காலையும் மாலையும்
கதிரவனே!
காலை கதிரின்
ஒளியாகி
கண்களுக்குள்
குளிர்கின்றாய்!
இருவிழிக்குள்
இறங்கி
இதயத்தை
இழுக்கின்றாய்
மலைச்
சாரலில்
மல்லிகைப்பூ
தொடுக்கின்றாய்
மலையருவியின்
மேல்
மண்டியிடுப்
படுக்கின்றாய்
மாலை
வந்தவுடன்
மெல்ல மெல்ல
மறைகின்றாய்
பள்ளத்தாக்கில்
ஒளிந்துகொண்டு
பதுங்கிப் பதுங்கிப்
பார்கின்றாய்
பாவைகளின்
பார்வைகளுக்கு
பசும்பொன்னாய்
பரவுகின்றாய்
இன்று போய்
நாளை வா
அது உன்
வேலையல்லவா
காலை
மாலை வந்ததும்
சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)