நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்மார்த்தமான நன்றிகள்.

என் உணர்வுகள் துடித்து எழுத்துகளாய் வெளியேறியது
அது ஓசையாகி உலகெங்கும்  ஒலித்து
இன்று சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசை பெற்றுள்ளதை நினைத்து
என் மனத்துக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஆனந்த சிறகடித்துப்பறக்கவைக்கிறது.
என் ஆன்மாவுக்குள் இறைநம்பிக்கையின் விசுவாசத்தை வலுப்பெறசெய்கிறது

கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை”யை 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாய் தேர்ந்தெடுத்து மூன்றாம் பரிசை அறிவித்துள்ளது. அதனை மணிமேகலை பிரசுரத்தார்கள் எனக்கு மெயில் வழிசெய்தியாக வாழ்த்துகளையும் அவர்கள் அனுப்பிய கடித்தினையும் இணைத்து அனுப்பினார்கள். அதனைக்கண்டதும் இறைவா புகழனைத்தும் உனக்கே என உள்ளம் ஆனந்ததில் அழுது திழைத்தது.

இணைக்கப்பட கடித்தத்தின் அலைபேசி நம்பருக்கு போன் செய்து கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் தலைவர் மலர்மகன்அய்யா அவர்களிடமும் பேசிவிட்டு என நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்தேன்.
இதோ அவர்கள் அனுப்பிய கடித்தம் உங்கள் பார்வைக்கும் இணைத்துள்ளேன்.

எனது நூலையும் சிறந்த நூலாக தேர்ந்தெடுத்த  கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளைக்கும். எனது நூலை பல பரிசுப்போட்டிகளுக்கு அனுப்பிவரும் மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.
எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.எந்நாளும்..

எனது ஒவ்வொரு எழுத்துகளுக்கும் நீரோடையின் வாசகர்கள் மற்றும் அன்பர்கள். நல்லுள்ளம் கொண்ட அனைவர்களின் ஊக்கம்தான் இதை உங்களோடு பகிர்வத்தில் எனக்கு ஆனந்த மகிழ்ச்சி. இதைத்தொடர்ந்து  உலகெங்கிலும் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாய் இன்னுபல நூல்கள் எழுதவேண்டுமென எண்ணம் தூண்டிவிடப்பட்டுள்ளது. இறைவனின் துணைக்கொண்டு அதனை செயல்படுத்த முயச்சிக்கிறேன்.அதற்க்கு தங்கள் அனைவரின் அன்பென்ற ஒத்துழைப்பும். இறைபிராத்தனைகளும் என்றென்றும் எனக்கும் என் எழுத்துகளுக்கும் வேண்டும்  என வேண்டும்

உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது