அன்பே!
உனை நினைத்து உருகும்
உன் நினைவோடு இயங்கும்
உனை நினைத்து துடிக்கும்
இதயத்தை கேட்டேன்.
இறைவனிடம்
மறுப்பின்றி
மறுமொழியின்றி
மாண்போடு தந்தான்
மனதிற்கு தாளின்றி.
உனைவிட்டு
ஊர் சென்றபின்னும்
தங்கு தடையின்றி
ஊஞ்சலாடும்
உன் நினைவுவோடு
உலா வருகிறேன்.
உன்னோடும்
உன் நினைவோடும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.