நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மீண்டும் நான் உங்களோடு..




முயற்சி செய் 
முடியாததென்று எதுவுமில்லை!
முட்டுக்கட்டைகளையும்
முட்ப்பாதைகளையும்
கடந்தே வா
முல்லை வாசத்தோடு
முன்னேற்றப் பயணத்திற்கான
முன்வாசல் திறக்கும்..

 திறந்துவிட்டதே 
இதுதான் இலக்கோ என்றெண்ணிமட்டும்
தொடராது விட்டுவிடாதே!
இலக்கை அடைந்துவிட்டோமென                                                                                       நினைக்கும்போதே அடுத்தகட்டத்திற்கான                                               அடியெடுத்துவைக்கமாட்டாய்...
தெளியும் நீரோடையாய் ஓடிக்கொண்டேயிரு!
உணர்வுத்தேடல்கள் தீரும்வரை
உணர்வலைகள் உயிர்கடற்கரையோடு                                                                                சங்கமங்கள் நிகழ்த்திக்கொண்டேயிருக்குவரை..


மணிமேகலைப்பிரசுரத்தின் எனது மூன்றாவது நூல் வெளியீட்டுவிழாவின்போது...
நடிகை லக்‌ஷி அவர்கள் பொன்னாடைபோர்த்த
நடிகர் சிவக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்கள்..
டைரட்கடர் திரு எஸ் பி முத்துராமன் ஐயாவும்

வானொலி அறிப்பாளர் கிரிகெட் வர்ணனையாளர்
சாத்தான்குளம்
திரு அப்துல் ஜப்பார் (வாப்பா) அவர்கள் நிகழ்வுக்கு வருகைதந்ததோடு நூல்வெளியீட்டில் கலந்துகொண்டது எனக்கு மட்டற்ற மகிழ்வை தந்தது..
.
//ஒட்டாத உறவுப்பாலங்கள்//..
ஒட்டி வாழ்க்கைப்பயணங்கள் தொடரவேண்டும் என்றென்றும் அன்புடன்..

அன்புடன் மலிக்கா இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது