துணையிருக்கிறான்
இறைவன்
தொடர்ந்து எழுத!
துணையாய் இருக்கிறா[ர்]ன்
கணவன்
துணிந்து எழுத!
இருவரின்
ஆத்மார்த்த துணையால்
எனக்குள் எழும்
எண்ணங்கள்
எழுத்துகளாகிறது!
உள்ளன்புகளோடு
உரிமைகள்கொண்ட
கருத்துகளை பகிரும்
உங்களை அனைவர்களாலும்
உணர்வுகள் இன்னும்
ஊற்றெடுக்கச் செய்கிறது!
ஒன்றில் தொடங்கி
இதோ
ஐனூற்றி இருபத்தைந்தாவது
பதிவாக
நீரோடையில் மட்டும்!
நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை
அன்பான உள்ளத்தோடும்
ஆனந்தக் கண்ணீரோடும்
இறைவனுக்கும்
இங்குவந்து செல்லும்
அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்..
--------------------------------------------------
என்றும் நன்றிகளோடு
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.