[facebook. கவிதைகள்.]
என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவிட்டது
இனி
என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய் ஓடியது
என்மனசும் உன்னிலும்
உன்மனதும் என்னிலும்...
டிஸ்கி// என்மனசு அல்லது என் மனது. தலைப்புக்கு கவிதை எழுதச்சொன்னார்கள். நாம ரெண்டையும் இணைச்சு எழுதியிருக்கோம்
சரியா?. சும்மா சொல்லிட்டுப்போங்க எப்புடி இருக்குன்னு. சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.