேன்னு மூளைக்குள் மின்னல்மின்னியதுபோலிருந்து. அப்பாலதானே தெரிந்தது அது எனக்கு மிகவும் பலக்கப்பட்ட குரல் என்று உடனே நீங்க அவுகதானேன்னதும் அடஆமா எப்படிதெரியும் என கேட்க நானும் சொல்ல அடி நீயா உன்னையா நான் மேடம் கீடமெல்லாம் போட்டேன். வாங்க போங்கனெல்லாம் இம்பூட்டுநாளா சொன்னேன் .

அப்பாவி மலிக்காவா இது அடப்பாவி நீதானா இப்படி கவிதையில் கலக்குற.நம்மபேமுடியலடிமா என ஆச்சரியங்கள் அலைமோதியது இருவருக்குள்ளும்.. சந்தோஷம் தாங்கலை எனக்கு எத்தனை வருடங்கள் கழித்து அப்பப்பா சத்தியமாக நான் நினைத்துக்கூடபார்த்ததில்லை இப்படி நாங்கள் மீண்டும் இணைவோமுன்னு..

அதுசரி யாருப்பா அது எப்படிப்பா அவுக பழக்கம்.. அதுவா. அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்.. அவுகன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் கட்டயா சற்றே குட்டையா கலையான கும்முன்ன கன்னங்களோடு அழகா  சூப்பராக இருப்பாங்க. அவுக வெளிய ஹாஸ்டலிலிருந்து போக துணையே நாந்தான்...இவுகளுக்கு ஒரு டியர் ப்ரண்ஸ் இருக்காக அவுகன்னா இவுகளுக்கு ரொம்ப உசிரு அப்படியொரு நட்பு.. இப்படியான எங்கள் பாசம் நான் பாதியிலே மதரஷாவிட்டு நின்னதாலே விட்டுப்போச்சி.. ..1991  [நான் எங்கே நின்னேன் நிப்பாட்டிட்டாக கல்யாணமுன்னு ஹூ ஹூம், அழுறேனாம்] சின்னப்புள்ளவேறு அவுக போன் நம்பரோ அல்லது அட்ரஸோ வாங்கிவச்சுக்க தெரியல அப்போ எனக்கு. அதன்பின்பு இப்போது 2012 ல்  அல்லாஹ் அக்பர்
இணையம் அதில் எழுத்து அது சேர்த்து வைத்தது காணாப்போச்சோன்னு நான் நினைத்திருந்த நட்பை.. அல்ஹம்துல்லில்லாஹ்..

அந்த அக்காவை நீங்களுக்கும் யாருன்னு பார்க்க ஆசையா இருக்கா இங்கே கிளிக் செய்யுங்கள்..

நம் உணர்வோடு ஒன்றிய சிலவற்று நீங்கியதாய் நினைக்கும் எதுவும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை நம்முடனே இருக்கிறது நாம் அறியாமல் நம்மருகிலேயே..

மனம் நிறைந்த சந்தோஷம் இறைவனுக்கே புகழ் அனைத்தும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

சருகாகும் மனது!



பருவகாலத்தில்
பச்சிலையான காதல்

போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்

கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து

சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து

ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை

மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
 
இக்கவிதை தமிழ்த்தோட்டத்தில்  “சருகுகள்” கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த கவிதை

காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்

சட சடக்கிறது சருகு!
----------------

இது ”சருகு” கான ஹைக்கூ போட்டியில் மூன்றாமிடம்..

மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது