நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரும் புதிரும்.

 
இருக்கு என்கிறேன்
இல்லை என்கிறாய்!

நெருப்பு என்கிறேன்
புகை என்கிறாய்!

நீர் என்கிறேன்
கானல் என்கிறாய்!

கவிதை என்கிறாய்!
கிறுக்கல் என்கிறேன்

மனம் என்கிறேன்
சிறை என்கிறாய்!

எதிர் என்கிறேன்
நீ புதிர் காண்கிறாய்!

நான் காதல் என்கிறேன்
நீ மோதல் கொள்கிறாய்!

நீ எனக்கு என்கிறேன்
நீ எதற்க்கு என்கிறாய்!

இருவருக்குள் எப்போதும்
எதிரும் புதிருந்தான்!

இருந்தபோதும் 
இனிக்கிறதே!இல்ல[ற]ம்..

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பாவமன்றோ!

 
எல்லாம் சரியிருந்தும்
இருதயம் மட்டும் இறுக்கிப்போன
இரக்கமற்ற ஈனப் பிறவிகளாய்!
நலமிருந்தும்
மனமற்றுப் பேசித்திரியும்
மனசாட்சியற்ற மாக்களாய்!
மண்ணில் உலவும் மனிதசாதிகள்

வருவோர் போவோரை
வேடிக்கை பார்த்து!
வெடுக்குச் சிரிப்பு சிரித்து
வேசமிடத்தெரியா வெகுளிகளாய்!

கந்தலான ஒட்டுதுணியில்
கருவிழிகள் கலங்கியபடி! 
குழந்தைபோன்றே உணவை
குதறிப்போட்டு சேட்டை செய்து!
தனக்குத்தானே பேசியழும்
தன்னுணர்வற்ற செய்கைகளால்!

பணமில்லா சிரிப்பு சிரிப்பதால்
தான் பைத்தியமென்றும்
தனக்கொரு அந்தஸ்தில்லா நிலை
அதனால் அரைலூசு என்றும்
மனமிருந்தும் அது சற்று
நலமில்லாததால்
மனநலவாதியென்றும்!

குற்றமற்றிருந்தும்
குற்றவாளியைப்போல்பிறரின்
கேலிப் பார்வைகளால்
குன்றிபோவது கொடுமையன்றோ!

தன்னையறியாமல்
தன்னுணர்வு புரியாமல்
அடுத்தவர்களால் அவமதிக்கப்படும்
இந்நிலையிலுள்ளவர்களை
இழிவு செய்வது பாவமன்றோ!

எந்நிலையிலும் தனக்கும் வரும்
என்று உணர்வோராய்
மன ஊனமுற்றோரை
மனம் நோகும்படி செய்யாதிருப்பது
மனித தர்மமன்றோ!

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உணர்ந்துபார்!



உனக்குள் இருப்பதென்ன!
உன்னையே கேள்விகேட்க
உனக்கே தயக்கமென்ன!

உணர்ந்துபார்!
சந்தோஷங்களை
சந்தேகங்களுக்கு இறையாக்குவதை!

உணர்ந்துபார்!
உயிர்க் காதலை
உடல்காமத்திற்க்கு பலியாக்குவதை!

உணர்ந்துபார்!
உயர்ந்த நட்பை
உப்புசப்புக்காக ஒதுக்குவதை!

உணர்ந்துபார்
உன்னத உறவை
உதாசீனப்படுத்தி உதறுவதை!

உணர்ந்துபார்!
ஒப்பற்ற உதவிகளை
உணராது இருப்பவைகளை!

உணர்ந்துபார்!
ஒன்றுமில்லாதவைகளுக்கெல்லாம்
ஒரேடியாக அலட்டிகொள்வதை!


உணர்ந்துபார்!
வறட்டு கெளரவத்திற்கு
வாழ்வை தொலைப்பதை!

உணர்ந்துபார்!
பிறரை வசைபாடியே
பொழுதுக்கும் வம்பளப்பதை!

உணர்ந்துபார்!
விட்டுகொடுக்க முடியாமல்
வெட்டிக்கொண்டேபோவதை!

உணர்ந்துபார்!
கேவலம் பாராது
கேலிக்கூத்து ஆடுவதை!

உணர்ந்துபார்!
தனது அகத்தை உணராது
பிறர் முகத்தை பழிப்பதை!

உணர்ந்துபார்!
இன்னெதென்றே அறியாது
எப்படியோ வாழ்வதை!

உணர்ந்துபார்!
ஒழுக்கமில்லாது
புழுக்கையாய் அலைக்கழிவதை!


உணர்ந்துபார்!
ஒவ்வொரு நொடியும்
ஓய்வின்றி நகர்வதை!

உணர்ந்து சரிபார்!
உன்னைத் திருத்திக்கொள்ள
உன்னுள்ளத்தில் தயக்கமென்ன!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அப்படியும் இப்படியும்..



 

காகம் கரைகிறது
இருள் கலைகிறது
கிழக்கு வெளுக்கிறது
வெளிச்ச அழைப்புகள் பிறக்கிறது
செவ்வானம் மறைந்தபடியே சேதி சொல்கிறது
சேவல்கூவி விடிந்ததை சொல்கிறது
விடிந்த பொழுது
சிலருக்கு விடியலாய்
சிலருக்கு வெருண்டதாய்
சிலருக்கு இன்பமாய்
சிலருக்கு துன்பமாய்
சிலருக்கு மகிழ்ச்சியாய்
சிலருக்கு இகழ்ச்சியாய்
விடியலென்னவோ
எல்லோருக்கும் ஒன்றுதான்
ஆனாலதில்
உணரப்படும் மனக்களுக்குத்தான்
வித்தியாசங்கள்தான் வெவ்வேறு!...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

 

கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!

நித்தம் நித்தம் புதுக்கனவு!
நீச்சலடித்து பாய்கிறது
நிகழ்கால நிகழ்வுகளோடு!
நீந்தி நீந்திச்செல்கிறது
நிதர்சனமான உண்மைகளை!
நியாப்படுத்தச் சொல்கிறது.

உறக்கமின்றிச் சிலவேளை!
உணவின்றிச் சிலவேளை!
ஊறரியச் சிலவேளை!
ஊமையாகச் சிலவேளை!-

இப்படி

ஒவ்வொரு நாளும் கழிகிறது!
ஓசையின்றி ஒளிர்கிறது!
ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
ஒளிவு மறைவின்றி
ஓடவிட்டுப் பார்க்கிறது!.

கவியென்றுச் சொல்கின்றேன்
ஆனாலது!
கவியா? என்பது தெரியவில்லை
ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!

நீரோடையின் நீருக்குள்ளே!
நினைவுகளை
நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!
நீந்திச்செல்லும் நினைவுகளை-அடி
நெஞ்சுக்குள்!
நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...

இக்கவிதை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை” யில் இடம்பெற்றுள்ளது.
  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில் ந[எ]ம்மைப்பற்றி கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஹாஹா

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தனிமை

 


தவிக்கவைக்கும் நினைவுகள்
தவிடுபொடியாகி
தகிடுதத்தோம் பாடியபடி
தலைகீழாய் தொங்கும் வவ்வாலானது!

உயிரின் நிலவறைக்குள் ஒருவித
உணர்ச்சிகளின் தாக்கம்
நிலை[ல]நடுக்கம் கண்டதுபோல்
நிலவறை நிலைதடுமாறியது!

நாவறண்டு உதடு
உமிழ்நீரைத் தடவியது
நீருண்ட மயக்கத்தில்
நீண்டது நிலவொளியில் இரவு!

நிம்மதி நாடிய நெஞ்சுக்குள்
நீட்டி முழங்கிய மெளனம் மட்டும்
நிம்மதியாய்
நித்திரைகொண்டது

நெஞ்சம்மட்டுமேனோ!
நித்திரையை தொலைத்து
நெடுநேரம் கண்விழித்திருந்து
கானல் உண்டது!..



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கனவே கலையாதே! 2

 

இருவிழிகளின் கருவிழிகளுக்குள்ளே
காணும் காட்சியாவும் கண்முன்னே!-அது
கனவாவதும் கலைவதும் தினம் தினம்

இரவுநேர இருளுக்குள்ளே
இனம்புரியாதவைகள் சூழ்ந்திருக்க!
 
அசைந்தாடும் காற்றில் பூக்கள்
அள்ளி வீசும் வாசனைகளை
அமங்கலியான பெண் பூக்களும் நுகர!

மாந்தோப்புக்குள்ளே
மஞ்சள் குருவியின் சிறகு படபடக்க!

பொல்லாத குளிருக்கு மயிலும்
போர்வையில்லாது நடுங்க!

கடலுக்குள் கூடிக்கொள்ளும் அலைகள்
கரைக்குவந்து சண்டையிடுக்கொள்ள!

சாலையோர மரங்கலெல்லாம்
சாதி சண்டைகளற்று வரிசையில் நிற்க!

உலகம் உருண்டுவிடாதவாறு
உயர்ந்திருக்கும் மலைகள் தாங்கி நிற்க!

பொட்டலிலும் பாலையிலும்கூட
பச்சை பசேலென இயற்கை காட்சியளிக்க!

வெள்ளிகம்பிபோல் மின்னல் வந்து
விருட்டென்று பயங்காட்டி மறைய!

வெளிர்நிற மேகங்கள்
கருநிற மேகங்களோடு கொஞ்சிக்குலாவ!

வானவில் வட்டமடித்து
வானத்தை அழகுபடுத்த!

வான்மழையை விரும்பி -மண்
வசியம் செய்து அழைக்க!

வாடிய பயிர்களெல்லாம்
வனப்புகண்டு கூத்தாட!

மண்ணிலுள்ள ஜீவன்கள்
மகிழ்ச்சியில் மகிழ்ந்தாட!

நடுங்கும் குளிர்
நாடியை தொட்டு இசைக்க!

காலைத்தென்றலின்  ரிங்காரம்
காதுகளுக்குள் இதமாய் கேட்க!

மிதமான சூட்டோடு
மேனியை மெல்ல மீட்டிய சூரியன்
சுண்டி இழுத்தும் 

சுறுசுறுப்போடு எழும்பாமல் -ஏனோ
சுணங்கிக்கொண்டு மீண்டும் 

கைகால்களை சுருட்டிகிக்கொண்டு
கனவே கலையாதே! -இயற்கைக்
கனவை கலைக்காதேயென
கண்மூடியே கிடக்கசொல்கிறது மனது...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மகனே! என்னை மன்னித்துவிடு!


பத்துமாதங்கள் சுமந்து
பலசிரமங்களுக்கிடையில்  வளர்த்து
மழையிலும் வெயிலிலும்  
மார்பிலும் தோளிலும் சாய்த்தபடி
ஏறாத ஆஸ்பத்திரிகளெல்லாம் ஏறி
கண்ணயறாது பார்த்து காத்தபோது
கனக்காத மனம் அறியாத பாரம்!

எங்கோ! யாரி மேற்பார்வையிலோ!
எனதன்பு மகனை விட்டு விட்டு
எடுதடி வைக்கும்போது
ஏற்பட்ட மனபாரமதை
என்னவென்று  சொல்வேன்!
தொப்புள்கொடி உள்ளுக்குள்ளே
துடிதுடித்ததே ஒரு துடிப்பு!
ஆயிரம் குடம்கொண்டு
அமிலத்தை ஊற்றியதுபோல்
அந்நேரம் கருகியதே உன்னுடம்பு!
உள்ளங்காலில் நரம்புக்குள்ளே
ஊர்ந்து ஏறியதே விசப்பாம்பின் கொத்து!
நாடித்துடிப்பெல்லாம் அடங்கிபோக
வெற்றுடம்புமட்டும் சேர்ந்ததே ஊர்வந்து!

நடைபயிலும் வயதில்
உன் நடைகண்டு ரசித்தவள்!
வாய்பேசும் வயதில்
உன் வார்த்தைகள் கேட்டு வியந்தவள்!
ஓடியாடும் வயதில்
உன்னை ஓடவிட்டு மகிழ்ந்தவள்!
ஒருநொடி உன்முகம் சுணங்கினாலும்
ஊரைக்கூட்டி அழுதவள்!

”ஆனாலின்றோ”
ஏடெடுத்து படித்து ஏற்றமோடு வளர
கல்வியென்னும் ஒளியைக்கொண்டு-இந்த
கலியுலம் வென்றிட
தரணியிலே எனது மகன்
தவப்புதல்வனாய் வாழ்ந்திட
தனியே விட்டு வந்தேனே
பள்ளி விடுதியில்
தவிக்கவிட்டு விட்டேனே!
விட்டு விட்டு வீட்டில் வந்து
விளக்கில் விழுந்த
விட்டிலாகிப் போனேனே!

மகனே என்னை மன்னித்துவிடு!
மடிசுமந்தாய் மாற்றாரிடத்தில்
விட்டுவிட்டாளே என மருகிவிடாதே!
எல்லாம் உனது நன்மைக்குத்தான்
என்றெண்ணி எடுத்து ஓதிப்படி!
எள்ளளவும் இருக்காது
என்றைக்குமே தாய் தந்தையன்பில் கலப்படி!

இது அறிவியல் உலகமடா கண்ணே!
இதில் அறிவில்லாமல் வாழ
இயலாதடா மகனே!
அதனால்தானடா உன்முன்னே!
அழுகையெல்லாம் அடக்கிக்கொண்டு
அலறும் உணர்வையெல்லாம் ஒடுக்கிக்கொண்டு
ஆறுதாலாய் பேசுவதுபோல் நடித்தேன்
அலறித்துடிக்கும் உயிரின் வலியை பொறுத்தேன்
அதனைமீறியும் உதிர்ந்துவிட்ட கண்ணீர் துளியை
நீ அறியுமுன்னே துடைத்தேன்!

தவிப்புகள் இருக்கத்தான் செய்யும்
தாங்கிக்கொள்ளடா அன்பு மகனே! என
உனக்காறுதல் சொல்லி வந்தேனே
தாரை தாரையாய் கண்ணீர் வருதே
தாங்கவில்லையே எனது நெஞ்சமே!

அன்பு மகனே!
அங்கிருந்துகொண்டு
அழுதுமட்டும் விடாதே!
அடங்கிபோய்விடும் எனது
அத்தனை உணர்வுகளும்!
அணுவளவும் குறையாது எப்போதும்
அலைபாயும் எனக்குள் உனது நினைவுகளும்!


ஈன்றவர்களின் இருதயங்கள்
ஈனப்பட்டு அழுதபோதும்
ஈருலக வாழ்க்கையிலும் எங்கள் மகன்
எவ்வித சிரமங்களும் படக்கூடாதென்றே
எண்ணுவதே பெற்றோர்களின் உள்ளம்

ஈ எறும்பு அண்டாமல்
ஈரக்குலைக்குள் காத்த உன்னை
தீயவைகள் எதுவும் தீண்டிடாது
தாய்தந்தையின் பிராத்தனைகள் உனைக்காக்கும்!

ஐந்து வேளையும் தொழுதிடு!
அகிலம் ஆளும் இறைவனை
அழுத்தமாய் மனதில் நினைத்திடு!
அதோடிந்த அன்னைதந்தையையும் சேர்த்திடு!
அங்குள்ளோரிடமும் அன்பு கொண்டு நடந்திடு!
அறிவை வளர்த்து அகிலம் போற்ற கற்றிடு!
இம்மை மறுமை இரண்டிலும்
இன்பமாக வாழ்ந்திடு-எங்கள்
இதயங்கள் குளிர்ந்திட வாழ்ந்திடு...

 ------------------------------------------------------------
எனது அன்பு மகனை நேற்றைய முந்தினம் குற்றாலம் சையத் ரெசிடன்சஸ் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டு வந்துள்ளோம். முதல் முறையாக வேற்றிடத்து வாசம் என் குழந்தைக்கு. எனக்கோ வெற்றிடமானது வீடும் மனமும்.. என்ன செய்ய காலத்தோடு படுவேகமாக ஓடவேண்டிய சூழலில் பெற்று வளர்க்கும் பிள்ளைகளை கூடயிருந்தே படிக்கவைக்கமுடியா சூழ்ச்சியும் உருவாகிவிடுகிறது. இருதயம் இளகி விட்டு வரவில்லை இதயம்  இறுகி விட்டுவந்தேன் என்னைபோன்று எத்தனை பெற்றோர்கள் தவித்திருப்பார்கள்.
இன்று அலைபேசியில், காலை எழுந்ததும் குளித்து, தொழுதுவிட்டு,  குர்ஆன் ஓதிவிட்டு, நானாக டிரஸ் போட்டுகொண்டு சாப்பிடபோகிறேன்மா என்றதும் தொண்டைக்குள் ஏதோ அடைத்ததுபோன்று எனக்கு பேச்சே எழவில்லை இருந்தபோதும்.அதனை மறைதுக்கொண்டு அன்பாய் பேசிவிட்டு இரவு போன் செய்கிறேன்டா செல்லம் என்று வைத்துவிட்டு  சற்றைக்கே சற்று மனம் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதும் இதை எழுதுகிறேன்.. என் மகனின் நற்படிப்புக்காவும் மற்றும் அவனின் மனதைரியத்திற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளையும் துஆக்களையும் வேண்டுகிறேன்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என்னில் உணர்ந்தவை



காற்றின் ஸ்பரிசம்!
மழையின் குளிர்ச்சி!
இருட்டின் நிசப்தம்!
மல்லிகையின் உரசல்!
பொங்கும் பாலின் நுரை!
மயிலின் நடனம்!
அலையின் சிணுங்கள்!
மானின் மருட்சி!

இவையனைத்தையும் இடைவிடாது
உணர்வுகளில் உணர்கிறேன்
உன்னை நேசித்த நொடியிலிருந்து,,

நெரும்பின் சுவாலை!
இருளின் அச்சம்!
மலை உருலும் சத்தம்!
ரோஜாவின் முள்குத்தல்!
புளித்த பாலின் வாசனை!
சிங்கத்தின் கர்ஜனை!
புயலின் ஆக்ரோஷம்!
கடலின் கொந்தளிப்பு!

இவையனைத்தையும் மொத்தமாய்
உணர்கிறேன் உணர்வுகளில் வழி[லி]யாக
உன்னை மறக்க நினைத்த நொடியிலிருந்து...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது