விரல்கள் பிரித்து
விடைபெறும் பொழுது
விழிகள் நான்கும்
விபத்துக்குள்ளாகியது!
நெற்றி முகர்ந்து
உனக்குள் வலிப்பதை
எனது உதடும்!
எனக்குள் வலிப்பதை
உனது உயிரும்
உணர்ந்து துடித்தது!
நீ அழுதிடக்கூடாதென நானும்
நான் அழுதிடக்கூடாதென நீயும்
நமது மனதுக்குள் பிரத்தானை!
கண்ணீர்களை மறைக்க - நமது
கன்னங்கள் அணிந்தது
பொய் புன்னகைகளை!
தொலைதூரம் போனபின்பும்
திரும்பி பார்த்தலை
எதிர்நோக்கிய - நமது
நிலைகொள்ளாப் பார்வைகள்!
பிரிவின் துயர்களை
தாங்கிக்கொள்ள முடியாமல்
பரிதவிக்கும் உனது முகம்!
தாங்கிக் கொண்டதாய்
பாசாங்குகாட்டி
பதபதைக்கும் எனது மனம்!
பிரிவுகள் நமதுறவை
பலப்படுத்தும் என்ற நம்பிக்கையில்
பிரியாவிடைகள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.