நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பசி"


மானம்
தன்  மானத்தை இழந்து
அவமானத்தை சுமந்து
அறிவுடமையை மடமையாக்கி
அன்னம்கேட்டு கையேந்த வைக்கும்,,,,

அடிவயிற்றில் அமிலம் சுரக்க
அதனனலில் அடிக்கடி
அங்கமெங்கும் வெந்துதுடிக்க
வெட்கம் வேரறுந்து
குலமழிக்கும் நிலையை  தூண்டும்
அச்சம்தன் அச்சானி கழட்டி பிறரை
அச்சுறுத்தியும் பிழைக்கும்...

ஊன் உருகி உயிரைக் கருக்க
உதிரச் செல்கள் தர்ணா நடத்த
வயிறலறி வாய்கண்ணடைக்க
உடல்களைத்து வீதியில்சாய்ந்து
விதி
வீதிஉலா காட்சியாக்கி வருத்தும்...

உயிரின் வேர்காலில்
விகாரத்தின் கொடுக்கொன்று
விடாதுகொத்தி கொத்தி
பசியின் துயரத்திற்கு விசமேற்றும்
வீடற்று தெருக்களிலும் தவக்கோலம் பூட்டும்...

ஆற்றடியை அடியோடு வீழ்த்தி
அங்கத்தை அனுஅனுவாய் மாய்த்து
உணர்வுகளை வெருண்டோடவைத்து
வதன உடமைகளையும்
வேல்வியில் இறக்கி வதைக்கும்...

பணம் பொருளிருந்தும்
பசியில் உண்ணமுடியா நிலைவந்தும்
பட்டினியின் கொடுமைதன்னை
புரிந்தும் புறந்தள்ளி

பசித்துகிடப்போர் அறியாது
தானம்தரா ஈனராய்
ருசியில் புசிப்போரப்போரை
புளிச்சயேப்பத்தின் துர்வாடையோடு
நாளை நரகம் பசியெடுத்து
அகோரியாகி தன் பசியிதனைத் தீர்க்கும்..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எனைவிரும்பி....


நைல் நதியின் நீளத்தை மிஞ்ச
நினைத்த உனதன்பால்
நான் நிலைகுழைந்துதான் போனேன்
நீயற்ற பொழுதுகள்
நீரற்ற நிலமாவதுபோல் உணர்ந்தேன்

உன்போல் யாரும்
என்மீது அக்கரை கொண்டதில்லை
இதுதானோ
இதயமாற்றம் செய்யும் அன்பின் நிலை
அதீத அன்பே ஆன்மாவின் பிள்ளை
அதுவும் மிஞ்சினால் வருமோ சல்லை!

என்னை விரும்பியாய்
எந்நொடியும் இருந்துவிட்டு
எங்கு மறைந்தாய் எனைவிட்டு
எதையும் மறக்குமோ நம்மிதயக்கூடு
எதுவும் அழியுமோ நம்மைவிட்டு

உடல் தடதடக்க
உதிரம் கிறுகிறுக்க
குழைகிறது குமைகிறது
உனைத்தேடும்  கண்கள்!

உயிர் துடி துடிக்க
உணர்வுகள் வெடி வெடிக்க
துடிக்கிறது துவழ்கிறது
உன்னால் களவாடப்பட்ட நெஞ்சம் ...
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது