இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை!
இம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை!
இறுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவலிருந்ததே!
அவ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்
”மீண்டும்”
இன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை...
இக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது
நன்றி திண்ணை
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.