வலுவான நட்பு
விலகிநிற்குமா
பிரியமான நட்பு பிரியத்துணியுமா
வார்த்தையென்னும்
நூலெடுத்து
அன்பெனும் பந்தம்கோர்த்து
நட்பாய் நுழைந்த பாசம்
நூல்கட்டிய பட்டமாய்
வான்நோக்கிப்போகுமா -இல்லை
வார்த்தைகளை மரணிக்கசெய்து
மனம் மெளனமாகுமா
நட்பென்பது கலங்கமில்லாதது
கலங்கியப்பின் அது நட்பாகாது
உண்மை நட்பென்றும்
ஊமையாகிப்போகாது
உயிர் விலகும்வரை
நட்பைவிட்டு விலகாது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்