நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மறக்க நினைக்காதவைகள்-நினைத்தாலும் முடியாதவைகள்.

கடந்தவைகளை அதாவது 2010 த்தில் நடந்தவைகளை திரும்பிபார்க்கச்சொல்லி அதை ஒரு தொடராக எழுதச்சொல்லி சொன்ன ஆமினாக்காவே நீங்க வாழ்க வாழ்க ஆத்தாடியோ நீங்க எப்படி எழுதுனீக அம்பூட்டையும். நமக்கு டைரியெல்லாம் எழுதிபழக்கமில்லீங்கோ நீங்க சொல்லிட்டீகளேன்னு இங்கே சொதப்பி வச்சிருக்கேன் ஏதோ என்னாலா முடிஞ்சது  ”சரி சரி டைரிய படிக்கவிடு” அடுத்தவங்க விசயமுன்னா என்னா ஒரு வேகம்.சரி படிச்சிட்டு போகும்போது எப்படிபோவீங்கன்னு சொல்லிட்டுபோங்க..

ஜனவரி
புதுவருடம் புதியயிடத்தில் 8-9 வருடங்கள் துபையில் கூட்டுக் குடும்பமாக வில்லாவில்இருந்துவிட்டு இந்தவருடம் சார்ஜாவில் தனிகுடித்தனம் பிளாட்டுக்கு வந்தது மனசுக்கு பிடிக்கவேயில்லை ஆனபோதும் என்ன செய்ய வேறுவழியில்லை வந்தாச்சி,ஏனோ தெரியவில்லை அங்கிருந்த மன அமைதி இங்கு கிடக்கவில்லை.அதையும் மீறிய சந்தோஷங்களும் கிடைத்தது.
தமிழ்குடும்பத்தில் என் படைப்புகளை ஊக்கவிக்கும் பொருட்டாக தந்த பரிசுகிடைத்தது
தமிழ்குடும்பம் தந்த பொக்கிஷம்.மற்றும் 15-1-2010 .அன்று சுடர்வம்சம் தொண்டு நிறுவனத்தின் 5.ஆம் ஆண்டுவிழா

அதில் நானும் கலந்துகொண்டு அவர்களின் நற்பணிக்காக நானும் கவிதை எழுதிச்சென்று வாசித்தது என இம்மாதம் கடந்தது
உதவும் உள்ளங்கள்
பிப்ரவரி
இன்று அன்புமகனின் 11 வது பிறந்தநாள்.முதல் நாளே சொல்லிட்டார் மம்மி கேக்கெல்லாம் வேண்டாம் மம்மி நான் பெரியவனாகிட்டேன்ல
ஸ்கூலுக்கு மட்டும் சாக்லெட் வாங்கிதாங்க இல்லாட்டி பசங்க கிண்டல்பண்ணுவாங்கன்னு சொன்னதும் நீ பெரியவாகிட்டியான்னு அன்போடு கட்டிக்கொண்டோம்
சிறியவனென்றாலும் பெரியவன்போல் அவன் பேசும்பேசு அதிலும் சூழ்நிலையறிந்து நடப்பதுதான் அவனின் பண்பானகுணம்
நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வமுமாக வாழவேண்டும் என்பிள்ளை பல்லாண்டுகாலம்.அவனுக்காக கவிதையெழுதியது

.அதோடு அவனுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துப்போய் அவனை மகிழ்வித்தது என் படைப்புகளுக்காக நிறைய நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களை பெற்றது என இம்மாதம் கடந்தது
மார்ச்
அகமும் புறமும் மகிழ்ந்து அன்போடு நெஞ்சங்கள் இணைந்து இன்றோடு 18 வது ஆண்டில் அடியெடுதுவைத்த எங்கள் காதல்
என்றும் இளமைக்காதல் எங்களுக்குள்

அதை அசைபோட்டபடி கொர்பக்கான் பீச் படகு சவாரி மரூஃப் புட்பால் ஆடிய சந்தோஷம் அப்படியே கராச்சி தர்பாரில் செம சாப்பாடு என
ஒரு டூர்..
மகிழ்ச்சியில் மனம் ஆனந்தமழையில் நனைகிறது எதற்கு நர்கீஸ் நடத்திய கவிதைபோட்டியில் கடைசி நேரத்தில் பங்குபெற வய்ப்புகிடைத்தபோதும் என்கவிதைகள் ஆறுதல்பரிசை வென்றுதந்ததுதான்
அடுத்து என் கவிதை வயோதிகத்தின் விளிம்பில்!
lயூத்புல் விகடனில் வெளியாகி மகிழவைதந்தது. மனிதகடவுள்களின் மர்மங்கள் அம்பலமாகி பல பல மனங்களை அதர்ச்சிக்குள்ளாகியது  மாக இம்மாதம் கடந்தது.

ஏப்ரல்:
ஏப்ரல் பூல் எல்லாருக்கும் ஆனால் எங்களுக்கு ஏப்ரல் பூ ஆமாம் இன்றுதான் முதல் முதலாக பிரபல பதிவர்களில் ஒருவரான எனதருமை அக்கா ஜலீலாக்கா சமையல் அட்டகாசம்   அவர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்சியைதந்தது .

இம்மாததிலிருந்துதான் பேஷ்புக்கிலும்  என் கவிதைகளின் அறங்கேற்றம்.சார்ஜா சீமான் ஆண்டுவிழாவில் அன்பு நபிகள்[ஸல்லல்லாஹ்]அலைகிவஸ்ஸலம் அவர்களுக்காக கவிதை வாசித்தது.அந்த ஆண்டுமலரில் என் முதல் சிறுகதையான தடுமாற்றம்  வெளியானது

ஹத்தா சென்றிருந்தோம் அங்கிருந்து 10 கிலோமிட்டர் கடகட கடகடா ரோட்டில்சென்று மலைகளுக்கு நடுவில் ஓடும் சிறிய ஓடைக்கு போனோம் பலபலமுறை சென்றிருந்தாலும் மீண்டும் செல்லும்போது புதுசாக போவதுபோலிருக்கும் வெரும் மலைகள்தான் என்றபோதும் பிரம்மிப்பை ஏற்படுதக்கூடிய வகையில் இருக்கும். அப்படியான பல சுவாரஸ்யங்களோடு கடந்த அந்த மாதம் கடந்தது.

மே:
மகனுக்கான பரிட்சை சமயம்.வெளியில் ஊர் சுற்றுவதை தவிர்ந்திருந்தோம்.அப்போது மகிழ்ச்சியான விசயமாக ஸாதிக்காக்கா வந்திருந்தால் பெண்பதிவர்கள் பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!என்று அக்காமார்களை சந்திததில் அளவற்றமகிழ்ச்சி.அதோடு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிமுகவிழா நடந்தது அதில் என்னை மகளிர் அணி செயளாலராக நியமித்தது. அவ்விழாவில் நான் கவிதை வாசித்தது. ஃபஸீலா ஆசாத் [நிலவு ததும்பும் நீரோடை]கவிதையாசிரியர் அவர்கள் நட்பு கிடைத்தது என்று மகிழ்ச்சிகள்யொருபுறமிருந்தபோதும்
ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதில் பல உயிர்கள் பலியானது மனதை வெகுவாக பாதித்து பல இரவுகளின் உறக்கதை பறித்தது என நகர்ந்தது அந்த மாதம்.

ஜூன்

  அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம். என் தந்த ஊரான அதிரையைச்சேர்ந்த யுனிக்கோட் ”தேனி உமர்தம்பி” அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டது. அதற்கான என்னுடைய முயற்சிகளும் இருந்ததினை நினைத்து மிகுந்த பெருமையடைந்தேன்.

பசங்களுக்கு லீவ் விட்ட சமயம் கேட்கவா வேண்டும் U A E யிலிருக்கும் 7 நாடுகளையும் சுற்றிச்சுற்றி பார்த யிடங்களையே பார்த்து பார்த்து வந்தோம். 5 பேம்லி சேர்ந்து ஃபுஜேரா போய் அங்கிருந்து மஷாஃபி மலைக்குள் போனோம் மஷாபி தண்ணீர் வரும் இடத்திற்கு கிட்ட தட்ட 300 350 அடி பல்லத்தாக்கில் இறங்கவேண்டும் அங்கிருந்து 2 கிலோமீட்டார் நடந்து சென்றால் அங்கே ஒரு ஃபால்ஸ் அதிலிருந்து கொட்டும் நீரை பார்க்கும்போதே பரவசமாகும் அது கொட்டிய இடத்தில் நீரோடைபோல் கிடக்கும் அதில் குளிப்பவர்கள் ஏராளாம் நாங்கள் அதையும்தாண்டி மேலே ஏறி சிறு ஓடையாக இருந்ததை பெண்களுகென்று மாற்றிக்கொண்டோம் அங்கு குளித்த நீர்தான் கீழேவிழும்.ரசனைமிகுந்தவர்கள் சிரமம் பார்க்காமல் போகிறார்கள். நாங்க இங்க வந்த நாள்முதலாய் 30 -40 முறைக்குமேல் போயிருப்போம் .அங்கே இறங்கும்போது எங்களோடு வந்தவர்களுக்கு சிரமமாகிவிட்டது மிகுந்த சிரமப்பட்டுதான் இறங்கினார்கள் அவர்கள் புதிது நல்லாகூட்டியாந்தீங்க இப்படியொரு இடத்துக்கு அப்படின்னு வந்தவங்க நீரைப்பார்ததும் வாயடைத்துபோனார்கள் குளியோ குளின்னு குளிச்சிட்டு மீண்டும் மலையேற வரம்போதுதான் அந்த அசம்பாவிதம்,,,,,,,

என்ன நடந்திருக்கும் அது அடுத்த பதிவில்தொடரும்....

ஒருபச்சபுள்ளை எவ்வளவுதான் எழுதமுடியும் இதுக்கே முதுகு முறிஞ்சிபோச்சி. ஒருவரின் டைரி படிக்கும்போது சுவாரஸ்யம் வேண்டுமல்லவா. இதுக்குதான் இது.
ஒருவருடத்திற்குள் எத்தனை எதனையோ சம்பவங்கள் நடந்தேறுகிறது அத்தனையும் எழுத ஒரே நாளோ அல்லது ஒரு டைரியோ போதாது அதுக்குதான் நாம டைரி எழுதுவதேயில்லை. எல்லாமே நம்ம மூளையும் மனதும் சேமித்துகொள்ளட்டும் என்று விட்டாச்சி.அப்பப்ப நினைவுகள் வந்து தட்டியெழுப்பும். அப்படி தற்போது குட்டிஎழுப்பிய ஆமினாக்காவுக்கு என்மனமார்ந்த நன்றிகள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது