நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்புத்தி பின்புத்தி.


எத்தனை பட்டாலும் புத்திவராதா?
இன்னும் எதிலெதில்தான் ஏமாறுவாய்?
ஏமாறுகிறாயா?
இல்லை மற்றவரை ஏமாற்றுகிறாயா?

சினிமாமோகத்தில்
சிட்டாய் பறந்துவரும் பெண்ணே!
யாரும்காண தேகத்தை
கைகுட்டை அணிந்து காட்டவா?
யாருக்கும் தெரியாமல் ஓடிவருகிறாய்!
பாழ்பட்டு போவதற்கா
பாசங்களை இழந்து
படிதாண்டி வருகிறாய்?

நெஞ்சடைக்கும் செய்திகள்
நாளேடுகளில் கண்டும்
நெஞ்சழுத்தக் காரியாய்
நம்பியோரைவிட்டு வெளியேறுகிறாய்!
தரங்கெட்டவளாகி
தலைப்பு செய்திகளில் வருகிறாய்!

நயவஞ்சத்தோடழையும்
குள்ளநரிகளுக்கு மத்தியில்
நீயே சென்று சிக்குவது சரியா?
கலைத்தெரியப்படுமே மானம்
அதைதான் விரும்புகிறாயா?

பெண்புத்தி பின்புத்தியென்ற
பலமொழியை உண்மையாக்கி
பட்டும் திருந்தாமல்
பரிதவிப்பது முறையா?

சீரழிவது சுலபமடி!
சீரழிந்த பின்னே-கண்ணீர்
சிந்தியும் லாபமில்லையடி!
சிலகால சொகுசிற்காக
சிறந்த பெண்மையை
சீர்கெடுப்பது பாவமடி!

சீரழிந்து கிடக்கிறதென
சமுதாயத்தின்மேல் பழியெதற்கு
சீரழிவது சமுதாயமல்ல
சீர்கெடுப்போரின்
நெறிமுறையற்ற வழிகேடுகளால்தான்
நெறிபடுத்த மகான்கள் வேண்டாமடி
நெறிதவறா நன்நடத்தை போதுமடி..

டிஸ்கி// இன்றைய செய்தியாக 6 பெண்கள் வீட்டைவிட்டு ஓடிவந்ததாம் சினிமாவில் நடிப்பதற்காக! நடிக்கவைப்பதாககூறி அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக.முதன்மைச்செய்திகள். இப்படி தினம் தினம் செய்திகள் வெளியாகியும் ஏன்? இப்படி இளம் பெண்கள் சீரழிந்து போவதற்காக முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என புரியாத புதிராகவே உள்ளது .
இசெய்தியை படித்ததும் மனவேதனைமேலிட எழுதியது தான் மேலே உள்ள வரிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது