நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்புமகனும் அழகிய யானையும்..

இந்த போட்டோவை  எடுத்தது யார்?

காட்டில் உலவும் யானைக்குடும்பம்
காலார நடக்க ஆசைப்பட்டு
கதை பேசிக்கொண்டே -தன்
குட்டிகளோடு சுற்றிவரவே

காட்டிலொரு சிறுவன் தெரிய
கவனமாய் அவனருகில் வந்து
சிறு விழியால் கண்ணடித்து
சிறுவ னவனை சிரிக்கவைத்து!

தும்பிக்கையால் அவனைத்
தூக்கிதன் முதுகிலேற்றி
வைத்துக்கொண்டு
வனமுழுதும் வலம்வரவே!

வரும் வழியில்
வழிந்தோடும் தண்ணீரைக்கண்டு
தங்கள்முகத்தை தங்களே பார்க்க
துள்ளித் துள்ளிக் குதித் தனவே!

அச்சிறுவன் மனமுழுதும்
ஆனந்தம் பொங்கி டவே!
அதை படம்பிடித்து காட்டியதும்
அன்னையுள்ளம் ஆனந்தமடைந்ததம்மா!

காட்டிலுள்ள மிருகமெல்லாம்
நாட்டில் உலா வருகையிலே!
நாட்டிலுள்ள மனிதமெல்லாம்
காட்டுக்குள்ளே உலவுதம்மா!

ஐந்தறிவு உள்ளதெல்லாம்
ஐம்பொன்னாக மினுமினுக்க
ஆறறிவு உள்ளதெல்லாம்
அறிவு மங்கிப் போனதம்மா!

//டிஸ்கி//  முசந்தம் போனபோது கிளிக் எடுத்ததையெல்லாம் கலைச்சாரலில் போட்டுயிருந்தேன் அதை நம்ம அண்ணாத்தே ஜெய்லானி சுட்டுபோட்டைவை இப்படி அழகாய் ஆணைமேல் ஊர்வலம்போகவைத்துவிட்டார் என் அன்புமகனை..
மிக அழகாய் கிரியேட் செய்த அண்ணாத்தேக்கு அல்லாரும் சேர்ந்து ஒரு பாராட்ட போடுங்க அப்படியே ஓட்டையும் கருத்தையும்போட்டு என்அன்புச் செல்லத்துக்கும் அன்பையும் தாருங்கள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காதல் கிறுக்கு!



என்னவென்பேன் பெண்ணவளின்
               வண்ணமதை
கொண்டுவிட்டேன் அவளிடம்
               காதல்போதை
நித்தமவளை நினைக்கின்றேன்
            நெஞ்சமுறுகி
சத்தமின்றி தவிக்கின்றேன்
            சிந்தை சிதறி

முத்துநகை வந்துவிட்டால்
                             போதுமென்பேன்
பித்தனாகி நானுமவள்
               காலடியில்
சொத்துசுகம் அத்தனையும்
                         வேண்டாமென்பேன்
முக்தியாகி நானுமவள்
              முந்தானையில்

பாரிஜாத முல்லையவள்
                                மணமணப்பில்
பாசாங்கு சோலையவள்
                                சிரி சிரிப்பில்
பைந்தமிழின் வார்த்தையிலே
                 வாயடைத்தேன்
பைங்கிளின் பேச்சினிலே
                          மூச்சடைத்தேன்.

அதிகாலையென்பது
                   எனக்கில்லை
அவளைக் காணுமுன்னே
                  அனுதினமும்
உறக்கமில்லை
         அவளைக் கண்டபின்னே

என் நெஞ்சமதை
           எடுத்துக்கொண்டால்
மொத்ததிலே
              அதிலவளின்
நினைவைமட்டும் வைத்து
              தைத்துவிட்டாள்
என் இதயத்திலே

 
பேதையவள் கண்களிலே
                போதை கொண்டேன்
பேரழகி அவளேயென்று
                 வியந்து நின்றேன்
பெண்ணவளின் கைப்பிடித்து

                   காலம்தோறும்-இப்
பிரபஞ்சம் முழுதும்

                 நானும் சுற்றவேண்டும்

 
இப்பிறவி முடிந்தபின்னும்
                    மீண்டும் தோன்றும்
அப்பிறப்புமும் வேண்டும்
                       அவள் எனதருகில்
இணைத்துவைத்து இறுக்கிவைத்த
                  இருமனமும்
இணைபிரிந்திடாது
                இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...


டிஸ்கி//  ராகத்தோடு படித்துப்பாருங்கள். 2. 3. நாட்களாய் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால். ஆங்காங்கே இதுபோல் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


வாழவந்திருக்கும் பூமியில்
வசதிகளும் வாய்புகளும்
ஏராளம் ஏராளம்- அதை
வகையாய்
வகைப்படுத்திக்கொண்டால்
வசந்தம் கைகூடும் எந்நாளும்.

சாதிக்கத்துணிந்த பின்னே
சோதனைகளைகண்டு
சோகமெதற்கு-மனம்
அழுக்கானவர்களைக் கண்டு
அச்சம்கொண்டு
அடங்குவதெதற்கு- நீ

மறைவதுபோல
தோன்றிடும் இருட்டு-ஆனால்
மறுநாளே விடிந்திடும்
மங்கள கிழக்கு.

முக்காடிட்டு மறைத்திருப்பது
முகத்தையே தவிர
மூளையையல்ல –நீ
முன்னுக்கு வரும்வழியில்
முட்டுக்கட்டைகளைக்கண்டு
முடங்கிவிடாதே!

முயற்சிசெய்தால்- அதே
முட்டுக்கட்டைகளைக்கொண்டு
மேடைகளாக்கு! மேதைகள் கையால்
மாலைகள் கிடைக்கும்
மாபெரும் இறைவனின் அருளால்
மதிப்புகள் உயரும்.

உலகம் என்பது
ஒரு நாடகமேடை –அதில்
உலவும் மனிதரோ
ஓ ராயிரம் வகை
ஒவ்வொரு மனங்களும்
ஒவ்வொருவிதம்-அதில்
ஓடும் எண்ணமோ பலபல ரகம்

வீசிடும் தென்றலில்
வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
வாஞ்சையை பகிரு
வந்துசேருமே- ஒன்றாய்
வசந்தங்கள் நூறு

கவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே
காலுன்றிகொண்டு வேரூன்றிவிடுமோயென
கவலை கொள்வோரின் முன்னே!
கவனமாய் நீயும்
கடந்திடு பெண்ணே-உன் கவனமெல்லாம்
களைகளைக் கலைந்து -நற்
க விதைகளை விதைப்பது தானே!

விசால மண்ணில்
[க]விதைகளை விதைத்து-அதில்
விசமில்லாத உரமும் தூவி-
விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே
வீரிட்டு எழுந்திடு!
வேர்விட்டு வளர்ந்திடு

வெட்டிதள்ளினும்
வேர்விட்டு தளைத்திடும்
ஆலமரம்போல
வரம்புமீராத உன்
வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
ஆலம்விழுதினப்போல
வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
வாழந்துகாட்டிடு
வாழையடி வாழை....

டிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..
சிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]
பூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
அது [செருப்பு தைய்பதாகட்டும்.
சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.

தோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும்  அது சிலமனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.
நம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே!
உனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்
யார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
 இது இறைவனின் வாக்கு!
எவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புத்தம் புதியதாய் பூத்திருக்கேன்!



//டிஸ்கியோ டிஸ்கி///இது புதுசு. நாம படித்த படிப்புக்கு ஏதோ எனக்கு தெரிந்தவரையில் கவிதையை படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன். எப்படியிருக்குன்னு சொன்னா ஹி ஹி இதபோல் இடையில் தொடர்வதான்னு யோசிக்கலாம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வரமும். விருதும்..


பிறக்கவும்
வரம் கேட்கவில்லை

இறக்கவும்
வரம் கேட்கவில்லை

இவையிரண்டுக்கும்
இடையேயிருக்கும்

வாழ்க்கையை மட்டும்
வளமாக்கித்தர கேட்கிறேன்

என்னை பூமிக்கு
அன்னைவழியே

அனுப்பிவைத்த
இறைவனிடம்

வரம்......


இந்த விருது சைவக்கொத்துப்பரோட்டா தந்தது அன்போடு வழங்கிய உள்ளத்துக்கு என்நெஞ்சம் நிறைந்த நன்றிகள்


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

விசா பறவைகள்!!


விழிநிறைய கனவுகளோடு
விமானமேறிய விசாபறவைகள்
விபத்துக்குள்ளாவது அறியாது
வானத்தில் சென்றன

எத்தனை எத்தனை கனவுகள்
எத்தனை எத்தனை நினைவுகள்
எண்ணங்களுக்கு
சிறகடித்துப் பறந்திருக்கும்

எல்லாம் முடிந்திருக்கும்
விமானம் 
வெடித்து சிதறி-வீசி
எரியப்பட்டபோது


நாடுவிட்டு நாடுவந்து
நாடோடிகளாய்
நாமிருக்கும் வேளையில்
நாளை நடப்பதை நாமறியோம்

வயிறுப் பிழைப்புக்கும்
வசதிக்கும்
வழிபோக்கர்களாய் வெளிநாடு
வந்திருக்கும் நாம்

வீடு திரும்பும்வரை
வியர்வை வழிய உழைத்து
விழிகள் வலிக்க அழுது
விடியலிலும் தொழுது


இப்படி
எதிர்பாராமல் வரும்
இன்னலையும் இரங்கல்ளையும்
எதிர்கொள்ளமுடியாமல் தவித்து

விசா பறவைகளாய்
வீட்டைவிட்டு வெளியேறி
வேலை தேடிவரும்
மனிதப் பறவையாய்

மர நிழலென்னும்
தன்கூடுக்குள் திரும்பும்வரை
மனதிலும் நிம்மதியில்லாமல்
தன்னுள்ளதிலும் உணர்வில்லாமல்

பெற்றது பாதி
பெறாதது மீதியென
புறப்பட்டு போகும் வழியில்
பறந்துவரும் விமானம்

விதிவசத்தால் விபத்துக்குள்ளாகி
விகாரமாய் வீசியெறிப்படும்போது
விதவிதமாய் கண்ட கனவுகள்
விழிநிறைந்த விஸ்வரூப நினைவுகள்

எல்லாம்,,,, எல்லாம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்ணெதிரே களைந்து
எரியப்பட்டு உயிர்களைனத்தும்
காற்றோடு கலக்கப்படுகின்றன

விசயம் அறிந்ததும்
வீறிட்டு அழுது
விம்மி வெடிக்கிறது
உள்ளம்

மரணத்தை தழுவியவர்கள்
முகமறியாதவர்கள் என்றபோதும்
மனதுக்குள் வந்து சென்றதுபோல்
நினைவைத் தருகிறது சோகம்

எதிர்பார்ப்புகளோடு வந்தவர்கள்
எதிர்பாராமல் இயற்கை
எய்திவிட்டார்கள் -இருகரம்
ஏந்தி


இறைவனிடம்
இறைஞ்சி வேண்டிடுவோம்
இறந்தவர்களின் ஆன்மாவை
இரச்சிக்கச்சொல்லி.....

//மங்களூர் விமானவிபத்து இன்று செய்திபார்த்தேன்.
 மனம் தாங்கமுடியவில்லை
இறைவனிடம் வேண்டுவதை தவிர வேறுவழியில்லை.
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நாம்படும்பாடு.
சிலநேரம் சுகமோடு சிலநேரம் சோகத்தோடு.
இறைவா!
உன்னாலே உயிர்பெற்றோம்.
உன்னிடமே திரும்பவருவோம்.
எங்களை நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!
ஆமீன் ஆமீன் ஆமீன்..//


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நதியலையில் ஆடும் நிலவு


நன்றி கூகிள்
வான்நதியில் உலாவரும்
வெண்ணிலாவே-நீ
வலம்வரும் வேளையில்

பெண்ணிலவோடு உனக்கென்னடி
போட்டி

நீ உலாவரும் வானில்
நான் விழாக்காண வந்ததால்
நான் நீராடும் நதியில்
நீ் குளித்தாட வந்தாயோ!

எட்ட நின்றே
எட்டிப்பார்பதெதற்கு!

பூவுலகைச் சுற்றிவருவதால்
வந்த களைப்பா! -இல்லை
பாவை எனைப்பார்த்தும்
ஏற்பட்ட வியப்பா!

உன் ஒளிக்கதிரில்
எனை நீராட்டவா-இல்லை
என் முக அழகை -நீ
ஒட்டிக்கொள்ளவா!

ஆணினமென்றால் அப்படியே
அனுப்பியிருப்பேன் -நீ
என்னினமென்பதால்தான்
அனுமதிக்கிறேன்

வா வா வான்நிலவே
வந்து என்னோடு நீராடு
இருமுகமும்
இணைத்து சேர்ந்தாடு்

பகலில்கூட பளபளக்கும்
பட்டு நிலவே-என்
பட்டுக்கண்ணம் தொட்டுமீட்டு-இந்த

பாவையுள்ளம் பளபளக்கட்டும்

வெண்ணிலவும் பெண்ணிலவும்
ஒன்றிணைந்து
வெள்ளை நதிக்கு
விளையாட்டுக் காட்டட்டும்

நாளை முகநூலில் முகப்பில்
நம்மிருவரைப்பற்றியே
நளினத்தோடு பேச்சிருக்கும்
நதியலையில் ஆடும் நிலாக்களென்று..

//டிஸ்கி//இந்த தலைப்பில் முகநூலில் கவிதையெழுத சொன்னாங்க.
அதேன் இஸ்டத்து அள்ளி விட்டாச்சி சும்மா சும்மா.[எப்புடிக்கீது]
நம்மவூட்டுல நெட்பிராப்ளம் இருந்தாலும் அடிச்சி புடிச்சி அடுத்தாதிலிருந்து ஒரு கவுஜைய கிறிக்கிட்டோமுல்ல!
முன்புள்ள பதிவுக்கெல்லாம் பதில்போடலையின்னு கோவிச்சிக்காதீங்க
நம்மவூட்டுலயிருந்து போடலாமேன்னுதான்.ஓகே..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வைர-முத்து



மண்ணுக்குள் கிடைக்கும் வைரம்
சிப்பிக்குள் கிடைக்கும் முத்து
இவையிரண்டும் இணைந்து அதிசயமாய்
பெண்ணுக்குள்
உருவானது உயிராய்-அது
பேனா பிடித்து எழுதியது
முத்தமிழையும் கலந்த கவிதையாய்

கரிசல்காட்டு மண்ணையும்
கஞ்சி சுமந்த பெண்ணையும்
கல்லூரி கதையையும்
காதல் நெகிழ்வையும்
கவிக்குள் அடக்கும் திறன்
கவிப்பேரரசு என்ற
கருப்பு வைரம்

சங்கத்தமிழும் சிந்துபாடும்
சமுத்திர நதியும் சிணுங்கியோடும்
தங்குதடையின்றி
தண்ணீராய் வந்துவிழும்
தமிழ் வார்த்தைகளின் சரளம்
தங்கத்தமிழனாய்
தாய்மண்ணில் ஊர்வலம்

முத்தமிழும் கலந்த தமிழ்வித்து
தமிழ்தாய் பெற்றடுத்த வைரமுத்து..




டிஸ்கி//  இவர்கள் தமிழ்பேசும்போதும் கவிதை வாசிக்கும்போதும். ஏனோ கேட்டுக்கொண்டே இருக்கனும்போல் தோன்றும்.
தமிழுக்கு அத்தனை ஒரு ஈர்ப்பு, தமிழர்களை மட்டுமல்ல மற்ற மொழிக்காரர்களுடன் உடனே ஒட்டிக்கொள்வதும் தமிழ்மொழிதான்.அன்னைத்தமிழை அடுத்தவர் அழகாய் பேசும்போதும் அதை
அணு அணுவாய் ரசிப்பதில் ஓர் அலாதி இன்பம்தான்..//
 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அம்மாவிற்கே! அம்மா.[முகநூல் கவிதைகள்]

அம்மாவிற்கே!



கவனமாக கரு சுமந்து
கருவறைக்குள் சுவாசம்தந்து
கண்ணயராது விழித்திருந்து
கரைந்தது தேகம்
குழந்தையைக்காண


வளரும்போது வாசல்பார்த்து
வராதபோது மனம் பதபதைத்து
வறுமையையும் பொறுத்திருந்து
வலிகளையும் ஏற்றது உள்ளம்
குழந்தைக்காக


அழகாய் வளர்த்த பிள்ளை
அடுக்கடுகாய் கொடுத்தது தொல்லை
அன்னையின் மனவேதனை
அறிந்தும் செய்தது சோதனை
அதனால் கிடைத்தது
அன்னைக்கு திண்ணை


அன்றுசுமையிலும் சுகம் கண்டாள்
அன்னை
இன்றுசுகத்திலும் சுமையாய் கருதினான்
இளம்பிள்ளை


அம்மாவிற்கே இந்நிலை
அப்படியானால் -இனி
அவன்
எதிர்காலம் எந்நிலை???


அம்மா.



ன்பின் அஸ்திவாரம்
னந்தத்தின் ஆணிவேர்
ன்பத்தின் நிழற்கொடை
கையின் உதாரணம்
ண்மையின் உறைவிடம்
ஞ்சலின் தாலாட்டு
தார்த்தத்தின் நிதர்சனம்
கன் தந்த ஏஞ்சல் வரம்
ஐம்பூதங்களின் அடக்கம்
ற்றைப்பூவில் உலகவாசம்
ர் உறவில் ஒட்டுமொத்தநேசம்.

இப்படி
அனைத்திலும் அவளே
அவளில்லையேல் எனக்கேது
நிழல் பூமியிலே!


டிஸ்கி// அம்மாவைப்பற்றி கவிதை எழுதத்தலைப்பு முகநூலில்.[facebook]
அம்மாவே ஒருகவிதை அதை எப்படி வார்த்தையில் எழுதுவது ஆனபோதும்,எழுத்துக்களால் இயன்றவரை.
அனைவரும் அம்மாவை போற்றும்போது அதில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகதான் மாற்றுக்கருத்தோடு ஒரு கவிதை.
கண்கூடாக பார்க்கும் விசயங்களை சற்று மனதயக்கத்துடன் எழுத்துக்களால் கவிதையென்ற பெயரில்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்

மரகத பெண்பூவே!
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே

தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!

நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி

நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி

வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்

அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்

அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்

இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........

டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாதுமாகி…...

அனைத்து அன்னையர்க்கும்
[அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
 என்மனமார்ந்த
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!



அன்னையவள் மடிதனிலே
                              அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே 
                    மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில்
                       வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக
                       கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -
                தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும்
                        சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே
                        அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே
                       அன்னையென ஆனாள்
அன்னையவள் நெஞ்சினிலே
                       அன்பொழுகக் கண்டேன்
அணைத்து எனை நிற்கயிலே
                      அசையாது நின்றேன்
நான் வளரும் வேளைதனில்
                       வேலியாய் நின்றாள்
நம்பிக்கை ஊட்டியே
                    எனைக் காத்துக் கொண்டாள்

காயங்கள் நான்படவே
                           ரணமாகிப் போனாள்
கண்ணுக்குள் எனைத்தாங்கி
                   கலங்காமல் பார்த்தாள்
காலங்கள் கடந்திடவே
                     நான் தாயாகிப் போனேன்
கண்ணிமைக்காமல் அப்போதும்
                      எனைப்பார்த்துக்கொண்டாள்
அன்னையவள் காலடியில்
                        சொர்க்கமதை உணர்ந்தேன்
அதையுணர்ந்த போதினிலே
                       அகிலத்தை மறந்தேன்
யாதுமாகி  எனக்காக
                      தன் வாழ்க்கை வாழ்ந்தாள்
சேயாகி நானுமதை
                    உணர்ந்திடவே வைத்தாள்

தாயாக  எனைத்தாங்கி
                  செய்தஅத்  தனையும்
தள்ளாட்டம் வரும்
                வயதில் முடியாமல் போகும்
சேயாக நானிருந்த போதும் –
              செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
தாயாகி நானும்....

டிஸ்கி// ராகத்தோடு படியுங்கள் ரம்மியமாய் இருக்கும்.
ஒருவார உடல் இன்னல்களுக்கு பின் புத்துயிர்தந்தது அன்னையை நினைத்து எழுதிய கவிதை..
இன்று ஒருநாள் போதுமா? அன்னையை வாழ்த்த!
வாழும் காலம்தோறும் மறந்திடாத பாசம் அன்னையின் அன்பானநேசம் மட்டுமே!
அது சரி தந்தையர்கள் தினம் எப்போது?//

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் மனசு

[facebook. கவிதைகள்.]

                                                              /நன்றி கூகுள்/

என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவிட்டது

இனி

என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய் ஓடியது

என்மனசும் உன்னிலும்
உன்மனதும் என்னிலும்...

டிஸ்கி// என்மனசு அல்லது என் மனது. தலைப்புக்கு கவிதை எழுதச்சொன்னார்கள். நாம ரெண்டையும் இணைச்சு எழுதியிருக்கோம்
சரியா?. சும்மா சொல்லிட்டுப்போங்க எப்புடி இருக்குன்னு. சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!

வியாழன் மாலை 7 30, மணிக்கு லூலூசெண்டர் வாசலில் பதிப்பூக்கள் அறிமுகங்களின்
அணிவகுப்பு அதன் பின்பு லூலூவின் பின்பக்கம்
பூங்காவில் சந்திப்புகளில் கொண்டாட்டம் என ஏற்பாடு செய்திருந்த மாலைவேலையில்
பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
பூக்களில்லாத பூங்கா.
பூங்காவின் எதிர்ப்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்தது மல்லிகைப்பூதான்.
கையில் வெயிட் அதிகமிருந்ததாலும். செல்லமகனுக்கு உடம்பு சற்று சரியில்லாததாலும் பூங்காவிலே வெயிட் பண்ணவேண்டியதாகிவிட்டது
ஜலிப்பூ லூலூவிற்கு வந்துவிட்டதெனவும் மற்ற பூக்களை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் சொன்னார்கள்.

பூங்காவோடு மல்லிகைப்பூவும். மற்ற பூக்களுக்காக காத்திருந்தது
வாசலுக்கும் பூங்காவுக்கும் குட்டிப்போட்ட பூனையாக 2 முறை போன் செய்து ஜலிப்பூவிடம் எல்லாம் வந்தாச்சா வந்தாச்சா கேட்டுக்கொண்டே உலாவர


8,25 மணிக்கு ,4 பூக்கள் வாசலில் வந்துநிற்க.
மல்லிப்பூ அந்த பூக்களை பார்த்ததும் சற்று இன்ப அதிர்ச்சி தேடலின் முடிவு இன்னும் தொடர்ந்தது. 5 பூக்கள்தான் ஒன்றுகூடிமலரப்போகிறது என எதிர்பார்த்தவேளையில் பத்துப்பதினோறு பூக்களாய் மலரபோகிறது என சொன்னதும் மற்ற பூக்களின் வரவுக்காக.தேடல் தொடர்ந்தது.

வந்த பூக்களில், 4 பூக்களின் பெரியப்பூ ஸாதிகாக்கா. அடுத்த பூ ஆஸியாக்கா.
அடுத்தபூ மலரக்கா. அடுத்தது. ஸாதிக்காவின் தங்கை.
பூக்கள் வந்தததும் மல்லிப்பூவிடம். இதில் யார் யார் எந்த பூன்னு கேட்டதும் மல்லி முழித்த முழியபார்கனுமே திக்கித்திணறி முட்டிமோதி, இது ஸாதிப்பூ அப்படின்னு சொல்லுவதற்க்குள் சிரிப்புகளின் ஓசை அதிர்ந்தெழுந்தது. அடுத்ததுடுத்து. அறிமுகங்கள் கைக்குலுக்கள்கள். என பூங்காவைச்சுற்றிலும் உள்ளவர்கள் பார்க்க 3, 4, கிளிக் கிளிக். ஏன்னா மலரக்கா உடனே போகனுமுன்னு.அவங்கபோனதும் உள்ளேவந்தமர்ந்து பேச்சுக்கள் தொடர்ந்தது ஆச்சர்யங்களும் மகிழ்வுகளும் பகிரப்பட்டது,


ஆஸியக்கா மல்லியைப்பார்த்து நான் மல்லியை இப்படி எதிர்ப்பார்கவேயில்லைப்பா என 3, 4, முறை சொன்னதும், அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீகளா? அத்தனை சாந்தமாக இருக்காளாம் இந்த  மல்லி. உடனே மல்லி கைத்தட்டி யாரங்கே பாரூக்கலி எங்காப்பா  போயிட்டே வந்து இதமுதல கேளுங்கன்னு சொன்னதும்.

 யாருப்பா அது பாரூக்
அதான் நம்ம மச்சான் அப்படின்னு முடிக்கலை
 எழுந்ததே சத்ததுடன் சிரிப்பும் கும்மாளமும் இத இததான் உங்ககிட்ட எதிர்பார்தோமுன்னு. ஹா ஹா
சிரித்துமுடித்த வேளையில் வந்துசேர்ந்தது மற்றப்பூக்களான ஜலீலாக்கா, ஹுசைனம்மாக்கா, நாஸியா மற்றும் சீனியர் மனோசாமிநாதன் மேடம்.


ஒரு பூ வந்துக்கொண்டிருபதாக சொன்னதும் மற்றபூக்கள் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு இதில் மீண்டும் பாரூகலி மேட்டரை சொல்லி அடித்த அரட்டை. என மனங்களும் முகங்களும் சந்தோஷத்தாண்டவமாடின.

ஹுசைனம்மாவுக்கு போன்வர அநன்யா மஹாதேவன். என்ற பூ லூலூ வாசலில் பூத்திருப்பதாகவும் தான்மட்டும் அதெல்லாம் தைரியமாபோய் அழைத்து வந்துவிடுவேனென ஹுசைனம்மாக்கா, புறப்பட்டதும் டிரங்குபெட்டி ஸ்ராங்தான் என எல்லாரும் கிசுகிசுகவும் மீண்டும் சிரிப்பலை.


அநன்யா வந்ததும் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு, பின்பு ஆஸியாக்காவின் அத்தானை அறிமுகப்படுத்தினார்கள் அவர்கள் வெக்கப்பட்டுக்கொண்டதுபோல் தெரிந்தது ஏன்னா இத்தனை மலர்கள் ஒன்றுகூடி நிற்கும்போது ஹி ஹி நெசந்தானே ஆஸிக்கா. ஹுசைனம்மா தன் அத்தானை ஷேஃப்டியாக லூலூ செண்டரிலே நிக்கவச்சிட்டு வந்துட்டாங்க! நம்ம அத்தான் இந்த பாவம் பிஞ்சிப்பூவ இத்தனபூக்கள் மத்தில் விட்டுவிட்டு அவுக அத்தான்வீட்டு போய்ட்டாக!
நாஸியா அப்பால அவுக அத்தான நிப்பாட்டிவச்சிட்டு அதோ அதோன்னு வெள்ளகாக்காவ காட்டுறமாதரிகாட்டினது சூப்பரப்பூ.
ஒவ்வொருவரும் அவரர்களின் பங்குகளுக்கு பேச்சிகளும், சிரிப்புகளும், அதிலும் அநன்யாவின் பேச்சி அழகு தமிழை தம்ழாக பேசியது சூப்பர். என்ன அநன்யா உங்களுக்கு மட்டுந்தான் சொடக்குபோடத்தெரியுமா பேச்சில்[அதாவது சோக்] நாங்களும் போட்டுட்டோமுல்ல ஹா ஹா.
இந்த பிரியாணி இல்லாத பிரியாணி சட்டிய வச்சிட்டு கிண்டலோ கிண்டல். மனோம்மாவை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி ஓவியங்களின் தாரகையின்னு சொல்லலாம் தத்ரூபமாய் வரையும் அவர்களுக்கு ஒரு கிளாப்ப்ப்ப்..

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிக்காக்கா பேச்சிலும்சரி எழுத்திலும்சரி படு சூப்பர். அன்று பூக்களில்லாத பூங்காவுக்கு பூக்களின் அணிவகுப்பை மலரச்செய்த பெருமை அவர்களுக்கே சாரும். அவங்க தங்கை படு அமைதி அவங்க சிரிப்பு சூப்பர்.
மலரக்கா[எப்புடி அக்கான்னு கூப்பிடவேணானுன்னா விடுவோமா]
அடிக்கடி பார்த்தமுகம் ஆனாலும் இப்போதுதான் அறிமுகம்.
அப்புறம் நம்ம ஆலினார் அவுகளிடம் நிறைய பேசவேயில்லை.ஏன்னா நாங்க ரெண்டுபேரும் மற்றப்பூக்களை கவனிக்கும் பொறுப்பில் [பொ]பருப்பாய் இருந்ததால்.

இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது சந்தோஷங்கள் சந்தனமாய் அள்ளிதெளித்தது.
பாசங்கள் பந்திப்போட்டு பரிமாரிக்கொண்டது.
ஆனந்தம் ஆடிப்பாடி அத்தனை நெஞ்சங்களையும் குளுர்வித்தது.

போட்டோக்கள் கிளிக் கிளிக் என பூங்கவிற்கு மேலும் வெளிச்சத்தை உண்டாக்கியது. ஸாதிக்காக்கா ஒவ்வொரு முகமாய் கிளிக்கும்போது பிரியாணி. என்னதிது தனித்தனியா கிளிக் வாண்டடுக்கு வக்கப்போறீங்களாக்கா ந்னு சொன்னது [அக்கா உங்க காதில் விழுந்திச்சா] அப்பாடா ஒரு நல்லகாரியம் செய்துட்டன்

அப்பால ஆஸிக்காக்கு போன் போகனுமுன்னு உடனே பார்சல் பிரிக்கப்பட்டது.
ஜலீக்காவின் வேர்கடலை. முர்தபா. மசால்வடை. யக்கோவ் எனக்கு பிடிக்குமுன்னுதானே அந்த வேர்கடலை;;;மல்லிப்பூவின். பெயர் சூட்டப்படாத புது ரெசிபி. புதுசா டிரை பண்ணினேன். [சரி நீங்களெல்லாம் சேர்ந்து அது ஒரு பேர் வச்சிடுங்களேன். எல்லாம் எடுத்து பரிமாறப்பட்டது. மல்லியின் ரெசிபி ரெம்ப்ப்ப்ப்ப நல்லாயிருக்கு செர்ட்பிக்கட் கிடைத்தது [ஹய்யா காலரை தூக்கிவிட்டுகிறேன்.] வேற வழி சொல்லித்தானே ஆகனுமுன்னு யாரோ முணுமுணுப்பது கேக்குதுங்கோய்ய்ய்ய், சற்று வேலை ஜாஸ்திதான் ஆனால் பரம திருப்தி. என்ன சிறு வருத்தம் அநன்யா சாப்பிடலை ஆத்துல அடிவிழுமுன்னு இல்ல அநன். அநன் வருவது தெரியாது இல்லையின்னா சைவமும் செய்திருப்பேன். சந்தோஷம் மனோம்மா டேஸ்ட் பார்த்தது, ஆஸியாக்கா வேர மார்க் போடுறேன்னு சொல்லிட்டு போயிருக்காக அக்கா கொஞ்சம் பாத்து பரிவிச்சிபோடுங்க..
இதில் ஓரமா சின்ன வெள்ளபிளேட்டில் இருக்குதே அதுதான் பெயர் வைக்காத மல்லியின் ரெசிபி

சாப்பாட்டு பரிமாற்றங்கள் முடிந்துக்கொண்டிருக்கும் வேளையில் முதலில் ஆஸியாக்கா. அப்புறம் அநன்யா. மீண்டும் வந்த மலர் மீண்டும். அப்புறம் மனோம்மா. ஒவ்வொரு ஆளாக கிளம்ப. நாஸியாவுக்கு பழைய தோழி அங்கேவர இரட்டிப்பு மகிழ்ச்சி. நாசியா கிளம்புறேன்னு சொன்னதும் அல்லாஹூ மறந்துடிச்சின்னு. ஏதோ மல்லியினால் முடிந்த சின்ன கிஃப்ட்ன்னு ஆளுக்கொரு குட்டி ஹேண்ட் பேக் கொடுத்தேன். அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன். ஆஸிக்காவிற்கும், மனோம்மாவிற்கும், மலருக்கும், தரவேண்டியது மல்லியிடமே உள்ளது. நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வாய்புள்ளது தந்துடுவேன்..
எல்லாரும் போய்விட மல்லி, ஜலி, ஹுசை, ஸாதி, அவங்க தங்கை, என 5 மலர்கள் மட்டும். அப்பால நம்ம அத்தான் வாந்தாச்சி.பிரியாவிடைகள் சொல்லி,
காரில் ஏறியபோது  என் மச்சானையும் இதுதான்பா நம்மோட உயிர்ன்னு சொல்லி அறிமுகம். அநியாத்துக்கு வெக்கப்பட்டுக்கொண்டே நல்லாயிருக்கீங்களா ந்னு கேட்டு முடிப்பதற்குள் பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி. அப்புறம் ஒருவழியா சமாளித்து சிரிச்சி, பை பை சலாம் சொல்லி விடை பெறும் போது மணி 10 25.


ஒரு சேர இத்தனை முகங்களை கண்டதும் அவர்களிடம் பேசியதும் மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது
அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது
ஆனால் இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
நட்பு பூவின் வாசம்
நாசிவழியே நெடியேறி
நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
நற்மணமாய் கமழ்ந்து மணத்தது.


அகமும் புறமும் ஒருசேர சந்தோஷக்குவியல்கள்
அறிமுகங்களின் அணிவகுப்பால் அரங்கேறியது

திருமுகங்கள் பார்த்த திருப்தியிலே
தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

எழுத்துக்களின் ஈர்ப்பால் கவர்ந்தவர்கள்
எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

நட்பின் வழிமையை நமக்குணர்த்த
நான் நீ என போட்டிப் போட்டனரே!

உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

நிலையில்லா உலகில் நாமிருந்தும்
நல்ல நட்பை
நிலைநிறுத்த முனைவோமே!!

பூக்களின் பெயர்கள்

ஸாதிகாக்கா[எல்லாபுகழும் இறைவனுக்கே]
ஜலில்லாக்கா[சமையல் அட்டகாசங்கள்]
ஆஸியாக்கா[சமைத்து அசத்தலாம்]
மலர் ரக்கா [மலர்]
ஹுசைனம்மா க்கா [ஹுசைனம்மா]
மனோ மேடம் [முத்துச்சிதறல்]
அநன்யா [அநன்யாவின் எண்ண அலைகள்]
நாஸியா [பிரியாணி]

கடைசியாக [மூவோடை மலிக்கா]
எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில், எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! 

டிஸ்கி// ஆனந்த மழையில் நனைந்தில் பிடித்தது ஜுரம். ஆதலால்.
 இதில் எதுவும் சொல்ல விடுபட்டிருந்தால் ஆலினார் நிர்வாகம் பொறுப்பேற்கும் என்பதையும். அதற்கு துணையாக டிரங்கு பெட்டியையும்கேட்கும்படியும். இல்லாத பிரியாணியிடம் பிரியாணிக்கேட்டு தொந்தரவு செய்யும்படியும். அநனிடம் அழ்கு தம்ழை கற்றுதர கேட்டுக்கும்படியும் வலியுருத்துகிறேன்.
போட்டோக்கள் தந்த கூகிளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம் அக்காக்களுக்கு. [அடியே மல்லி சொன்னத மறந்துட்டு அக்கா சொக்கானு எழுயிருக்கே அடிவாங்கப்போறே.] யாரெல்லாம் வாறீங்க அடிக்கன்னு சொல்லிட்டா அடிகொடுக்க வசதியா ஏற்பாடுகள் செய்யப்படும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

உழைப்பாளருக்கு ஊதியம்!


ஏழை உழைப்பாளார்கள்
உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-ஆனால்
ஊதியம் மட்டும்
மிஞ்சுவதேயில்லை!
கூலி கூடுவதுமில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்
மிஞ்சும் காசுக்கு தேய்ந்த
உடலை தே[ற்ற]த்தக்
கூடமுடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-அவர்கள்
உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
ஏக்கம் தெரியும்
எத்தனை உழைத்தபோதும் -இந்த
எலும்புகள் மட்டுமே
எஞ்சி மிஞ்சுகிறதேயென!
கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்
கஷ்டம் தெரியும்போது
கடும் உழைப்பும்
கஷ்டமாக தெரியாதாம்.

உழைப்பவர்களுக்கு
அவர்கள் வியர்வை
உலர்ந்துவிடுவதற்குள்
அவர்களின்
ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


தமிழர்களே! தமிழர்களே!
ஏழை உழைப்பாளிகள் –
கஷ்டப்படுவதை காணும்போது
கண்டிப்பாய் உதவுங்கள்.


வாழ்த்துக்கள் சொல்வதோடு
நின்றுவிடாமல் –அவர்கள்
வாழவும் வழிவகுத்துக் கொடுத்திடவும்
வரிசையில் வந்து நில்லுங்கள்..

டிஸ்கி// நேற்று போடவேண்டிய கவிதை.உழைத்து உழைத்து எங்களுக்காக வாழும் மச்சானுக்கும் ஓய்வு வேண்டுமே! அதான்
கொஞ்சம் ஓய்வெடுக்க [துபையைவிட்டு அவுட்]வெளியில் சென்று விட்டோம்! எப்புடி ஓய்வுகிடைக்கும் காரை யார் ஓட்டுவது!  உழைக்கும் மனிதருக்கு ஓய்வென்பதேது!
மன நிம்மதியிருந்தால் அது ஒன்றே போதும். 
எல்லாம் நன்மைக்கே! // இக்கவிதை தமிழ்குடும்பத்திற்காக எழுதியது../

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது