நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னது மீண்டுமாஆஆஆ!


அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க. நலமா?
சுகமா? செளக்கியமா?

நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த சற்று நேரத்தில் உங்களுடன் உறவாட ஓடோடி வந்துவிட்டேன்.அன்பு நெஞ்சங்கள் அனைவரும் இறைவனின் உதவியால் நலமோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?. வலையுலகம் ஒரு தனியுலகமாக இயங்குவது சந்தோசமே!

கடந்த இடைப்பட்டகாலத்தில்  உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே  தேங்கமடைந்ததும்  . சற்று மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சூழல்களை அனுசரி்க்கும்,நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! அதனை சரிவர செய்துமுடித்த திருப்தியோடு மீண்டும் உங்கள் முன். 

என்னது மீண்டுமாஆஆஆ. யாருப்பா அது அதிர்ச்சி அடைவது சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க இதையும் அப்படியே நெனச்சிகீங்களேன்.
ஹா ஹா ஹா..

நெஞ்சத்தின் சில அதிர்வுகளை
நிலைகொள்ள பலநிகழ்வுகளை
நித்தம் நடக்கும் நிகழ்வுகளை
எண்ணத்தால் கோத்து
எழுத்து வடிவில் ஏட்டில்
விரல்வழியே வடிக்க
விரைவில் வருகிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது