நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னில் உணர்ந்தவை



காற்றின் ஸ்பரிசம்!
மழையின் குளிர்ச்சி!
இருட்டின் நிசப்தம்!
மல்லிகையின் உரசல்!
பொங்கும் பாலின் நுரை!
மயிலின் நடனம்!
அலையின் சிணுங்கள்!
மானின் மருட்சி!

இவையனைத்தையும் இடைவிடாது
உணர்வுகளில் உணர்கிறேன்
உன்னை நேசித்த நொடியிலிருந்து,,

நெரும்பின் சுவாலை!
இருளின் அச்சம்!
மலை உருலும் சத்தம்!
ரோஜாவின் முள்குத்தல்!
புளித்த பாலின் வாசனை!
சிங்கத்தின் கர்ஜனை!
புயலின் ஆக்ரோஷம்!
கடலின் கொந்தளிப்பு!

இவையனைத்தையும் மொத்தமாய்
உணர்கிறேன் உணர்வுகளில் வழி[லி]யாக
உன்னை மறக்க நினைத்த நொடியிலிருந்து...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது