நன்றி கூகிள்
உன் ஓரவிழிப்பார்வையில்
என்னுள்ளம்
ஈரமாய் நனைந்தது
நனைந்த நினைவுகளை
நித்தமும் நினைக்கின்றேன்
உன்னை
நினைத்த நாள்முதலாய்
நிலவு சுடுகிறது
நெருப்பு குளிர்கிறது
காகம் மயிலானது
கரும்பு கசப்பானது
கரையில் நிற்கும்போதே
மனம்
கடலில் தத்தளிக்குது
தனியாய் புலம்புகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
நீ இருப்பதாய்
நினைத்துக்கொண்டு
எனக்குள்
நானே சிரிக்கின்றேன்
கார்மேகம் தலையைதொட
வான்மழை மடியில் விழ
வண்ணக்கனவு விழியில் வர
வசமாய் மாட்டிக்கொண்டேன்
உன்வசத்தில்
ஏனிந்த போராட்டம்
எதற்கிந்த ஆர்ப்பாட்டம்
கல்நெஞ்சம் எனக்குள்ளே
கரைந்தோடுது நீரோட்டம்
எனக்குள் நீவந்தாய்
விழிவழியே
மறு உயிர்தந்தாய்
மறந்துவிட வழியில்லை
மரிக்கின்ற நிலைவரையில்
உன் ஓரவிழிப்பார்வை
என் உயிருக்குள் உறைந்தது
வரமா? இல்லை சாபமா?
விடைசொல் விழியே
நீ என் விலாசம்வரும்
வரையில்
என்நெஞ்சம் உன்
நினைவரையில்...
டிஸ்கி// இன்று. இப்படத்திற்கான L k. என்ற கார்த்திக்கின் கவிதை.
பௌர்ணமியை பழிக்கும்
முகமுடையவளே ..
இரண்டாய் இருந்த நம்
இதயம் மணத்தால்
ஒன்றாகியது..
நம் காதலின் தூய்மை
நிலவின் வெண்மையிலும்
தூய்மையானது ..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!