நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏழெட்டு கேள்விக்கு எனது பதில்!



கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள் முகநூலில் ஒரு சகோ என்னிடம் கேட்டார்கள், அவைகளுக்கான பதில்கள்தான்,கேள்விக்கு கீழே கூறியுள்ளவைகள்.
----------------------------------

 உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”

யாரும் உதவின்னு கேட்டால், முடியாத சூழ்நிலை என்றபோதும்
என்னாலானவைகளை செய்வதும், செய்ய நினைப்பதும்.
செய்ய முடியாதுபோனால் அதற்காக பெரிதும் வருத்தப்படுவதும்.


“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”

 என்னை வேண்டாமென ஒதுக்குவோரையும் சேர்த்து!
யாரையும் ஒதுக்காமல் எல்லோரிடமும் அன்புகொள்ளவேண்டும் என எண்ணுவது.


“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
உயிரை உருக்குலைத்து வதை செய்யும் வக்ரம்
உயிரோடிருக்கும்போதே நடைபிணமாக்கும் கொடூரம்
இது யாருக்கும் வரக்கூடாதென்பதே எனது எண்ணம்.

“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”

இறைவனுக்கு மட்டுமே அடிமையான மனிதரை,
இன்னொரு மனிதர் அடிமையாக்குவதும்,
இன்னொரு மனிதரிடம் அடிமையாய் கிடப்பதும். மடமைத்தனம்.


“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”

தவறெனத் தெரிந்தும், தொடர்ந்து தவறின் பக்கம்போகும் எண்ணங்களை!
பிறரை எரித்து அதில் குளிர்காய நினைக்கும் உள்ளங்களை!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித்திரியும் பொய்முகங்களை..


“உங்களுக்கு விருப்பமான தொழில்?”

பிறரை ஏமாற்றாமல் தா[நா]னும் ஏமாறாமல்
ஆகுமாக்கப்பட்டவைகளாய் செய்யும் எத்தொழிலும்.

“உங்களுக்கு விருப்பமான நிறம்?”

கிரீம்.வித் பீக்காக் புளு.அதாவது, வெண்மை கூடிய சந்தன நிறமும்.
[மயில் கழுத்திலிருக்கும்] ஊதா கலந்த பச்சை நிறமும்.

-------------------------------------------------------
இத்துடன் இன்னொரு சகோ மெசேஜ் மூலம் கேட்ட கேள்வி?

உங்கள் வாழ்க்கை நிறைவாக உள்ளதா?

நிறைவு என்பது எதிலிருக்கிறது மனதில்தானே! அது நிறைவாகவேயிருக்கிறது , குறைகளென்பது அப்பப்ப கூடிக்கலையும் மேகம்போல, நிறைகளென்பது கூடிகலைவதை வேடிக்கைப்பார்க்கும் வானம்போல, 
நிறை குறையும் சமயங்களிளெல்லாம் 
நிவர்த்திசெய்து நிறைவாக்கிகொள்கிறேன்.
நிறைவடைந்து 
நிறைவடையச் செய்கிறேன்..
 

என்னிடம் கேள்விகள் தொடுத்து, என்னக்குளிருப்பவைகளை எனக்கும் தெரியவைத்த,  இரு சகோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது