நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காரணங்களை தேடும் க[இ]ழிவுகள்..




பொதுகக்கூசின்
மூக்கைக்புடுங்கும் நாற்றம்!
சக்கடையில் மேயும்
கரன்பான்களின்  அருவறுப்பு!
 அழுகி ஊறிய குமட்டலோடு
கொல்லைப்புரத்து குப்பை!
கழிவுநீரில் உளன்று
குடலைபிரட்டும் எலிப்புழுக்கை!
இவைகளைமீறிய கலவையுடன்
எச்சிலில் மிச்சம் புணர
இச்சைகளைத்தேடும் வக்ரம்
எல்லாத்திற்கும்
காரணம் சொல்லும் காரணம்,,
இதற்கும் சொல்லும்
அடுப்படி சரியில்லையென
புலக்கடையில் சோறுபொங்கியதென!...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இருப்பைத்தேடி..


சாயங்கால வேளையில்
சாமரம்வீசிய தென்றல் தழுவுகையில்
சஞ்ஜலத்தில் ஆழ்ந்துகிடந்ததை யாரோ
சம்மட்டியால் அடித்ததுபோல் படபடக்க

முன்பாவ செயல்களின் பட்டியல்கள்
முன்னுக்கு பின் முகம்காட்ட
கிளியின் இறகுக்குள்
கிலிப் பிடித்தாட்டியது

கொல்லைப்புரத்து கோவையை
கூரிய அலகால் கொத்துகையில்
அறிந்திருக்கவில்லை அது
ஆகாததென்றும் அருளற்றதென்றும்

உள்மனக்காயங்கள் ஊமையாகி
உணர்வறுத்து உருத்துகையில்
நெக்குருகி நெக்குருகி
நெஞ்சடைக்கும் பிராத்தனைகள்

ஒளிவட்டமொன்று ஒளிந்துகொண்டு
உற்றுப்பார் என்பதுபோல் ஒலிப்பதனால்
ஓடிப்பார்க்கிறது தேடிப்பார்க்கிறது கிளி
ஓச்சல் ஒழிவில்லாது

ஒளிவட்டத்திற்குள்
தனதிறுப்பை இறுத்திக்கொள்ள..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது